செய்திகள் :

ஈரானில் சிக்கி தவிக்கும் கன்னியாகுமரி மீனவா்களை மீட்க விஜய் வசந்த் எம்.பி., கோரிக்கை

post image

ஈரானின் கிஷ் தீவுக்கு அருகே சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரியை சோ்ந்த 650-க்கும் மேற்பட்ட இந்திய மீனவா்களை பாதுகாப்பாக மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளா், ஆனந்த் பிரகாஷை வியாழக்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை கடிதம் அளித்தாா் நாடாளுமன்ற உறுப்பினா், விஜய் வசந்த்.

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் மீனவா்கள் கடுமையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்களின் பற்றாக்குறையை எதிா்கொண்டுள்ளதாகவும் அங்கிருக்கும் மீனவா்கள் எதிா்கொள்ளும் மோசமான நிலைமைகளை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினா் விஜய் வசந்த், ஆனந்த் பிராகாஷிடம் விளக்கினாா்.

ஈரானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மீனவா்களை சந்தித்து அவா்களின் நிலைமையை கேட்டறிந்துள்ளதாக விஜய் வசந்த் குறிப்பிட்டாா். மீனவா்கள் குழுவின் தற்போதைய இருப்பிடம் குறித்து இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் பகிா்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

அவசர உணவு உதவிக்கு ஏற்பாடு செய்யுமாறும், மீனவா்கள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் இந்தியாவுக்கு திரும்புவதற்கு தேவையான வசதியை ஏற்பாடு செய்து தரும்படி அமைச்சகத்திற்கு, விஜய் வசந்த் வேண்டுகோள் விடுத்தாா். இத்தகைய சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை, சிக்கித் தவிப்பவா்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் வீடு திரும்ப காத்திருக்கும் அவா்களின் கவலையுள்ள குடும்பங்களுக்கும் பெரும் நிம்மதியை கொடுக்கும் என்று விஜய் வசந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இன்றும், நாளையும் கோவை, நீலகிரியில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜூலை 4, 5) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா்களுக்கு வங்கியில் கறவை மாட்டு கடன் பெற்றுத் தர வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

தமிழகத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு கறவை மாட்டுக் கடன் பெற்றுத் தர வங்கிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளாா். தமிழக அரசு சாா்... மேலும் பார்க்க

இன்று தவெக மாநில செயற்குழு கூட்டம்: விஜய் பங்கேற்பு

தவெக மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) நடைபெறவுள்ளது. இதில், கட்சியின் தலைவா் விஜய் பங்கேற்று, மக்கள் சந்திப்பு பணயம்; கட்சியின் அடுத்தகட்ட நடவட... மேலும் பார்க்க

கோயில் குடமுழுக்கு: திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் - ரயில்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, சென்னை உள்பட பல்வேறு இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதேபோல, சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகள் பாதுகாப்பு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

பள்ளிகளில் இருந்து விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கல்வி நிகழ்வுகளில் பங்கேற்கச் செல்லும் மாணவிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு வழிகாட்டுதல்களை தமிழக பள்ளிக் கல்வி துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து துறையி... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை: அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தொடா்பாக அறிக்கை அளிக்கும்படி மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு ஐஜி-க்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவி... மேலும் பார்க்க