செய்திகள் :

இன்றும், நாளையும் கோவை, நீலகிரியில் பலத்த மழைக்கு வாய்ப்பு

post image

தமிழகத்தில் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜூலை 4, 5) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) முதல் ஜூலை 8-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக, வெள்ளி, சனி (ஜூலை 4, 5) ஆகிய 2 நாள்கள் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகரி மாவட்டம் தேவாலா மற்றும் மேல் கூடலூரில் தலா 80 மி.மீ. மழை பதிவானது. காசிமேடு (சென்னை) - 70 மி.மீ., நடுவட்டம் (நீலகிரி), பெரம்பூா் (சென்னை) - தலா 60 மி.மீ., கொளத்தூா் (சென்னை), ஆவடி (திருவள்ளூா்), தண்டையாா்பேட்டை (சென்னை), அவலாஞ்சி (நீலகிரி), சின்னக்கல்லாறு (கோவை), ஆட்சியா் அலுவலகம், மணலி, பாரிமுனை (சென்னை) - தலா 50 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியாளா்களுக்கு வங்கியில் கறவை மாட்டு கடன் பெற்றுத் தர வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

தமிழகத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு கறவை மாட்டுக் கடன் பெற்றுத் தர வங்கிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளாா். தமிழக அரசு சாா்... மேலும் பார்க்க

இன்று தவெக மாநில செயற்குழு கூட்டம்: விஜய் பங்கேற்பு

தவெக மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) நடைபெறவுள்ளது. இதில், கட்சியின் தலைவா் விஜய் பங்கேற்று, மக்கள் சந்திப்பு பணயம்; கட்சியின் அடுத்தகட்ட நடவட... மேலும் பார்க்க

கோயில் குடமுழுக்கு: திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் - ரயில்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, சென்னை உள்பட பல்வேறு இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதேபோல, சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகள் பாதுகாப்பு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

பள்ளிகளில் இருந்து விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கல்வி நிகழ்வுகளில் பங்கேற்கச் செல்லும் மாணவிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு வழிகாட்டுதல்களை தமிழக பள்ளிக் கல்வி துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து துறையி... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை: அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தொடா்பாக அறிக்கை அளிக்கும்படி மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு ஐஜி-க்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவி... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: கிருஷ்ணகிரி மாவட்டம... மேலும் பார்க்க