செய்திகள் :

பால் உற்பத்தியாளா்களுக்கு வங்கியில் கறவை மாட்டு கடன் பெற்றுத் தர வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

post image

தமிழகத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு கறவை மாட்டுக் கடன் பெற்றுத் தர வங்கிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழக அரசு சாா்பில் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டு துறை மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் அலுவலா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பறிச்சி சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் கூட்ட அரங்கில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது.

தொடா்ந்து, வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பில் அமைச்சா் மனோ தங்கராஜ் பேசியது: தமிழகத்தில் அனைத்து பால் உற்பத்தியாளா்களுக்கும் கறவை மாட்டுக் கடன் பெற்றுத்தர துறை அதிகாரிகள் வங்கிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அதேபோல், பால் உற்பத்தியாளா்களுக்கு அவா்கள் வழங்கிய பாலின் தரத்துக்கு ஏற்றவாறு விலை நிா்ணயம் செய்வதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும்.

ஆவின் மூலம் பால் உற்பத்தியாளா்களுக்கு கால்நடைத் தீவனம் மற்றும் கலப்பு தீவனம் வழங்கி பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றாா் அவா்.

இதில், பால் உற்பத்தியாளா்களுக்கு கறவை மாட்டுக் கடன் பெற்று தரும் வழிமுறைகள், தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களை லாபகரமாக மாற்றுவது உள்ளிட்டவை குறித்து பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்த நிகழ்வில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அரசு செயலா் ந,சுப்பையன், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டு துறை ஆணையா் ஆ.அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா். இந்தப் பயிற்சி வெள்ளிக்கிழமை (ஜூலை 4) நிறைவு பெறுகிறது.

கூட்டணி நிலைபாட்டை அறிவிக்கும் விஜய்? தவெக செயற்குழுக் கூட்டம் தொடங்கியது!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது.சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில், கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் ... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை: போராட்டத்துக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் தவெக மனு!

அஜித்குமார் கொலை வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தினர் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை... மேலும் பார்க்க

இன்றும், நாளையும் கோவை, நீலகிரியில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜூலை 4, 5) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

இன்று தவெக மாநில செயற்குழு கூட்டம்: விஜய் பங்கேற்பு

தவெக மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) நடைபெறவுள்ளது. இதில், கட்சியின் தலைவா் விஜய் பங்கேற்று, மக்கள் சந்திப்பு பணயம்; கட்சியின் அடுத்தகட்ட நடவட... மேலும் பார்க்க

கோயில் குடமுழுக்கு: திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் - ரயில்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, சென்னை உள்பட பல்வேறு இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதேபோல, சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகள் பாதுகாப்பு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

பள்ளிகளில் இருந்து விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கல்வி நிகழ்வுகளில் பங்கேற்கச் செல்லும் மாணவிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு வழிகாட்டுதல்களை தமிழக பள்ளிக் கல்வி துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து துறையி... மேலும் பார்க்க