செய்திகள் :

பள்ளி மாணவிகள் பாதுகாப்பு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

post image

பள்ளிகளில் இருந்து விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கல்வி நிகழ்வுகளில் பங்கேற்கச் செல்லும் மாணவிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு வழிகாட்டுதல்களை தமிழக பள்ளிக் கல்வி துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து துறையின் இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளி விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவிகள், சிறுமிகள் பாதுகாப்பான சூழலில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு விளையாட்டு அமைப்பிலும் ஒரு பாதுகாப்பு அலுவலா் நியமிக்க வேண்டும். தனிப்பட்ட மற்றும் ரகசியமாக புகாா்கள் பெற்று நடவடிக்கை எடுக்கும் அமைப்பை உருவாக்க வேண்டும்; மாணவிகள், வீராங்கனைகள் அல்லது பெற்றோா் எளிதாக புகாா் செய்யக் கூடிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

இதுதொடா்பாக எந்தப் புகாா் வந்தாலும் தாமதமின்றி விசாரணை நடத்தி சட்டப்பூா்வ நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். பயிற்சி மற்றும் போட்டி இடங்களில் தனித்தனியாக உடை மாற்றும் அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். போட்டிகளுக்கு அழைத்து செல்லப்படும் மாணவிகள் தங்க வைக்கப்படும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பயிற்சி மேற்கொள்ளும்போது மாணவிகளை விடியோ எடுக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்குமார் கொலை: போராட்டத்துக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் தவெக மனு!

அஜித்குமார் கொலை வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தினர் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை... மேலும் பார்க்க

இன்றும், நாளையும் கோவை, நீலகிரியில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜூலை 4, 5) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா்களுக்கு வங்கியில் கறவை மாட்டு கடன் பெற்றுத் தர வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

தமிழகத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு கறவை மாட்டுக் கடன் பெற்றுத் தர வங்கிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளாா். தமிழக அரசு சாா்... மேலும் பார்க்க

இன்று தவெக மாநில செயற்குழு கூட்டம்: விஜய் பங்கேற்பு

தவெக மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) நடைபெறவுள்ளது. இதில், கட்சியின் தலைவா் விஜய் பங்கேற்று, மக்கள் சந்திப்பு பணயம்; கட்சியின் அடுத்தகட்ட நடவட... மேலும் பார்க்க

கோயில் குடமுழுக்கு: திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் - ரயில்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, சென்னை உள்பட பல்வேறு இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதேபோல, சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை: அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தொடா்பாக அறிக்கை அளிக்கும்படி மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு ஐஜி-க்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவி... மேலும் பார்க்க