செய்திகள் :

140 கோடி மக்களில் ஒருவராக... கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை!

post image

உலகின் வளர்ச்சிக்கு உந்து விசையாக இந்தியா இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

பிரிக்ஸ் மாநாட்டையொட்டி பிரான்ஸ் செல்வதற்கு முன்னதாக 8 நாள்களில் 5 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், கானா, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

முதல் நாளான நேற்று(ஜூலை 2) கானா தலைநகர் அக்ராவுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் கானாவின் பாரம்பரிய முறைப்படி 21 துப்பாக்கிகள் ஏந்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. கானா அதிபர் ஜான் திராமணி மஹாமா பிரதமர் நரேந்திர மோடியை கட்டியணைத்து வரவேற்றார்.

பிரதமராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக கானாவுக்குச் செல்லும் மோடி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு கானாவுக்குச் செல்லும் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவருக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இன்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “மரியாதைக்குரிய கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதில் இருப்பது மிகவும் பெருமைக்குரியது. ஜனநாயக உணர்வை வெளிப்படுத்தும் கானாவிலிருப்பதில் நான் மிகவும் பாக்கியசாலி.

உலகின் 140 கோடி மக்கள் வாழும் இந்தியாவிலிருந்து ஒரு பிரதிநிதியாக நல்லெண்ணம் மற்றும் வாழ்த்துகளை உங்களுக்காக கொண்டுவந்திருக்கிறேன். கானா தங்கத்தின் நாடு. தங்கம் உங்கள் மண்ணுக்கு கீழ் மட்டும் இல்லை. உங்களது இதயத்திலும் இருக்கிறது.

ஆருயிர் நண்பர் மஹாமாவின் கைகளில் இருந்து நாட்டின் உயரிய விருது அளித்த கானாவிற்கு, 140 கோடி மக்கள் கொண்ட இந்தியாவின் சார்பில் நன்றி.

2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற மக்கள் முடிவுசெய்திருக்கின்றனர்” என்றார்.

PM Narendra Modi Addressing the Parliament of the Republic of Ghana

இதையும் படிக்க... ஜூலை 19ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்! - மத்திய அரசு

உக்ரைன் எல்லையில் ரஷிய கடற்படையின் துணைத் தலைவர் கொலை!

உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள ரஷியாவின் குர்ஸ்க் மாகாணத்தில் அந்நாட்டு கடற்படையின் துணைத் தலைவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உக்ரைனுடனான போரில், அந்நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ரஷியாவின் மேற... மேலும் பார்க்க

சிகாகோ இரவு விடுதியில் சரமாரி துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி!

சிகாகோ இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இந்தக் கொடூரத் தாக்குதலில் 14-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேற்கு சிகாகோ அவென்யூவின் 300-வது பிளாக்கில் உ... மேலும் பார்க்க

டிரம்ப்பின் செலவுக் குறைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு! ஆனால் இந்தியாவுக்கு பயன்!

அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் செலவு மசோதாவால் பல்வேறு நாட்டினர் பயன்பெறவுள்ளனர்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு அறிமுகப்படுத்திய மசோதாவால் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாட்டினரும் பயனடை... மேலும் பார்க்க

நைல் நதியின் மீதான சர்ச்சை அணையின் கட்டுமானம் நிறைவு! எத்தியோப்பியா அறிவிப்பு!

எகிப்து அரசின் எதிர்ப்பை மீறி நைல் நதியின் மீதான சர்ச்சைக்குரிய நீர்மின் அணையைக் கட்டிமுடித்துள்ளதாக, எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அறிவித்துள்ளார். எத்தியோப்பியா நாட்டில் நைல் நதியின் மீது, மின்சார... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: உதவாத சீன ஆயுதங்களால் அமெரிக்காவிடம் தஞ்சம் புகும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் விமானப் படையை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க அதிகாரிகளுடன் பாகிஸ்தான் விவாதித்துள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் பெரிதும் த... மேலும் பார்க்க

யேமன்: ஹவுதிகளின் தாக்குதலில் ஒருவர் பலி! 14 பேர் படுகாயம்!

யேமன் நாட்டின் தையிஸ் மாகாணத்திலுள்ள எரிபொருள் நிலையத்தின் மீதான ஹவுதிகளின் ட்ரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். தென்மேற்கு மாகாணமான தையிஸில், கதாசி எரிபொருள் நிலைய... மேலும் பார்க்க