செய்திகள் :

அஜித்குமார் விடியோ: முக்கிய சாட்சிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

post image

திருப்புவனத்தில் காவலாளி அஜித்குமாரை போலீஸார் தாக்கும் விடியோவை எடுத்த சக்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார், காவல் துறையினர் தாக்கியதில் பலியாகினார்.

இந்த விவகாரத்தில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அஜித்குமாரை காவலர்கள் தாக்கும் விடியோவை கோயில் ஊழியர் சக்தீஸ்வரன் எடுத்து வெளியிட்டார். இந்த வழக்கில், முக்கிய சாட்சியாக அந்த விடியோ அமைந்துள்ளது.

நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரான சக்தீஸ்வரன், காவலர்கள் அஜித்குமாரைத் தாக்கியது குறித்து வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கின் பிரதான சாட்சியாக சக்தீஸ்வரன் உள்ளார்.

இவர், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாதுகாப்பு கோரியும் டிஜிபிக்கு சக்தீஸ்வரன் கடிதம் எழுதினார்.

இந்த நிலையில், காவலாளி அஜித்குமாரை போலீஸார் தாக்கும் விடியோவை எடுத்த சக்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்க தென்மண்டல ஐஜியின் உத்தரவின்பேரின் 2 காவலர்கள் ராமநாதபுரத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Armed police officers have been deployed to protect Saktheeswaran, who filmed a video of police assaulting security guard Ajith Kumar in Thiruppuvanam.

இதையும் படிக்க: தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?

ஈரானில் சிக்கி தவிக்கும் கன்னியாகுமரி மீனவா்களை மீட்க விஜய் வசந்த் எம்.பி., கோரிக்கை

ஈரானின் கிஷ் தீவுக்கு அருகே சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரியை சோ்ந்த 650-க்கும் மேற்பட்ட இந்திய மீனவா்களை பாதுகாப்பாக மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளா... மேலும் பார்க்க

திருப்புவனம் அஜித்குமாருக்கு கஞ்சா அளித்து கொடூரத் தாக்குதல்! மூளையில் ரத்தக் கசிவு, சிகரெட் சூடு!

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் மருத்துவப் பரிசோதனை வெளியாகியுள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக... மேலும் பார்க்க

பிரசார இயக்கத்தில் காபி-லாம் தராங்களா.? - விடியோ அழைப்பில் முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கத்தில் திருப்பூர் மாவட்டச் செயலர் ஒருவருடன் முதல்வர் ஸ்டாலின் கலகலப்பாக பேசிய விடியோ வெளியாகியுள்ளது.திமுகவின் திட்டங்களையும் சாதனைகளையும் மக்களிடம் எடுத்துரைத்து, 2026 ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை! - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவின் திட்டங்களையும் சாதனைகளையும் மக்களிடம் எடுத்துரைத்து, 2026 பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொள்ளும் விதமாக ‘ஓரணிய... மேலும் பார்க்க

ஒரே நாளில் இரு மாணவர்கள் கொலை? திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

ஒரே நாளில் சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரியில் 13 வயதான ரோகித் ... மேலும் பார்க்க

போதைப் பொருள் விவகாரம்: ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கொகைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இர... மேலும் பார்க்க