செய்திகள் :

பேட்டிங்கில் 83 ரன்கள், பந்துவீச்சில் 3 விக்கெட்டுகள்: ஆட்ட நாயகன் அஸ்வின்!

post image

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ஆர். அஸ்வின் ஆல்ரவுண்டராக அசத்தியதால் எலிமினேட்டரில் ஆட்டநாயகன் விருது வென்றார்.

டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்படும் ஆர். அஸ்வின் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார்.

திருச்சி அணி 140/9 ரன்கள் எடுக்க, திண்டுக்கல் அணி 16.4 ஓவர்களில் 143/4 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில், பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளும் பேட்டிங்கில் 83 ரன்களும் எடுத்து அசத்திய அஸ்வின் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

அஸ்வினின் இந்த ஆட்டத்துக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற அஸ்வின் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு கடந்த சீசனில் விளையாடினார். அதில் சுமாராகவே செயல்பட்டார். அதனால், விமர்சனத்துக்கு உள்ளானதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரில் அற்புதமாக விளையாடி வருகிறார்.

அடுத்ததாக அஸ்வினின் திண்டுக்கல் அணி குவாலிஃபயர் 2 போட்டியில் ஜூலை 4ஆம் தேதியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸுடன் மோதவிருக்கிறது.

Dindigul Dragons captain R. Ashwin won the Man of the Match award in the Eliminator for his impressive all-round performance.

ஷுப்மன் கில் உலகத் தரத்திலான வீரர்: முன்னாள் இங்கிலாந்து வீரர்

ஷுப்மன் கில் உலகத் தரத்திலான வீரர் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் பாராட்டியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 2) தொடங்கிய... மேலும் பார்க்க

இந்திய அணிக்காக வரலாற்றுச் சாதனை படைத்த சூர்யவன்ஷி..!

யு-19 ஒருநாள் கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷி வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளார்.19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 ஒருநாள், 2 டெஸ்ட் போடிகளில் விளையாட இங்கிலாந்துக்குச்... மேலும் பார்க்க

7 நாள்கள் ஓய்வுக்குப் பிறகும் பும்ரா விளையாடாதது அதிர்ச்சி..! ரவி சாஸ்திரி விமர்சனம்!

இந்தியாவின் முன்னாள் வீரர், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பும்ரா விளையாடாதது ஆச்சரியம் அளிப்பதாகக் கூறியுள்ளார். பர்மிங்ஹாமில் நேற்று (ஜூலை 2) தொடங்கிய 2-ஆவது டெஸ்... மேலும் பார்க்க

டிஎன்பிஎல்: எலிமினேட்டரில் திண்டுக்கல் டிராகன்ஸ் வெல்ல 141 ரன்கள் இலக்கு!

டிஎன்பிஎல் எலிமினேட்டர் போட்டியில் திண்டுக்கல் அணி வெற்றிபெற 141 ரன்களை இலக்காக திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி நிர்ணயித்துள்ளது. திண்டுக்கல்லில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் ... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசல்: ஆர்சிபியிடம் விளக்கம் கேட்டு பிசிசிஐ ஒழுங்காணையம் நோட்டீஸ்!

ஐபிஎல் 2025 கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு பிசிசிஐ ஒழுங்காணையம், நெறிமுறை அதிகாரி கூட்டநெரிசலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி... மேலும் பார்க்க

மதிய உணவு இடைவேளை: இந்திய அணி அதிரடி, ஜெய்ஸ்வால் அரைசதம்!

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 98 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்ச... மேலும் பார்க்க