செய்திகள் :

7 நாள்கள் ஓய்வுக்குப் பிறகும் பும்ரா விளையாடாதது அதிர்ச்சி..! ரவி சாஸ்திரி விமர்சனம்!

post image

இந்தியாவின் முன்னாள் வீரர், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பும்ரா விளையாடாதது ஆச்சரியம் அளிப்பதாகக் கூறியுள்ளார்.

பர்மிங்ஹாமில் நேற்று (ஜூலை 2) தொடங்கிய 2-ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதல்நாள் முடிவில் இந்திய அணி 310/5 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் பும்ரா இல்லாமல் களமிறங்கியது மிகுந்த விமர்சனத்துக்குள் உள்ளாகி வருகிறது.

ஏற்கெனவே, முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வியுற்றதால் இந்தியாவின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் டிவியில் பேசியதாவது:

உலகின் சிறந்த பந்துவீச்சாளரை இப்படி செய்வதா?

இந்தத் தொடரில் இந்தப் போட்டி மிக முக்கியமானது. ஏற்கெனவே, இந்திய அணி நியூசிலாந்திடம் 3-0 எனவும் ஆஸ்திரேலியாவிடம் 3-1 எனவும் தோல்வியுற்றது.

இங்கிலாந்திடம் முதல் போட்டியை தோற்ற பிறகு வெல்வதற்குதான் முயற்சிக்க வேண்டும்.

உலகின் சிறந்த பந்திவீச்சாளரான பும்ராவை 7 நாள்கள் ஓய்வுக்குப் பிறகும் அணியில் விளையாட வைக்காதது நம்புவதற்கே கடினமாக இருக்கிறது.

இந்தப் போட்டியில் வென்று 1-1ஆன பிறகு லார்ட்ஸ் போட்டியில் வேண்டுமானால் ஓய்வு எடுத்திருக்கலாம். யார் போட்டியில் விளையாட வேண்டுமென்பது கேப்டன், பயிற்சியாளர் கையில்தான் இருக்கிறது என்றார்.

Former India head coach Ravi Shastri expressed disbelief at India's decision to rest a fully fit Jasprit Bumrah from the second Test against England, asserting that the pace spearhead should not have been given the option to sit out of a crucial game.

ஷுப்மன் கில் உலகத் தரத்திலான வீரர்: முன்னாள் இங்கிலாந்து வீரர்

ஷுப்மன் கில் உலகத் தரத்திலான வீரர் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் பாராட்டியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 2) தொடங்கிய... மேலும் பார்க்க

இந்திய அணிக்காக வரலாற்றுச் சாதனை படைத்த சூர்யவன்ஷி..!

யு-19 ஒருநாள் கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷி வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளார்.19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 ஒருநாள், 2 டெஸ்ட் போடிகளில் விளையாட இங்கிலாந்துக்குச்... மேலும் பார்க்க

பேட்டிங்கில் 83 ரன்கள், பந்துவீச்சில் 3 விக்கெட்டுகள்: ஆட்ட நாயகன் அஸ்வின்!

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ஆர். அஸ்வின் ஆல்ரவுண்டராக அசத்தியதால் எலிமினேட்டரில் ஆட்டநாயகன் விருது வென்றார். டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்படும் ஆர். அஸ்வின்... மேலும் பார்க்க

டிஎன்பிஎல்: எலிமினேட்டரில் திண்டுக்கல் டிராகன்ஸ் வெல்ல 141 ரன்கள் இலக்கு!

டிஎன்பிஎல் எலிமினேட்டர் போட்டியில் திண்டுக்கல் அணி வெற்றிபெற 141 ரன்களை இலக்காக திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி நிர்ணயித்துள்ளது. திண்டுக்கல்லில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் ... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசல்: ஆர்சிபியிடம் விளக்கம் கேட்டு பிசிசிஐ ஒழுங்காணையம் நோட்டீஸ்!

ஐபிஎல் 2025 கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு பிசிசிஐ ஒழுங்காணையம், நெறிமுறை அதிகாரி கூட்டநெரிசலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி... மேலும் பார்க்க

மதிய உணவு இடைவேளை: இந்திய அணி அதிரடி, ஜெய்ஸ்வால் அரைசதம்!

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 98 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்ச... மேலும் பார்க்க