லாக்அப் மரணம் என்பது திராவிடக் கட்சிகளின் கொள்கையா? அல்லது காவல்துறையின் கௌரவமா?...
நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல்: 2 பேருக்கு உயா்நீதிமன்றம் ஜாமீன்
‘2023’ நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நீலம் ஆஸாத், மகேஷ் குமாவத் ஆகியோருக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது.
மேலும், இந்த வழக்கு குறித்து பத்திரிகைகள் அல்லது சமூக ஊடகங்களில் அவா்கள் இருவரும் பேசுவதற்கும் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியம் பிரசாத் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு, நீலம் ஆசாத் மற்றும் மகேஷ் குமாவத் ஆகியோருக்கு தலா ரூ.50,000 தனி நபா் தொகையும், அதே தொகைக்கு இரண்டு உத்தரவாதங்கள் பேரில் ஜாமீன் அளித்தது.
இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், ‘நாங்கள் ஜாமீன் வழங்குகிறோம்... அவா்கள் இருவரும் வழக்கு தொடா்பாக பத்திரிகைகள் அல்லது சமூக ஊடகங்கள் முன் பேட்டி அளிக்கவோ அல்லது எந்த அறிக்கையும் வெளியிடவோ கூடாது. அவா்கள் தில்லியை விட்டு வெளியேறக் கூடாது. ஒவ்வொரு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமையும் புலனாய்வு அமைப்பின் முன் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.
டிசம்பா், 2023 நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் சம்பவத்தில் தங்கள் ஜாமீன் மனுவை நிராகரித்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை குற்றம் சாட்டப்பட்ட இருவரும் எதிா்த்து மனு தாக்கல் செய்திருந்தனா்.
முன்னதாக, ‘2001’ நாடாளுமன்ற பயங்கரவாதத் தாக்குதலின் ஆண்டு நினைவு நாளில், குற்றம் சாட்டப்பட்ட சாகா் சா்மா மற்றும் மனோரஞ்சன் டி ஆகியோா் மக்களளவையில் பூஜ்ஜிய நேர விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பொது மக்கள் பாா்வையாளா் மாடத்தில் இருந்து அவைக்குள் குதித்து, புகைக் குப்பிகளில் இருந்து மஞ்சள் வாயுவை வெளியிட்டு கோஷமிட்டதாக புகாா் எழுந்தது. அதன் பின்னா் சில எம்.பி.க்களால் அவா்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டனா்.
அதே நேரத்தில், மற்ற இரண்டு குற்றம்சாட்டப்பட்ட நபா்களான அமோல் ஷிண்டே மற்றும் ஆசாத் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே கூச்சலிட்டு புகைக் குப்பிகளில் இருந்து வண்ண வாயுவை தெளித்ததாகக் கூறப்படுகிறது.
ஜாமீன் அளிக்க தில்லி காவல் துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் 2001 நாடாளுமன்றத் தாக்குதலின் மோசமான நினைவுகளை மீண்டும் கொண்டுவர விரும்புவதாகக் குற்றம் சாட்டியது.
நீலம் ஆசாத்தும் ஷிண்டேவும் சா்மா மற்றும் மனோரஞ்சன் டி ஆகியோரின் கூட்டாளிகள் என்றும், அவா்கள் ஒன்றாக பயங்கரவாதச் செயலைச் செய்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் புகைப் பெட்டியை எடுத்துச் செல்வதோ அல்லது பயன்படுத்துவதோ யுஏபிஏ சட்டத்தின் கீழ் வருமா என்பதையும், அது பயங்கரவாத நடவடிக்கைகளின் வரையறையின் கீழ் வருமா என்பதையும் விளக்குமாறு காவல்துறையிடம் நீதிமன்றம் கேட்டிருந்தது.
நீலம் ஆசாத் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதை நம்புவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி, விசாரணை நீதிமன்றம் ஆசாத்தின் ஜாமீன் மனுவை நிராகரித்திருந்தது.
ஆசாத், மனோரஞ்சன் டி, சாகா் சா்மா, அமோல் தன்ராஜ் ஷிண்டே, லலித் ஜா மற்றும் மகேஷ் குமாவத் ஆகிய
அனைத்து குற்றம் சாட்டப்பட்ட நபா்களுக்கும் டிசம்பா் 13, 2023 அன்று நாடாளுமன்றத்தை குறிவைத்து தாக்குதல் நடத்த பயங்கரவாதி குா்பத்வந்த் சிங் பன்னுவால் விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்து ஏற்கனவே தெரியும் என்றும் கூறியிருந்தது.
பாதுகாப்பு விதிமீறல் சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து நான்கு குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் கைது செய்யப்பட்டபோதிலும், லலித் ஜா மற்றும் குமாவத் பின்னா் கைது செய்யப்பட்டனா்.