செய்திகள் :

இபிஎஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு!

post image

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ’மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

முதல்கட்டமாக தொகுதிவாரியாக ஜூலை 7 ஆம் தேதி முதல் ஜூலை 21 ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இபிஎஸ், கோவையில் தொடங்கி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பயணத்தை நிறைவு செய்கிறார்.

ஜூலை 7 அம் தேதி கோவை புறநகர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் சுற்றுப்பயணத்தின் தொடக்கவிழா நடைபெறவுள்ள நிலையில், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடக்க விழாவில் நயினார் நாகேந்திரன் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்தந்த தொகுதிகளுக்கு இபிஎஸ் செல்லும்போது அப்பகுதியின் பாஜக மூத்த நிர்வாகிகளும் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுகவினர் பிரசாரத்தை தொடங்கியிருக்கும் நிலையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தனது சுற்றுப்பயணத்தை தஞ்சாவூரில் இருந்து தொடங்கவுள்ளதால் தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இதையும் படிக்க : உயிருக்கு அச்சுறுத்தல்: அஜித்குமார் வழக்கின் முக்கிய சாட்சி புகார்!

BJP state president Nainar Nagendran has been invited to attend the inaugural ceremony of AIADMK General Secretary Edappadi Palaniswami's upcoming election campaign.

அஜித்குமார் விடியோ: முக்கிய சாட்சிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

திருப்புவனத்தில் காவலாளி அஜித்குமாரை போலீஸார் தாக்கும் விடியோவை எடுத்த சக்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சிக்கு புதிய மாமன்றக் கூடம்! டெண்டர் வெளியீடு

சென்னை மாநகராட்சியில் வார்டுகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் இடநெருக்கடியைச் சமாளிக்க புதிய மாமன்றக் கூடம் அமைக்கப்படவுள்ளது. சென்னை மாநகராட்சியின் வார்டுகள் எண்ணிக்கை 300 ஆக உயர்வதால் மாநகராட்சியின் மாமன்... மேலும் பார்க்க

அஜித்குமார் வழக்கு: மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை காணாமல் போன... மேலும் பார்க்க

நீலகிரி, கோவையில் ஜூலை 5 வரை கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நீலகிரி கோவையில் ஜூலை 5 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,ஜூலை 3 முதல் 5 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை ... மேலும் பார்க்க

பரமசிவன் பாத்திமா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

பரமசிவன் பாத்திமா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் விமல் நடிப்பில் லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான திரைப்படம் பரமசிவன் பாத்திமா. இப்படம் த... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு: வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும் முதல்வர்!

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் வீடுவீடாகச் சென்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களைச் சந்தித்து வருகிறார்.திராவிட முன்னேற்றக் கழக அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் மக்களிடம் எடுத்துரைத்து, 2026 ... மேலும் பார்க்க