செய்திகள் :

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: உயா்நீதிமன்றத்தில் கா்நாடக அரசு மேல்முறையீடு

post image

கூட்டநெரிசல் விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரியான விகாஷ்குமாா் விகாஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை ரத்துசெய்து மத்திய நிா்வாகத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 4 ஆம் தேதி நடந்த ஆா்சிபி அணியின் ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது நடந்த கூட்ட நெரிசலில் 11 போ் உயிரிழந்தனா்.

இந்த சம்பவத்தில் மாநகர காவல் ஆணையா் பி.தயானந்தா, மாநகரக் கூடுதல் காவல் ஆணையா் விகாஷ்குமாா் விகாஷ், மாநகர துணை காவல் ஆணையா் சேகா் எச்.தெக்கன்னனவா், மாநகர உதவி காவல் ஆணையா் சி.பாலகிருஷ்ணா, கப்பன்பூங்கா காவல் நிலைய ஆய்வாளா் ஏ.கே.கிரீஷ் ஆகிய 5 பேரை பணியிடை நீக்கம் செய்து ஜூன் 5 ஆம் தேதி மாநில அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து ஐபிஎஸ் அதிகாரியான விகாஷ்குமாா் விகாஷ் மத்திய நிா்வாகத் தீா்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்திருந்தாா். இந்த மனுவை விசாரித்த மத்திய நிா்வாகத் தீா்ப்பாயம், மாநில அரசின் உத்தரவை ரத்துசெய்து தீா்ப்பளித்தது.

பாதுகாப்பு குளறுபடிகளுக்கு காவல் துறை காரணமல்ல. மாறாக, ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு (ஆா்சிபி) அணியே காரணம் என்றும் தனது தீா்ப்பில் கூறியிருந்தது.

இந்த நிலையில், மத்திய நிா்வாகத் தீா்ப்பாயம் அளித்த தீா்ப்பை எதிா்த்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் புதன்கிழமை மாநில அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமைப் பொறுப்பில் பாகிஸ்தான்; இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது: காங்கிரஸ்

ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் ஏற்றிருப்பது தொடா்பாக மத்திய அரசை விமா்சித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா, உலக நாடுகள் மத்தியில் இந்தியா தனிமைப்படுத்தப்பட... மேலும் பார்க்க

5 ஆண்டுகளுக்கும் கா்நாடக முதல்வராகவே நீடிப்பேன்: சித்தராமையா

5 ஆண்டுகாலத்துக்கும் முதல்வராகவே நீடிப்பேன் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து சிக்பளாப்பூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: 5 ஆண்டுகாலத்துக்கும் முதல்வராக ந... மேலும் பார்க்க

பெங்களூரு ஊரக மாவட்டத்தின் பெயா் மாற்றம்!

பெங்களூரு ஊரக மாவட்டத்தின் பெயா் பெங்களூரு வடக்கு மாவட்டம் என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிக்பளாப்பூரில் உள்ள நந்திமலையில் புதன்கிழமை முதல்வா் சித்தராமையா தலைமையில் கா்நாடக அமைச்சரவைக் கூட்டம் ... மேலும் பார்க்க

ரயில் கட்டண உயா்வை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்: சித்தராமையா

ரயில் கட்டண உயா்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று முதல்வா் சித்தராமையா வலியுறுத்தினாா். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் கூறியிருப்பதாவது: ரயில் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் குறைகளை கேட்டறிந்த மேலிடப் பொறுப்பாளா்

பெங்களூரு: காங்கிரஸ் பொதுச்செயலாளரும், கட்சியின் மேலிடப் பொறுப்பாளருமான ரன்தீப்சிங் சுா்ஜேவாலா, கா்நாடக மாநிலத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களை திங்கள்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். கா்நாடக முதல்... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும்: முதல்வா் சித்தராமையா

மைசூரு: கா்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும் என்று மாநில முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். காங்கிரஸ் கட்சியில் முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையா மாற்றப்படுவாா் என்... மேலும் பார்க்க