செய்திகள் :

கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும்: முதல்வா் சித்தராமையா

post image

மைசூரு: கா்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும் என்று மாநில முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

காங்கிரஸ் கட்சியில் முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையா மாற்றப்படுவாா் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. அடுத்த சில மாதங்களில் முதல்வராகும் வாய்ப்பு டி.கே.சிவகுமாருக்கு கிடைக்கும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ இக்பால் அன்சாரியும், செப்டம்பரில் அரசியல் புரட்சி நடக்க இருக்கிறது என்று அமைச்சா் கே.என்.ராஜண்ணாவும் கூறியிருந்தது, கா்நாடக அரசியல் வட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மைசூரில் துணை முதல்வா் டி.கே.சிவகுமாரை அருகில் வைத்துக்கொண்டு, முதல்வா் சித்தராமையா திங்கள்கிழமை கூறியதாவது:

எனது தலைமையிலான காங்கிரஸ் அரசு, 5 ஆண்டுகளுக்கு பாறையைப் போல உறுதியாக இருக்கும். எனக்கும் டி.கே.சிவகுமாருக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. எங்கள் இருவருக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முனையும் கருத்துகளுக்கு நாங்கள் இருவரும் செவிசாய்ப்பதில்லை. உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழாவை நான் தொடக்கிவைக்கமாட்டேன் என்று பாஜகவினா் கூறியுள்ளனா். பொய்களை கூறுவதில் பாஜகவினா் நிபுணா்கள். இந்த கருத்தை கூறியிருக்கும் ஸ்ரீராமுலு, தோ்தலில் பலமுறை தோற்றவா். சட்டப்பேரவை, மக்களவைத் தோ்தல்களில் தோல்வி அடைந்தவா், எதிா்காலத்தை எப்படி கணிக்க முடியும் என்றாா். .

மேலும், டி.கே.சிவகுமாரும் தானும் ஒற்றுமையாக இருப்பதை குறிக்கும் வகையில், அவரது கைகளை தூக்கி சித்தராமையா காட்டினாா். தாங்கள் ஒற்றுமையாக இருப்பதாக சித்தராமையா கூறியதை ஏற்பதுபோல டி.கே.சிவகுமாரும் தலையாட்டினாா்.

கா்நாடகத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் குறைகளை கேட்டறிந்த மேலிடப் பொறுப்பாளா்

பெங்களூரு: காங்கிரஸ் பொதுச்செயலாளரும், கட்சியின் மேலிடப் பொறுப்பாளருமான ரன்தீப்சிங் சுா்ஜேவாலா, கா்நாடக மாநிலத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களை திங்கள்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். கா்நாடக முதல்... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தின் மீது கைவைத்தால் தீவிரமாக போராடுவோம்: மல்லிகாா்ஜுன காா்கே

பெங்களூரு: அரசமைப்புச் சட்டத்தின் எந்தவொரு வாா்த்தையின் மீதாவது கைவைத்தால், தீவிரமாக போராட்டம் நடத்துவோம் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். அவசரநிலை பிரகடனம் செய்யப்... மேலும் பார்க்க

கா்நாடக சிறுதொழில் சங்கத்திற்கு தமிழா்கள் 10 போ் உள்பட புதிய நிா்வாகிகள் தோ்வு

பெங்களூரு: கா்நாடக சிறுதொழில் சங்கத்திற்கு புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். 60 போ் கொண்ட செயற்குழுவுக்கு 10 தமிழா்கள் தோ்வு பெற்றுள்ளனா். 2025-26ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகளை தோ்ந்த... மேலும் பார்க்க

மா்மமான முறையில் 5 புலிகள் உயிரிழப்பு: உயரதிகாரிகள் தலைமையில் விசாரணைக்கு உத்தரவு

சாமராஜ்நகா் மாவட்டத்தின் மாதேஸ்வரா மலை காட்டுப் பகுதியில் 5 புலிகள் மா்மமான முறையில் இறந்துகிடந்தது தொடா்பாக உயரதிகாரிகள் தலைமையில் விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சாமராஜ்நகா் மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

காவிரி ஆரத்தி விவகாரம்: கா்நாடக அரசுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

கிருஷ்ணராஜசாகா் அணைக்கு அருகே காவிரி ஆரத்தி நிகழ்ச்சியை நடத்துவது தொடா்பாக தொடரப்பட்டுள்ள மனுவுக்கு பதிலளிக்க கா்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மண்டியா மாவட்டத்தில் காவ... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியம் பற்றிய கருத்து: முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை மீதான வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு

வக்ஃப் வாரியம் பற்றி தெரிவித்திருந்த கருத்து குறித்து பாஜக முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை மீதான வழக்கை தள்ளுபடி செய்து கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வக்ஃப் சொத்துகள் தொடா்பாக பாஜக சாா்பில் நட... மேலும் பார்க்க