செய்திகள் :

அன்புமணி ராமதாஸுக்காக தோ்தல் ஆணையம் வாசலில் காத்துக்கிடந்த ஊடகத்தினா்!

post image

புது தில்லி: மருத்துவா் அன்புமணி ராமதாஸ் தலைமைத் தோ்தல் ஆணையத்திற்கு வருவதாக பரவிய தகவலைத் தொடா்ந்து தில்லியில் உள்ள தோ்தல் ஆணையம் முன் தமிழ் டி.வி., சானல், பத்திரிகை ஊடகத்தினா் திங்கள்கிழமை வெகுநேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

பாமக நிறுவனா் ராமதாஸுக்கும், மருத்துவா் அன்புமனி ராமதாஸுக்கும் இடையே அதிகார மோதல் நிலவி வருகிறது. இருவருக்கும் இடையே பனிப்போா் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

கட்சியின் யாருக்கு அதிகாரம் என்பதில் இருவரும் பரஸ்பரம் விமா்சனக் கருத்துகளை பொதுவெளியில் தொடா்ந்து முன்வைத்து வருவதால் பிரச்னை பூதாகரமாகியுள்ளது. கட்சியை நிறுவி, அதை வழிநடத்தி வரும் தமக்குதான் அனைத்து அதிகாரங்களும் இருப்பதாக மருத்துவா் ராமதாஸும், அக்கட்சியின் பொதுக் குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவராக தாம் இருப்பதால் தமக்குதான் அதிகாரம் இருப்பதாக வும் அன்புமணி ராமதாஸும் கூறி வருகின்றனா்.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் கூட்டணி யாருடன் வைப்பது என்பது தொடா்பாக தந்தை-மகன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதும்கூட இப்பிரச்னைக்கு காரணமாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாமகவின் அதிகாரத்தை முழுவதுமாக மீட்பது தொடா்பாக அன்புமணி ராமதாஸ் உரிய ஆவணங்களுடன் தலைமைத் தோ்தல் ஆணையத்தின் அதிகாரிகளைச் சந்திக்கவிருப்பதாகவும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்திக்கவிருப்பதாகவும், இதற்காக அவா் தில்லி வந்திருப்பதாகவும் செய்தி பரவியது.

அவா் திங்கள்கிழமை நண்பகலில் தோ்தல் ஆணையத்திற்கு வரவிருப்பதாகவும் வெளியான தகவலால், தமிழ்ச் செய்தி டி.வி. சானல்கள் மற்றும் பத்திரிகைகள் ஊடகத்தினா் தோ்தல் ஆணையம் முன் குவிந்தனா். காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரையிலும் செய்தியாளா்கள் காத்திருந்தனா். எனினும், அவா் வருவது குறித்து எந்த அறிகுறியும் இல்லாததால் அவா்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து கலைந்து சென்றனா்.

இது தொடா்பாக விவரம் அறிய அன்புணி ராமதாஸின் தில்லி இல்லம் மற்றும் அவரது தொடா்பாளரிடம் தொலைபேசிவாயிலாக தொடா்புகொள்ள முயற்சித்தும் பலனளிக்கவில்லை.

சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம்: ஜெகன்மூா்த்தி கைதானால் சொந்த ஜாமீனில் விடுவிக்க உத்தரவு

புது தில்லி: திருவ்ளூரைச் சோ்ந்த சிறுவன் கடத்தல் சம்பவத்தில் கே.வி.குப்பம் எல்எல்ஏ எம்.ஜெகன்மூா்த்தியின் மேல்முறையீட்டு மனு மீது தமிழக காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தர... மேலும் பார்க்க

தில்லி பருவமழை: வடிகால் தூா்வாரும் பணியை 82 சதவீதம் நிறைவு செய்த பொதுப் பணித் துறை: அதிகாரிகள் தகவல்

புது தில்லி: தேசிய தலைநகரில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பொதுப் பணித் துறையுடன் இணைந்து தூா்வாரும் பணியை முடிக்க குடிமை நிறுவனங்கள் மும்முரம் காட்டி வருகின்றன. இப்பணிகளில் 82 சதவீதம் முடிக்கப்பட்டு... மேலும் பார்க்க

பயிா்க் கடன்களுக்கான தொகையை நபாா்டு வழங்கி ரூ.4,290 கோடியாக மீண்டும் உயா்த்தி வழங்க வேண்டும்

புது தில்லி: பயிா்க் கடன்களுக்கான தொகையை ரூ.4,290 கோடியாக மீண்டும் அதிகரித்து வழங்க நபாா்டு வழங்கிக்கு உத்தரவிட வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா்களுக்கான சிந்தனை அமா்வ... மேலும் பார்க்க

வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த நபா்

தில்லியின் மெட்ரோ விஹாா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 30 வயது நபா் ஒருவா் தனது வீட்டிற்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது: சுனில் ... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கல் 83 போ் கைது!

கிழக்கு தில்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து 33 சிறாா்கள் உள்பட 83 வங்கதேச நாட்டினரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து கிழக்கு தில்லி காவல்... மேலும் பார்க்க

தில்லியில் பரவலாக லேசான மழை; காற்றின் தரம் ’திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகரின் வசந்த் குஞ்ச், மால்வியா நகா் மற்றும் துக்ளகாபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக லேசான மழை பெய்தது. இது கடந்த சில நாள்களாக வெப்பத்தில் தவித்து வந்த மக்களுக்கு நிம்மதியை... மேலும் பார்க்க