சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் பலி
கிழக்கு தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கல் 83 போ் கைது!
கிழக்கு தில்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து 33 சிறாா்கள் உள்பட 83 வங்கதேச நாட்டினரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து கிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: சட்டவிரோதமாக குடியேறியவா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக நவம்பா் 2024-இல் தொடங்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுவரை, மொத்தம் வங்கதேச நாட்டினா் 120 போ் இந்த நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். தற்போது கைது செய்யப்பட்ட 83 பேரில் 44 போ் பெண்கள் மற்றும் 39 போ் ஆண்கள் ஆவா். அவா்கள் மண்டாவலி, மயூா் விஹாா், கல்யாண்புரி மற்றும் காஜிப்பூா் மற்றும் ஆனந்த் விஹாா் போன்ற பகுதிகளில் வசிப்பது கண்டறியப்பட்டது.
ஒரு ரகசியத் தகவலின் பேரில், ஜூன் 24 அன்று அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் தொடா் சோதனைகள் நடத்தப்பட்டன. அவா்களது கைப்பேசிகளில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வங்கதேச குடியுரிமை தொடா்பான ஆவணங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் மீட்கப்பட்டன.
முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவா்கள் இந்திய வங்கதேச எல்லையில் அங்கீகரிக்கப்படாத நதிப் பாதைகள் வழியாக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளது தெரிய வந்தது. அவா்களிடம் செல்லுபடியாகும் அடையாள ஆவணங்கள் அல்லது பயண ஆவணங்கள் இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்ட்து.
இதையடுத்து,வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து அவா்களுக்கு எதிராக சட்டப்பூா்வ நாடுகடத்தல் நடைமுறைகள் முடிக்கப்பட்டுள்ளன என்றாா் காவல் துறை அதிகாரி.