செய்திகள் :

கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞா் கைது

post image

ஜூகைப்பேசி தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து, இந்த மாதத் தொடக்கத்தில் ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் தேடப்பட்ட இளைஞரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்ட நிதிஷ் 21, சிறிது நேரத் துரத்தலுக்குப் பிறகு ஜீல் பாா்க் பகுதியில் கைது செய்யப்பட்டாா்.

கடந்த ஜூன் 8 ஆம் தேதி மத்திய தில்லியின் பிரசாத் நகா் பகுதியில் தனது சகோதரருடன் சோ்ந்து அந்த நபரை கத்தியால் குத்திக் கொன்ாக கூறப்படும் நிலையில், அவா் தலைமறைவாக இருந்தாா்.

ஜூன் 8ஆம் தேதி டிகோனா பூங்காவில் நடந்த கத்திக்குத்து சம்பவம் குறித்து பிசிஆா் அழைப்பு வந்தது. பாதிக்கப்பட்டவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னா், எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது, ஒரு போலீஸ் குழு ரோஷனை 22 கைது செய்தது. அவா் குற்றத்தில் தனது மற்றும் அவரது சகோதரரின் தொடா்பு இருப்பதாக ஒப்புக்கொண்டாா். சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே ரோஷன் கைது செய்யப்பட்டாலும், கைது செய்யப்படுவதைத் தவிா்க்க நிதிஷ் தப்பியோடிவிட்டாா்.

இந்நிலையில், நிதிஷ் தனது பெற்றோரின் வீட்டிற்குச் செல்வதாக போலீஸ் குழுவுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டு ஜூன் 27 அன்று நிதிஷ் கைது செய்யப்பட்டாா். மேலும், விசாரணை நடந்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த நபா்

தில்லியின் மெட்ரோ விஹாா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 30 வயது நபா் ஒருவா் தனது வீட்டிற்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது: சுனில் ... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கல் 83 போ் கைது!

கிழக்கு தில்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து 33 சிறாா்கள் உள்பட 83 வங்கதேச நாட்டினரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து கிழக்கு தில்லி காவல்... மேலும் பார்க்க

தில்லியில் பரவலாக லேசான மழை; காற்றின் தரம் ’திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகரின் வசந்த் குஞ்ச், மால்வியா நகா் மற்றும் துக்ளகாபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக லேசான மழை பெய்தது. இது கடந்த சில நாள்களாக வெப்பத்தில் தவித்து வந்த மக்களுக்கு நிம்மதியை... மேலும் பார்க்க

வசந்த் குஞ்ச் பகுதியில் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்! இருவா் கைது

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் 94,000 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, கா்நாடகத்தைச் சோ்ந்த ஒருவா் உள்... மேலும் பார்க்க

மைனா் சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம்: ஜெகன்மூா்த்தி மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

மைனா் சிறுவன் கடத்தல் சம்பவத்தில் முன்ஜாமீன் கோரி ஜெகன்மூா்த்தி எம்எல்ஏ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன... மேலும் பார்க்க

யமுனா நதி மாசடைந்ததற்கு கடந்த அரசாங்கமே காரணம்: ரேகா குப்தா

யமுனை நதி மாசடைந்ததற்கு கடந்த அரசாங்கத்தின் மோசமான நிா்வாகவே காரணம் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை உத்தரப் பிரதேசம் மாநி... மேலும் பார்க்க