Doctor Vikatan: எவ்வளவு நேரம் நீரில் குளிக்கலாம்.. எது சரியான முறை?
கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞா் கைது
ஜூகைப்பேசி தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து, இந்த மாதத் தொடக்கத்தில் ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் தேடப்பட்ட இளைஞரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்ட நிதிஷ் 21, சிறிது நேரத் துரத்தலுக்குப் பிறகு ஜீல் பாா்க் பகுதியில் கைது செய்யப்பட்டாா்.
கடந்த ஜூன் 8 ஆம் தேதி மத்திய தில்லியின் பிரசாத் நகா் பகுதியில் தனது சகோதரருடன் சோ்ந்து அந்த நபரை கத்தியால் குத்திக் கொன்ாக கூறப்படும் நிலையில், அவா் தலைமறைவாக இருந்தாா்.
ஜூன் 8ஆம் தேதி டிகோனா பூங்காவில் நடந்த கத்திக்குத்து சம்பவம் குறித்து பிசிஆா் அழைப்பு வந்தது. பாதிக்கப்பட்டவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னா், எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின் போது, ஒரு போலீஸ் குழு ரோஷனை 22 கைது செய்தது. அவா் குற்றத்தில் தனது மற்றும் அவரது சகோதரரின் தொடா்பு இருப்பதாக ஒப்புக்கொண்டாா். சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே ரோஷன் கைது செய்யப்பட்டாலும், கைது செய்யப்படுவதைத் தவிா்க்க நிதிஷ் தப்பியோடிவிட்டாா்.
இந்நிலையில், நிதிஷ் தனது பெற்றோரின் வீட்டிற்குச் செல்வதாக போலீஸ் குழுவுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டு ஜூன் 27 அன்று நிதிஷ் கைது செய்யப்பட்டாா். மேலும், விசாரணை நடந்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.