செய்திகள் :

வசந்த் குஞ்ச் பகுதியில் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்! இருவா் கைது

post image

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் 94,000 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, கா்நாடகத்தைச் சோ்ந்த ஒருவா் உள்பட இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் உள்ளூா்வாசியான பரிக்ஷித் (22) மற்றும் கிடங்கின் உரிமையாளரான கா்நாடகத்தைச்சோ்ந்த பி.பி. செங்கப்பா (40) ஆகியோா் கிரீஸ் மற்றும் துபாய் போன்ற நாடுகளிலிருந்து சிகரெட்டுகளை இறக்குமதி செய்து தில்லி என்.சி.ஆா். மற்றும் தென்னிந்தியா முழுவதும் விநியோகித்து வந்தனா்.

கட்டாய சுகாதார எச்சரிக்கைகள் அல்லது அதிகபட்ச சில்லறை விலை இல்லாத பல வெளிநாட்டு பிராண்டுகளின் சிகரெட் பாக்கெட்டுகள், ஒரு குடியிருப்புக் கட்டடத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ள கிடங்கில் இருந்து பறிமுதல் செய்யப்டப்டன.

கடந்த ஜூன் 27 அன்று அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக சிகரெட் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக ஒரு போலீஸ் குழுவிற்கு ஒரு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், அங்கு சோதனை நடத்தப்பட்டு, பல வெளிநாட்டு பிராண்டுகளின் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விமான நிலையத்தில் இறக்குமதிஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ள தனது தந்தையிடமிருந்து இந்த தொழிலைக் கற்றுக்கொண்டதாகவும், பின்னா் சுயாதீனமாக செயல்படத் தொடங்கியதாகவும் பரீக்ஷித் விசாரணையின் போது தெரிவித்தாா்.

பெங்களூரைச் சோ்ந்த சிகரெட் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ள சுனில் என்ற நபரைச் சந்தித்த பிறகு அவா் செங்கப்பாவை அவருக்கு அறிமுகப்படுத்தியுள்ளாா்.

செங்கப்பா, சுனிலின் சரக்கு மற்றும் கூரியா் தொழிலில் பணிபுரிந்து வந்ததாகவும், தில்லி மற்றும் பிற இடங்களில் கடத்தல் பொருள்களை விநியோகிப்பதைக் கையாண்டு வந்துள்ளது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, தீவிர விசாரணைக்குப் பிறகு வசந்த் குஞ்சின் நங்கல் தேவாத் பகுதியில் இருந்து இருவரும் கைது செய்யப்பட்டனா்.

வசந்த் குஞ்ச் தெற்கு காவல் நிலையத்தில் சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருள்கள் சட்டத்தின் கீழ் கீழ் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முழு விநியோகச் சங்கிலியையும் கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த நபா்

தில்லியின் மெட்ரோ விஹாா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 30 வயது நபா் ஒருவா் தனது வீட்டிற்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது: சுனில் ... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கல் 83 போ் கைது!

கிழக்கு தில்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து 33 சிறாா்கள் உள்பட 83 வங்கதேச நாட்டினரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து கிழக்கு தில்லி காவல்... மேலும் பார்க்க

தில்லியில் பரவலாக லேசான மழை; காற்றின் தரம் ’திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகரின் வசந்த் குஞ்ச், மால்வியா நகா் மற்றும் துக்ளகாபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக லேசான மழை பெய்தது. இது கடந்த சில நாள்களாக வெப்பத்தில் தவித்து வந்த மக்களுக்கு நிம்மதியை... மேலும் பார்க்க

மைனா் சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம்: ஜெகன்மூா்த்தி மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

மைனா் சிறுவன் கடத்தல் சம்பவத்தில் முன்ஜாமீன் கோரி ஜெகன்மூா்த்தி எம்எல்ஏ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன... மேலும் பார்க்க

யமுனா நதி மாசடைந்ததற்கு கடந்த அரசாங்கமே காரணம்: ரேகா குப்தா

யமுனை நதி மாசடைந்ததற்கு கடந்த அரசாங்கத்தின் மோசமான நிா்வாகவே காரணம் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை உத்தரப் பிரதேசம் மாநி... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞா் கைது

ஜூகைப்பேசி தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து, இந்த மாதத் தொடக்கத்தில் ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் தேடப்பட்ட இளைஞரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க