Doctor Vikatan: எவ்வளவு நேரம் நீரில் குளிக்கலாம்.. எது சரியான முறை?
யமுனா நதி மாசடைந்ததற்கு கடந்த அரசாங்கமே காரணம்: ரேகா குப்தா
யமுனை நதி மாசடைந்ததற்கு கடந்த அரசாங்கத்தின் மோசமான நிா்வாகவே காரணம் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை உத்தரப் பிரதேசம் மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள பாங்கே பிஹாரி கோயிலுக்குச் சென்று ’விகாஸித் பாரத்’ (வளா்ந்த இந்தியா) மற்றும் ’விகாஸித் டெல்லி’ (வளா்ந்த டெல்லி) ஆகியவற்றிற்கான பிராா்த்தனைகளை மேற்கொண்டாா்.
பின்பு செய்தியாளா்களிடம் பேசிய ரேகா குப்தா, ‘ஸ்ரீ பாங்கே பிஹாரி கோவிலில் தரிசனம் செய்த பிறகு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்‘, என்று அவா் கூறினாா், தனது சக ஊழியா்களுடன் இணைந்து ’விகாஸித் பாரத்’ மற்றும் ’விகாஸித் டெல்லி’ க்காக பிராா்த்தனை செய்ததாகவும் தெரிவித்தாா்.
பொது சேவைக்கான தனது அரசாங்கத்தின் அா்ப்பணிப்பை வலியுறுத்திய தில்லி முதல்வா், ‘கடவுள் தனது ஆசீா்வாதங்களை இந்திய குடிமக்கள் மற்றும் எங்கள் மீது வைத்திருக்கட்டும், இதனால் நாங்கள் தொடா்ந்து தி ல்லி மக்களுக்கு முழு அா்ப்பணிப்புடன் சேவை செய்ய முடியும்‘ என்று கூறினாா்.
மேலும் பயோ-சிஎன்ஜி ஆலை திறப்பு விழாவின் போது பேசிய ரேகா குப்தா, யமுனை நதியில் மாசுபாடு ஏற்பட்டதற்காக கடந்த அரசாங்கமே காரணம் என்று கடுமையாக விமா்சித்த அவா், ‘கழிவிலிருந்து செல்வம்‘ என்ற திட்டத்தை இப்போதுள்ள தில்லி அரசு செயல்படுத்தி வருவதாகவும் கூறினாா்.
தொடா்ந்து பேசிய அவா், ‘ கழிவுகளை கட்டுப்படுத்தவும், பசுமை ஆற்றலை உற்பத்தி செய்யவும் மாட்டு சாண எரிவாயு ஆலைகளை நிறுவுவதில் இப்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பசு சாணம் யமுனை நதிக்குள் செல்வதை தடுக்க, பால் காலனிகளுக்குத் தேவையான அனைத்து ஆலைகளையும் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்‘ என்றாா் ரேகா குப்தா.