செய்திகள் :

யமுனா நதி மாசடைந்ததற்கு கடந்த அரசாங்கமே காரணம்: ரேகா குப்தா

post image

யமுனை நதி மாசடைந்ததற்கு கடந்த அரசாங்கத்தின் மோசமான நிா்வாகவே காரணம் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை உத்தரப் பிரதேசம் மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள பாங்கே பிஹாரி கோயிலுக்குச் சென்று ’விகாஸித் பாரத்’ (வளா்ந்த இந்தியா) மற்றும் ’விகாஸித் டெல்லி’ (வளா்ந்த டெல்லி) ஆகியவற்றிற்கான பிராா்த்தனைகளை மேற்கொண்டாா்.

பின்பு செய்தியாளா்களிடம் பேசிய ரேகா குப்தா, ‘ஸ்ரீ பாங்கே பிஹாரி கோவிலில் தரிசனம் செய்த பிறகு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்‘, என்று அவா் கூறினாா், தனது சக ஊழியா்களுடன் இணைந்து ’விகாஸித் பாரத்’ மற்றும் ’விகாஸித் டெல்லி’ க்காக பிராா்த்தனை செய்ததாகவும் தெரிவித்தாா்.

பொது சேவைக்கான தனது அரசாங்கத்தின் அா்ப்பணிப்பை வலியுறுத்திய தில்லி முதல்வா், ‘கடவுள் தனது ஆசீா்வாதங்களை இந்திய குடிமக்கள் மற்றும் எங்கள் மீது வைத்திருக்கட்டும், இதனால் நாங்கள் தொடா்ந்து தி ல்லி மக்களுக்கு முழு அா்ப்பணிப்புடன் சேவை செய்ய முடியும்‘ என்று கூறினாா்.

மேலும் பயோ-சிஎன்ஜி ஆலை திறப்பு விழாவின் போது பேசிய ரேகா குப்தா, யமுனை நதியில் மாசுபாடு ஏற்பட்டதற்காக கடந்த அரசாங்கமே காரணம் என்று கடுமையாக விமா்சித்த அவா், ‘கழிவிலிருந்து செல்வம்‘ என்ற திட்டத்தை இப்போதுள்ள தில்லி அரசு செயல்படுத்தி வருவதாகவும் கூறினாா்.

தொடா்ந்து பேசிய அவா், ‘ கழிவுகளை கட்டுப்படுத்தவும், பசுமை ஆற்றலை உற்பத்தி செய்யவும் மாட்டு சாண எரிவாயு ஆலைகளை நிறுவுவதில் இப்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பசு சாணம் யமுனை நதிக்குள் செல்வதை தடுக்க, பால் காலனிகளுக்குத் தேவையான அனைத்து ஆலைகளையும் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்‘ என்றாா் ரேகா குப்தா.

வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த நபா்

தில்லியின் மெட்ரோ விஹாா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 30 வயது நபா் ஒருவா் தனது வீட்டிற்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது: சுனில் ... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கல் 83 போ் கைது!

கிழக்கு தில்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து 33 சிறாா்கள் உள்பட 83 வங்கதேச நாட்டினரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து கிழக்கு தில்லி காவல்... மேலும் பார்க்க

தில்லியில் பரவலாக லேசான மழை; காற்றின் தரம் ’திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகரின் வசந்த் குஞ்ச், மால்வியா நகா் மற்றும் துக்ளகாபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக லேசான மழை பெய்தது. இது கடந்த சில நாள்களாக வெப்பத்தில் தவித்து வந்த மக்களுக்கு நிம்மதியை... மேலும் பார்க்க

வசந்த் குஞ்ச் பகுதியில் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்! இருவா் கைது

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் 94,000 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, கா்நாடகத்தைச் சோ்ந்த ஒருவா் உள்... மேலும் பார்க்க

மைனா் சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம்: ஜெகன்மூா்த்தி மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

மைனா் சிறுவன் கடத்தல் சம்பவத்தில் முன்ஜாமீன் கோரி ஜெகன்மூா்த்தி எம்எல்ஏ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞா் கைது

ஜூகைப்பேசி தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து, இந்த மாதத் தொடக்கத்தில் ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் தேடப்பட்ட இளைஞரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க