செய்திகள் :

மேட்டூர் அணை நீர்வரத்து 58,000 கனஅடி!

post image

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 58,000 கனஅடியாக நீடிக்கிறது.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை தணிந்து வருவதாலும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டதாலும் நேற்று இரவு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 58,000 கனஅடியாக சரிந்தது. இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 58,000 கனஅடியாக நீடிக்கிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 26,000 கனஅடி நீரும் உபரிநீராக உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 32,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்இருப்பு 93.47 டி எம் சியாக உள்ளது. மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் அணையில் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீர்வரத்து திடீரென அதிகரித்தால் உபரி நீர் போக்கி மதகுகளைஉயர்த்தி நீரை வெளியேற்றும் வகையில் நீர்வளத்துறை பணியாளர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். உபரி நீர் போக்கி கால்வாய் பகுதிகளில் யாரேனும் குளிக்க, துணி துவைக்க, கால்நடைகளை குளிப்பாட்ட, செல்பி எடுக்க செல்கிறார்களா என்பதை போலீஸாரும் வருவாய் துறையினரும் கண்காணித்து வருகின்றனர்.

Summary

The water inflow to Mettur Dam remains at 58,000 cubic feet.

சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்!

திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.திருவள்ளூா் மாவட்ட... மேலும் பார்க்க

பழைய ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டை மாற்றி தரக்கோரி கோவை ஆட்சியரிடம் மூதட்டி தங்கமணி மனு

பழைய ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டை மாற்றி தரக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மூதட்டி தங்கமணி மனு அளித்தார்.கோவை மாவட்டம், சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி என்ற மூதாட்டி. இவர், தன்... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக இடையே இணைப்புதான் இருக்கிறது; பிணைப்பு இல்லை: திருமாவளவன்

அதிமுக - பாஜக இடையே இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.தமிழ்நாட்டில் 2026 தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க... மேலும் பார்க்க

பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம் நடைமுறைக்கு வந்தது!

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யும் 'வாட்டர் பெல்' திட்டம் இன்று(திங்கள்கிழமை) அமலுக்கு வந்தது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் ... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்து சேவையை தொடக்கிவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(ஜூன் 30) தொடக்கிவைத்தார். டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின... மேலும் பார்க்க

செல்போன் சார்ஜிங் வசதி, சீட் பெல்ட்... சென்னை மின்சாரப் பேருந்தின் சிறப்பம்சங்கள்!

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள மின்சாரப் பேருந்துகளில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 625 மின்சாரப் பேருந்துகள... மேலும் பார்க்க