செய்திகள் :

கேரள முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களுக்கு இடையூறு: 5 பேர் கைது

post image

கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்று கொண்டிருந்த வாகனத்துடன் பாதுகாப்புக்குச் சென்ற வாகனங்களுக்கு இடையூறு செய்யும் வகையில் வாகனத்தை ஓட்டிய சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள முதல்வர் பினராயி விஜய் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில், அரசு விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார்.

எலத்தூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களுக்கு இடையூறு செய்யும் விதமாக குறுக்கே மற்றொரு வாகனம் வந்திருக்கிறது.

விலகிச் செல்லுமாறு 3 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் பாதுகாப்பு வாகனங்களுக்கு குறுக்கே அவர்கள் நுழைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

பிறகு வெஸ்ட் ஹில் சுங்கத்தில் வாகனத்தை தடுத்து நிறுத்தி, அதிலிருந்த 5 பேரையும் கைது செய்தனர். விசாரணையில், ​​அவர்கள் கண்ணூரிலிருந்து பாலக்காடுக்குச் செல்லும் மின் ஊழியர்கள் என்று போலீஸாரிடம் தெரிவித்தனர்.

5 பேரும் கண்ணூர், மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும அவர்கள் மீது எந்த குற்றப் பதிவும் இல்லை என்றும் போலீஸார் மேலும் கூறினர்.

ஆரம்பத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அவர்கள் பின்னர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Summary

Five men have been taken into custody after their vehicle entered the convoy of Kerala Chief Minister Pinarayi Vijayan, police said here on Monday.

கர்நாடக முதல்வர் மாற்றமா? எம்.எல்.ஏ.க்களுடன் தனித்தனியாக காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை!

ரயில் கட்டணம் நாளை முதல் உயர்வு!

ரயில் கட்டண உயர்வு நாளைமுதல்(ஜூலை 1) அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.நாளை முதல் ரயில்களின் பயணக் கட்டணத்தை உயர்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வந்த நிலையில், நாளை முதல் அமல்படுத்துவதா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் 2,501 ஆக உயர்ந்த கரோனா!

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 2,501 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.கரோனா தொற்று நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், ஒருசில மாநிலங்களில் பாதிப்பு அதிகமாகவே பதிவாகி வருக... மேலும் பார்க்க

தெலங்கானா ரசாயன ஆலையில் வெடி விபத்து: 12 ஆக உயர்ந்த பலி!

தெலங்கானா மாநிலம், மடக் மாவட்டத்தில் உள்ள பஷ்யல்ராம் பகுதியில் மருந்து தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. சங்கரெட்டி மாவட்டத்தில் ரசாயன ஆலையில் மருந்... மேலும் பார்க்க

கர்நாடக முதல்வர் மாற்றமா? விமர்சனத்துக்கு உள்ளான கார்கே பதில்!

கர்நாடக முதல்வர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அளித்த விளக்கத்தை பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலை... மேலும் பார்க்க

போபாலின் 90 டிகிரி மேம்பாலம்! கடும் விமர்சனத்தால் நடந்த சம்பவம்!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கட்டி முடிக்கப்பட்டு, இன்னும் திறப்பு விழா காணாத 90 டிகிரி மேம்பாலம் என புகழ்பெற்ற ரயில்வே மேம்பாலத்துக்கு வந்த கடுமையான விமர்சனத்தால் 7 பொறியாளர்கள் பணியிடை நீக்கம் ச... மேலும் பார்க்க

மறந்துடாதீங்க... நாளைமுதல் ஆதார் அடிப்படையில் மட்டுமே தட்கல் டிக்கெட்!

இந்திய ரயில்வேயில், தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கப்பட்ட நடைமுறை நாளைமுதல் (ஜூலை 1) அமலுக்கு வருகின்றது.இந்த நிலையில், ஐஆர்சிடி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனர்கள், உடனடியாக... மேலும் பார்க்க