செய்திகள் :

ஜிஎஸ்டி வசூல் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பு! ரூ.22.08 லட்சம் கோடியாக உயர்வு

post image

சரக்கு மற்றும் சேவை வரியின்(ஜிஎஸ்டி) ஒட்டுமொத்த வசூல் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகி ரூ. 22.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

திங்கள்கிழமை(ஜூன் 30) வெளியான மத்திய அரசு தரவுகளின்படி, 2024-25 நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, அதற்கும் முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, 9.4 சதவீதம் அதிகமாகும்.

இதன்மூலம் கடந்த ஐந்தே ஆண்டுகளில் ஜிஎஸ்டி வசூல் இரட்டிப்பாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன், 2021-ஆம் நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ. 11.37 லட்சம் கோடியாக இருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடும் போது கடந்த நிதியாண்டில் இரட்டிப்பாகியுள்ளது.

மாதாந்திர சராசரி ஜிஎஸ்டி வசூல்

2024-25 நிதியாண்டில் மாதாந்திர சராசரி ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.84 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டின் மாதாந்திர சராசரி ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.68 லட்சம் கோடியாகவும், 2022-ஆம் நிதியாண்டில் ரூ. 1.51 லட்சம் கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி வரிதாரர்கள் அதிகரிப்பு!

பதிவு செய்யப்பட்ட ஜிஎஸ்டி வரிதாரர்கள் எண்ணிக்கையும் கடந்த 2017-இல் 65 லட்சம் என்ற அளவிலிருந்து 1.51 கோடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி கடந்த 8 ஆண்டு காலத்துக்குள் நிகழ்ந்துள்ளது.

Gross GST collection double in five years to record ₹22.08 lakh crore in FY25

ரூ.989 கோடி மதிப்புள்ள புதிய ஆர்டர்களை வென்ற கேபிஐஎல்!

புதுதில்லி: கல்பதரு ப்ராஜெக்ட்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட், மின் பரிமாற்றம் மற்றும் விநியோகம் துறையில் ரூ.989 கோடி மதிப்புள்ள புதிய ஆர்டர்களைப் வென்றுள்ளதாக இன்று தெரிவித்தது.இந்தப் புதிய ஆர்டர்களுடன், நி... மேலும் பார்க்க

இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி 9 மாதம் இல்லாத அளவுக்கு சரிவு!

புதுதில்லி: இன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி உற்பத்தி, சுரங்கம் மற்றும் மின்சாரத் துறைகளின் மோசமான செயல்திறன் காரணமாக இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி மே 2025ல் ஒன்பது மாதங்களில்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 23 காசுகள் சரிந்து ரூ.85.73 ஆக முடிவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 23 காசுகள் குறைந்து 85.73 ஆக முடிவடைந்தது. இதற்கு பலவீனமான உள்நாட்டு பங்குச் சந்தைகள் மற்றும் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உ... மேலும் பார்க்க

உடையாத ஸ்மார்ட்போன் உண்டா? அறிமுகமாகிறது ஹானர் எக்ஸ் 9 சி!

ஹானர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விற்பனை யுக்தி பலரைக் கவர்ந்துள்ளது. அதாவது, 2 மீட்டர் தூரத்தில் இருந்து தவறினாலும் ஸ்மார்ட்போன் உடையாது என ஹானர் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.ஹானர் நிறுவனத்தின் எ... மேலும் பார்க்க

4 நாள் ஏற்றத்திற்கு பிறகு சரிந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: தொடர்ந்து நான்கு நாள் ஏற்றத்திற்குப் பிறகு, முக்கியமாக வங்கிப் பங்குகளில் லாபம் ஈட்டுதல் அதிகரிப்பால், இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து ... மேலும் பார்க்க

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள்! ஜூலை 8-ல் அறிமுகம்

முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய ஸ்மார்ட்போன்கள் ஜூலை 8ஆம் தேதி சந்தையில் அறிமுகமாகவுள்ளது. நோவா 5ஜி மற்றும் நோவா பிளஸ் 4ஜி ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உலக சந்தைகளுக... மேலும் பார்க்க