செய்திகள் :

அரசியல், கொள்கை எதிரியைத்தவிர யார் வந்தாலும் அரவணைப்போம்: தவெக

post image

அரசியல் எதிரி, கொள்கை எதிரியைத்தவிர யார் வந்தாலும் அரவணைப்போம் என தமிழக வெற்றிக்கழக மாநில கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாளை ஒட்டி இன்று(ஜூன் 30) சேலம் மாவட்ட தவெக சார்பில் சேலம் அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் அருள்ராஜ் கலந்துகொண்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான போர்வைகளை வழங்கினார். முன்னதாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அருள்ராஜ், ”தமிழகம் முழுவதும் தளபதியின் கோட்டையாக மாறி வருகிறது. அதில் சேலம் இரும்புக் கோட்டையாக உள்ளது. சேலத்தைப் பொறுத்தவரை மேட்டூர் அணை நிரம்பி தண்ணீர் வந்து கொண்டிருந்தாலும் சேலத்தில் பல வார்டுகளில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது.

பாதாள சாக்கடை திட்டம் பல ஆண்டுகள் முன்பு தொடங்கியும் இதுவரை சீர் செய்யவில்லை; இதனால் வீட்டிற்கு கழிவு நீர் வரும் சூழ்நிலை உள்ளது.

சேலம் பல்வேறு நகரங்களை இணைக்கும் சாலையாக உள்ளது; ஆனால் இதுவரை தொழில் வளர்ச்சி இல்லை. ஆண்ட இரு கட்சிகளும் சேலத்தில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. தவெக ஆட்சிக்கு வந்தவுடன் சேலம் தலைசிறந்த மாவட்டமாக மாற்றப்படும்" என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், "தமிழகம் முழுவதும் தளபதி சுற்றுப்பயணம் குறித்து வருகின்ற 4 தேதி நடைபெற நடைபெற உள்ள செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்காக கட்சி, சின்னம் இன்னும் விண்ணப்பிக்கவில்லை ; விண்ணப்பித்தவுடன் தெரிவிக்கப்படும். தளபதி விஜய் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டார். இனிமேல் மக்களை சந்திப்பார்.

தளபதி விஜய் வெளியே வராததற்கு காரணம் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற பயம்தான் ; காவல்துறை பாதுகாப்பு அளித்தால் விஜய் வருவார். அரசியல் எதிரி, கொள்கை எதிரியைத்தவிர யார் வந்தாலும் அரவணைப்போம்” என தெரிவித்தார்.

இதையும் படிக்க: 3 ஆண்டுகளாக பூட்டிய அறையில் வாழ்ந்த ஐடி ஊழியர்! காரணம் என்ன?

பெரிய வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு!

பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதத்திற்கு மிகாமல், மின் கட்டண உயர்த்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (ஜூன் 30) தெரிவித்துள்ளார். சிறு வணிகர... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்க... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று(ஜூன் 30) ஒருசி... மேலும் பார்க்க

நீதியை நிலைநாட்ட வேண்டும்: காவல்துறையினருக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

காவல் நிலையங்களுக்குப் புகார் கொடுக்க வரும் மக்களிடம் கண்ணியத்தோடு நடந்து கொண்டு அவர்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று காவல்துறையினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அ... மேலும் பார்க்க

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு விநியோகம்: விரைவில் அமல்!

சென்னயில் 8 இடங்களில் குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.மத்திய அரசு, தமிழ்நாட்டில் நகர இயற்கை எரிவாயு விநியோகத்தினை, குழாய்கள் மூலம் வழங்குவதற்... மேலும் பார்க்க

காவல்துறை விசாரணையில் இளைஞர் மரணம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் இளைஞர் உயிரிழந்த வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலுக்கு விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க