பயிா்க் கடன்களுக்கான தொகையை நபாா்டு வழங்கி ரூ.4,290 கோடியாக மீண்டும் உயா்த்தி வழ...
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு கிடைத்த ‘பல கோடி லாட்டரி பரிசு’- கடைசியில் ட்விஸ்ட்; நடந்ததென்ன?
ஒரே நேரத்தில் பல கோடி ரூபாய் பரிசு வென்றதாக பலருக்கும் லாட்டரி டிக்கெட் நடத்தும் நிறுவனம் தகவல் அனுப்பி இருக்கிறது.
ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கோடீஸ்வரர்கள் ஆனதாக எண்ணிக் கொண்டிருந்த வேளையில், அந்த தகவல் தவறானது என்று அந்த நிறுவனம் கூறியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நார்ஸ்க் டிப்பிங் என்ற நிறுவனம் நார்வே நாட்டின் அரசால் நடத்தப்படும் ஒரு சூதாட்ட நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் இருந்து தான் லாட்டரி டிக்கெட்டில் பல கோடி ரூபாய் பரிசு விழுந்திருப்பதாக பலருக்கும் தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது.

ஆனால் உண்மையில் அவர்கள் வென்ற தொகைக்கு பதிலாக பல கோடி ரூபாய் வென்றதாக தவறான தகவலை அனுப்பி இருக்கின்றனர்.
அதாவது அவர்கள் வென்ற பணத்தை நூறால் வகுப்பதற்கு பதிலாக,பெருக்கி அந்த தொகைதான் வென்றுவிட்டதாக மக்களுக்கு செய்தி அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்து அந்த நிறுவனம் நடந்த தவறு குறித்து தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர் மன்னிப்பு கேட்டதோடு ஒரு நாள் கழித்து, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
பரிசு தொகையில் குறிப்பிடப்பட்ட தொகையின் தவறு திருத்தப்பட்டுள்ளதாகவும் யாருக்கும் தவறாக பணம் வழங்கப்படவில்லை என்றும் நிறுவனம் கூறியிருக்கிறது. இந்த அறிவிப்பால் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.