செய்திகள் :

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு கிடைத்த ‘பல கோடி லாட்டரி பரிசு’- கடைசியில் ட்விஸ்ட்; நடந்ததென்ன?

post image

ஒரே நேரத்தில் பல கோடி ரூபாய் பரிசு வென்றதாக பலருக்கும் லாட்டரி டிக்கெட் நடத்தும் நிறுவனம் தகவல் அனுப்பி இருக்கிறது.

ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கோடீஸ்வரர்கள் ஆனதாக எண்ணிக் கொண்டிருந்த வேளையில், அந்த தகவல் தவறானது என்று அந்த நிறுவனம் கூறியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நார்ஸ்க் டிப்பிங் என்ற நிறுவனம் நார்வே நாட்டின் அரசால் நடத்தப்படும் ஒரு சூதாட்ட நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் இருந்து தான் லாட்டரி டிக்கெட்டில் பல கோடி ரூபாய் பரிசு விழுந்திருப்பதாக பலருக்கும் தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது.

ஆனால் உண்மையில் அவர்கள் வென்ற தொகைக்கு பதிலாக பல கோடி ரூபாய் வென்றதாக தவறான தகவலை அனுப்பி இருக்கின்றனர்.

அதாவது அவர்கள் வென்ற பணத்தை நூறால் வகுப்பதற்கு பதிலாக,பெருக்கி அந்த தொகைதான் வென்றுவிட்டதாக மக்களுக்கு செய்தி அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து அந்த நிறுவனம் நடந்த தவறு குறித்து தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர் மன்னிப்பு கேட்டதோடு ஒரு நாள் கழித்து, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

பரிசு தொகையில் குறிப்பிடப்பட்ட தொகையின் தவறு திருத்தப்பட்டுள்ளதாகவும் யாருக்கும் தவறாக பணம் வழங்கப்படவில்லை என்றும் நிறுவனம் கூறியிருக்கிறது. இந்த அறிவிப்பால் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் அனைத்து கட்சியிலும் பெண் வன்கொடுமை, பாகுபாடு; திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சட்டக்கல்லூரியில் கடந்த வாரம் முதலாம் ஆண்டு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவம் கொல்கத்தா அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது... மேலும் பார்க்க

`ஏங்க, என்மேல இருக்க வழக்கால தான் கூமாபட்டியை ஃபேமஸ் ஆக்கிக்கிட்டிருக்கேன்’- வைரல் இளைஞர் தங்கபாண்டி

அந்த மாவட்டத்துக்காரர்களால்கூட பெரிதாக அறியப்படாத ஊர். ஆனால், அந்த இளைஞரின் வீடியோவால் ‘கூமாபட்டி’ என்கிற அச்சிறிய கிராமம், வேர்ல்டு லெவல் ஃபேமஸ் ஆகி இணையத்தில் வேற லெவல் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கிற... மேலும் பார்க்க

``உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.." - விருதுநகர் முன்னாள் கலெக்டர் ஜெயசீலன் பதிவு வைரல்!

கூமாபட்டி... திடீரென தமிழ்நாட்டின் காஷ்மீர் என வைரலான கிராமம். மன அழுத்தமா இங்க வாங்க என ஒருவர் பேசிய வீடியோவை நம்பி இளைஞர்கள் பட்டாளமும் ஒன்று புறப்பட்டது. ஆனால் அங்கு நடந்தது என்னவோ வேறு. ஆம், அந்த ... மேலும் பார்க்க

குரங்கினால் தூக்கிச் செல்லப்பட்ட பூனைக்குட்டிக்காக கிராமமே காத்திருக்கும் சுவரஸ்யம் - என்ன நடந்தது?

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தின் பினாங்கோடு பகுதியில் உள்ள மக்கள் ஒரு பூனைக்குட்டியின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். மூன்று நாள்களுக்கு முன்பு குரங்கு ஒன்று பினாங்கோடு குடியிருப்பு பகுதிக்க... மேலும் பார்க்க

”வகுப்பறை, சீருடை இல்லை.. உலகம்தான் பாடம்” - பள்ளிக்கு செல்லாமல் பயணம் செய்யும் குழந்தைகள் - ஏன்?

"வகுப்பறை இல்லை, சீருடை இல்லை, தினமும் பள்ளி செல்ல வேண்டியதில்லை... உலகம் மட்டுமே அவர்களின் பாடம்" என்று தங்களின் மூன்று பெண் குழந்தைகளை வழக்கமான கல்வி பயிலும் நிலையில் இருந்து மாற்றியுள்ளனர் அமெரிக்க... மேலும் பார்க்க

ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்; விரட்டிப் பிடித்த அதிகாரிகள் - 15 ரயில்களின் சேவை பாதிப்பு!

ரயில்கள் பல கிலோமீட்டர் தூரத்தில் வந்தாலே ரயில்வே லெவல் கிராசிங்கை மூடிவிடுவது வழக்கம். ஆனால் தெலங்கானாவில் ஒரு பெண் செய்த காரியம், ரயில்வே அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அங்குள்ள ரங்கா ... மேலும் பார்க்க