செய்திகள் :

இந்தியாவில் அனைத்து கட்சியிலும் பெண் வன்கொடுமை, பாகுபாடு; திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா

post image

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சட்டக்கல்லூரியில் கடந்த வாரம் முதலாம் ஆண்டு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவம் கொல்கத்தா அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இக்காரியத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் இளைஞரணியைச் சேர்ந்த மனோஜித் மிஸ்ரா உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனோஜித் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பா.ஜ.கவினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இப்பாலியல் வன்கொடுமை தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர். இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.மதன் மித்ரா அளித்துள்ள பேட்டியில்,''பாதிக்கப்பட்ட பெண் ஏன் அங்கு தனியாக செல்லவேண்டும்.

கல்யான் பானர்ஜி, மனோஜித்

அவர் செல்லாமல் இருந்திருந்தால் இது நடந்திருக்காது''என்று தெரிவித்திருந்தார். இதே போன்று மற்றொரு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யான் பானர்ஜி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக அளித்த பேட்டியில்,''ஒரு நண்பர் தனது நண்பரை பாலியல் வன்கொடுமை செய்தால் என்ன செய்ய முடியும்? பள்ளிகளில் போலீசார் இருப்பார்களா? இது மாணவர்களால் மற்றொரு மாணவிக்கு செய்யப்பட்டது. அவரை (பாதிக்கப்பட்ட மாணவி) யார் பாதுகாப்பார்கள்? இந்தக் குற்றச் செயல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அனைத்தையும் யார் செய்கிறார்கள்? சில ஆண்கள் இதைச் செய்கிறார்கள். எனவே, பெண்கள் யாருக்கு எதிராகப் போராட வேண்டும்? இந்த வக்கிரமான ஆண்களுக்கு எதிராகப் பெண்கள் போராட வேண்டும்.

ஒரு நண்பர் ஒரு நண்பரை பாலியல் வன்கொடுமை செய்தால், அது எப்படி ஊழலாக இருக்க முடியும்? பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின் நிலை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆண்களின் மனநிலை இப்படி இருக்கும் வரை, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கும்," என்று அவர் மேலும் கூறினார். இத்தலைவர்கள் பேச்சுக்கு கண்டனம் எழுந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களின் இந்த சர்ச்சை பேச்சு குறித்து அக்கட்சியின் எம்.பி. மஹுவா மொய்த்ரா அளித்துள்ள பேட்டியில்,'' இந்தியாவில் அனைத்து கட்சிகளிலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலின பாகுபாடுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் இதில் மாறுபட்டது. பெண்களுக்கு எதிராக பேசும் தலைவர்களை திரிணாமுல் காங்கிரஸ் கண்டிக்கும்''என்று குறிப்பிட்டுள்ளார்.

`ஏங்க, என்மேல இருக்க வழக்கால தான் கூமாபட்டியை ஃபேமஸ் ஆக்கிக்கிட்டிருக்கேன்’- வைரல் இளைஞர் தங்கபாண்டி

அந்த மாவட்டத்துக்காரர்களால்கூட பெரிதாக அறியப்படாத ஊர். ஆனால், அந்த இளைஞரின் வீடியோவால் ‘கூமாபட்டி’ என்கிற அச்சிறிய கிராமம், வேர்ல்டு லெவல் ஃபேமஸ் ஆகி இணையத்தில் வேற லெவல் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கிற... மேலும் பார்க்க

``உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.." - விருதுநகர் முன்னாள் கலெக்டர் ஜெயசீலன் பதிவு வைரல்!

கூமாபட்டி... திடீரென தமிழ்நாட்டின் காஷ்மீர் என வைரலான கிராமம். மன அழுத்தமா இங்க வாங்க என ஒருவர் பேசிய வீடியோவை நம்பி இளைஞர்கள் பட்டாளமும் ஒன்று புறப்பட்டது. ஆனால் அங்கு நடந்தது என்னவோ வேறு. ஆம், அந்த ... மேலும் பார்க்க

குரங்கினால் தூக்கிச் செல்லப்பட்ட பூனைக்குட்டிக்காக கிராமமே காத்திருக்கும் சுவரஸ்யம் - என்ன நடந்தது?

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தின் பினாங்கோடு பகுதியில் உள்ள மக்கள் ஒரு பூனைக்குட்டியின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். மூன்று நாள்களுக்கு முன்பு குரங்கு ஒன்று பினாங்கோடு குடியிருப்பு பகுதிக்க... மேலும் பார்க்க

”வகுப்பறை, சீருடை இல்லை.. உலகம்தான் பாடம்” - பள்ளிக்கு செல்லாமல் பயணம் செய்யும் குழந்தைகள் - ஏன்?

"வகுப்பறை இல்லை, சீருடை இல்லை, தினமும் பள்ளி செல்ல வேண்டியதில்லை... உலகம் மட்டுமே அவர்களின் பாடம்" என்று தங்களின் மூன்று பெண் குழந்தைகளை வழக்கமான கல்வி பயிலும் நிலையில் இருந்து மாற்றியுள்ளனர் அமெரிக்க... மேலும் பார்க்க

ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்; விரட்டிப் பிடித்த அதிகாரிகள் - 15 ரயில்களின் சேவை பாதிப்பு!

ரயில்கள் பல கிலோமீட்டர் தூரத்தில் வந்தாலே ரயில்வே லெவல் கிராசிங்கை மூடிவிடுவது வழக்கம். ஆனால் தெலங்கானாவில் ஒரு பெண் செய்த காரியம், ரயில்வே அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அங்குள்ள ரங்கா ... மேலும் பார்க்க

கூமாபட்டி: `ஏங்ங்ங்க... ரீல்ஸை நம்பி வந்துராதீங்க!' - எச்சரிக்கும் அதிகாரிகள்.. பின்னணி என்ன?

கடந்த சில தினங்களாக இன்ஸ்டா கிராம், யூடியூப், எக்ஸ் என எந்த சமூக வலைதளத்தைத் திறந்தாலும் " ஏங்ங்ங்க... கூமாபட்டிக்கு வாங்க" என்று அழைக்கும் இளைஞரின் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.மன அழுத்தமா கூமாபட்டிக... மேலும் பார்க்க