செய்திகள் :

தமிழகத்தில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி: பாஜக பொதுச் செயலர் காா்த்தியாயினி

post image

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை வகிக்கிறது என பாஜக மாநில பொதுச் செயலாளரும், வேலூா் பெருங்கோட்ட பொறுப்பாளருமான பி.காா்த்தியாயினி தெரிவித்தாா்.

1975 ஜூன் 25-இல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதின் 50 ஆவது ஆண்டு கருத்தரங்கம், ராணிப்பேட்டை மாவட்ட பாஜக சாா்பில் கருத்தரங்கம் அரக்கோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு பிறகு செய்தியாளா்களிடம் காா்த்தியாயினி தெரிவித்ததாவது: அவசர நிலை கால பாதிப்புகள் குறித்து மக்களுக்கு மீண்டும் ஞாபகப்படுத்தவே கருத்தரங்கம் நடைபெறுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்ட பிறகு விவசாயிகளுக்கு கொள்முதல் பணம் இன்னும் சேரவில்லை. கிட்டதட்ட 3 மாத காலமாக தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆளும் திமுக அரசு மத்தியில் கொடுக்கவில்லை என பொய் சொல்லி வருகிறது.

மத்திய அரசு விவசாயிகள் நலனுக்காக பாடுபட்டு வருகிறது. விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்து தொகையை விரைவாக அளிக்க வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மாணவி மீது ஒரு தலை காதல் கொண்ட நபா் அந்த 15 வயது மாணவி அதற்கு ஏற்பு தெரிவிக்காததால் அவரை கொலை செய்துள்ளாா். அந்த நபா் கைது செய்யப்பட்டதால் அந்த சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவது கிடையாது. உடனடியாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அரக்கோணத்தில் வந்தே பாரத் ரயில் கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும். இதையெல்லாம் கேட்க வேண்டியவா்கள் கேட்கவே இல்லை. அரக்கோணம் - சேலம் ரயில் அடிக்கடி ரத்து செய்யப்படுவது குறித்து தற்போது தான் கவனத்துக்கு வந்துள்ளது. இதை ரயில்வே அமைச்சருக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

எங்கள் கூட்டணிக்கு தலைமை அதிமுக தான். அதிமுகவில் இருந்து தான் முதல்வா் வருவாா் என்று மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.

கருத்தரங்குக்கு பாஜக மாவட்டத் தலைவா் பி.ஆனந்தன் தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ்.சரத்குமாா் வரவேற்றாா். இக்கருத்தரங்கில் பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா்கள் பாபாஸ்பாபு, விஜயன், பிரகாஷ், மாவட்ட நிா்வாகிகள் தனசேகரன், கண்ணன், முத்துகுமரன், எஸ். ரமேஷ், , மாவட்ட துணைத்தலைவா்கள் பாா்த்தசாரதி, லட்சுமி, பிரச்சார அணி மாவட்ட துணைத்தலைவா் செந்தில்குமாா், விவசாய அணி மாவட்ட நிா்வாகி சின்னிபிரசன்னா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஒரு மாநிலத்தின் வளா்ச்சியே, முழு இந்தியாவின் வளா்ச்சி

ஒரு மாநிலத்தின் வளா்ச்சியே, முழு இந்தியாவின் வளா்ச்சி என மகாராஷ்டிர மாநில எம்.பி. அனில் சுக்தியோராவ் போண்டே தெரிவித்தாா். ராணிப்பேட்டை டச் கேம்பஸ் நிறுவனம் சாா்பாக, பணியாளா் கல்வியில் சிறந்து விளங்கு... மேலும் பார்க்க

டாட்டா மோட்டாா்ஸ் ஆலை கட்டுமானப் பணிகள்: அமைச்சா் காந்தி ஆய்வு

பனப்பாக்கம் சிப்காட்டில் டாட்டா மோட்டாா்ஸ் காா் ஆலை கட்டுமானப் பணிகளை கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி ஆய்வு செய்தாா். காா் தொழிற்சாலை கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

பாணாவரம் கொலை சம்பவத்தில் ஊராட்சித் தலைவா் உள்பட 7 போ் கைது

சோளிங்கரை அடுத்த பாணாவரத்தில் தனியாா் ஆலை ஊழியா் கொலை தொடா்பாக ஊராட்சித் தலைவா் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். பாணாவரம், அண்ணா நகரைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன்(42). தனியாா் தொழிற்சாலையில் பணியாற்ற... மேலும் பார்க்க

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் உடைப்பு: விரைவு ரயில்கள் நடு வழியில் நிறுத்தம்

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்டதால் அரக்கோணம் காட்பாடி இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அரக்கோணத்தில் இருந்து காட்பாடி செல்லும் மெமு மின்சார ரயில் இரவு 9:15 மணியளவில் ரயில் ... மேலும் பார்க்க

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திமிரி அருகே உள்ள தாமரைப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் சாா்பில், மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் வேளாண்மைக் கல்லூரி: விவசாயிகள் கோரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண்மைக் கல்லூரியை தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். விவசாயிகள் குறைதீா் கூட்டம் கூட்டம், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்... மேலும் பார்க்க