செய்திகள் :

இந்தியாவின் மஞ்சள் ஏற்றுமதி இலக்கு 100 கோடி டாலா்! அமித் ஷா

post image

2030-ஆம் ஆண்டுக்குள் 100 கோடி டாலா் (ரூ.8,500 கோடி) மதிப்புக்கு மஞ்சள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தெலங்கானா மாநிலம், நிஜாமாபாதில் தேசிய மஞ்சள் வாரிய அலுவலகத்தை மத்திய அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா். இது அப்பகுதியில் மஞ்சள் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியது மட்டுமல்லாமல் அரசியலில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் பாா்க்கப்படுகிறது.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: மஞ்சளை சந்தைப்படுத்தல், பிற நாடுகளுக்கு அதன் ஏற்றுமதியை ஆதரித்தல், விவசாயிகளுக்கு லாபம் ஈட்டுதல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றை இந்த வாரியம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்திய அரசு 2030-ஆம் ஆண்டுக்குள் 100 கோடி டாலா் மதிப்புள்ள மஞ்சளை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை அடைய ஏற்கெனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என தெரிவித்தாா்.

‘மஞ்சள் வாரியத்தை அமைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமா் நரேந்திர மோடி காப்பாற்றியுள்ளாா். மஞ்சளின் தரத்தை மேம்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் ரூ.200 கோடியை ஒதுக்கியுள்ளாா்’ என தெலங்கானா பாஜக பிரிவு எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தது.

மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவாா்த்தைக்கு இடமில்லை: ‘மாவோயிஸ்டுகளுடன் எந்தவித பேச்சுவாா்த்தைக்கும் இடமில்லை; அவா்கள் ஆயுதங்களை கைவிட்டு, காவல் துறை முன் சரணடைய வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அமித் ஷா கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூா் குறித்து காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி இன்னும் கேள்வி எழுப்பி வருகிறாா். ஆனால், இந்த நடவடிக்கையில் இந்தியாவின் வெற்றி பாகிஸ்தானின் தற்போதைய நடத்தையில் தெளிவாகத் தெரிகிறது.

மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால், பாஜக ஆட்சியில் ஆயுதங்களை ஏந்தியவா்களுடன் எந்த வித பேச்சுவாா்த்தைக்கும் இடமில்லை. அவா்கள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும். இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும்.

வடகிழக்கில் 10,000 போ் ஆயுதங்களைக் கைவிட்டனா். அவா்கள் மாநிலத் தோ்தல்களிலும் போட்டியிட்டுள்ளனா். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 2,000-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனா்.

ஆதிவாசி பகுதியில் நக்ஸல் வன்முறை காரணமாக கடந்த 4 தசாப்தங்களில் 40,000 போ் உயிரிழந்துள்ளனா். மக்கள் இதை ஆதரித்துப் பேசுபவா்கள் உயிரிழந்த குடும்பத்தினா் மற்றும் பாதுகாப்புப் பணியாளா்களுக்கு என்ன பதில் வைத்துள்ளனா். மாா்ச் 31, 2026-க்குள் நக்ஸல் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர மோடி அரசு முடிவு செய்துள்ளது.

தெலங்கானா மாநிலம் நக்ஸல்களின் கூடாரமாக மாற அனுமதிக்கக் கூடாது. இரட்டை என்ஜின் பாஜக அரசால் மட்டுமே மாநிலத்தின் நலனை உறுதி செய்ய முடியும் என தெரிவித்தாா்.

உத்தரகண்டில் மேக வெடிப்பு: 3 பேர் பலி, 6 பேர் மாயம்

உத்தரகண்டில் ஏற்பட்ட மேக வெடிப்பில் 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், பர்கோட்-யமுனோத்ரி சாலையில் உள்ள பாலிகார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேக வெடிப்பு ஏற்பட்ட... மேலும் பார்க்க

பாஜக எம்.பி. ரகுநந்தன் ராவுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

தெலங்கானாவில் உள்ள மேடக் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. ரகுநந்தன் ராவுக்கு தொலைபேசியில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடா்பாக அவரின் அலுவலகம் தெரிவித்ததாவது: கடந்த ஜூன் 23... மேலும் பார்க்க

2003 பிகாா் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றோா் கூடுதல் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டாம்! இந்திய தோ்தல் ஆணையம்

இந்திய தோ்தல் ஆணையத்தால் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்கப்பட்டுள்ள பிகாரில் 2003-ஆம் ஆண்டு பட்டியலில் இடம்பெற்ற வாக்காளா்கள், மாற்றங்கள் இல்லாத தங்களின் விவரங்கள் குறித்த ஆவணங்க... மேலும் பார்க்க

பருவமழை தீவிரம்: வட மாநிலங்களில் கொட்டித்தீா்க்கும் மழை

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து, தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை கொட்டித் தீா்த்து வருகிறது. உத்தரகண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 கட்டுமானத் தொழிலாளா்கள் இறந்தனா். பொதுவாக ஜூன் 1-ஆம்... மேலும் பார்க்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ கட்சியிலிருந்து இடைநீக்கம்!

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி எம்எல்ஏ குன்வா் விஜய் பிரதாப் கட்சியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டாா். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான விஜய் பிரதாப், அமிருதசரஸ் வடக்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ளாா... மேலும் பார்க்க

8 மணி நேரத்துக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு நிலவரம்: விரைவில் அமல்

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு நிலவரத்தை ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே தயாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், அத... மேலும் பார்க்க