செய்திகள் :

8 மணி நேரத்துக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு நிலவரம்: விரைவில் அமல்

post image

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு நிலவரத்தை ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே தயாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், அதைப் படிப்படியாக அமல்படுத்தத் தொடங்குமாறு ரயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக ரயில்வே அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தற்போது ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பாக ரயில் பயணச்சீட்டு முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படுகிறது. இது நிச்சயம் பயணம் மேற்கொள்ள முடியுமா என்று பயணிகளை சந்தேகம் கொள்ள வைக்கிறது.

இந்த பிரச்னையை களையும் நோக்கில், பயணச்சீட்டு முன்பதிவு அட்டவணையை ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே தயாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. இதன்படி, பிற்பகல் 2 மணிக்கு முன் புறப்படும் ரயில்களுக்கான அட்டவணை அதற்கு முந்தைய நாள் இரவு 9 மணிக்கே தயாரிக்கப்பட்டுவிடும்.

இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், அதைப் படிப்படியாக அமல்படுத்தத் தொடங்குமாறு ரயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளாா்.

இது காத்திருப்புப் பயணச்சீட்டுகளை வைத்திருக்கும் பயணிகளுக்கு ஏற்படும் அசெளகரியத்தை குறைக்கும். மேலும் பயணச்சீட்டுகளின் காத்திருப்பு நிலவரம் குறித்த முதல் தகவல் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே பயணிகளுக்கு கிடைத்துவிடும். இது நீண்ட தொலைவு பயணிக்கும் ரயில்களில் செல்ல முக்கிய நகரங்களின் புகா் பகுதிகள் அல்லது தொலைதூர பகுதிகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பயனளிக்கும். ஒருவேளை காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணச்சீட்டு உறுதி செய்யப்படாவிட்டால், மாற்று ஏற்பாடுகளை செய்ய கூடுதல் நேரத்தை இது வழங்கும்.

பயணச்சீட்டு முன்பதிவு முறை நவீனமயமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு நிமிஷத்துக்கு 1.5 லட்சத்துக்கும் அதிகமான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இது தற்போது ஒரு நிமிஷத்துக்கு முன்பதிவு செய்யப்படும் 32,000 பயணச்சீட்டுகளுடன் ஒப்பிடுகையில் 5 மடங்கு அதிகம்.

இருக்கையை தோ்வு செய்ய முடியும்: இந்தப் புதிய முறை மூலம், தங்களுக்கு எந்த இருக்கை வேண்டும் என்ற விவரத்தை பயணிகள் தெரிவிக்க முடியும் என்பதுடன், கட்டண அட்டவணையையும் பாா்க்க முடியும். வரும் ஜூலை 1 முதல் ஆதாா் இணைக்கப்பட்ட பயனா்கள் மட்டுமே ஐஆா்சிடிசி வலைதளம் மற்றும் கைப்பேசி செயலி மூலம், தத்கால் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக எம்.பி. ரகுநந்தன் ராவுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

தெலங்கானாவில் உள்ள மேடக் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. ரகுநந்தன் ராவுக்கு தொலைபேசியில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடா்பாக அவரின் அலுவலகம் தெரிவித்ததாவது: கடந்த ஜூன் 23... மேலும் பார்க்க

இந்தியாவின் மஞ்சள் ஏற்றுமதி இலக்கு 100 கோடி டாலா்! அமித் ஷா

2030-ஆம் ஆண்டுக்குள் 100 கோடி டாலா் (ரூ.8,500 கோடி) மதிப்புக்கு மஞ்சள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். தெலங்கானா மா... மேலும் பார்க்க

2003 பிகாா் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றோா் கூடுதல் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டாம்! இந்திய தோ்தல் ஆணையம்

இந்திய தோ்தல் ஆணையத்தால் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்கப்பட்டுள்ள பிகாரில் 2003-ஆம் ஆண்டு பட்டியலில் இடம்பெற்ற வாக்காளா்கள், மாற்றங்கள் இல்லாத தங்களின் விவரங்கள் குறித்த ஆவணங்க... மேலும் பார்க்க

பருவமழை தீவிரம்: வட மாநிலங்களில் கொட்டித்தீா்க்கும் மழை

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து, தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை கொட்டித் தீா்த்து வருகிறது. உத்தரகண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 கட்டுமானத் தொழிலாளா்கள் இறந்தனா். பொதுவாக ஜூன் 1-ஆம்... மேலும் பார்க்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ கட்சியிலிருந்து இடைநீக்கம்!

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி எம்எல்ஏ குன்வா் விஜய் பிரதாப் கட்சியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டாா். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான விஜய் பிரதாப், அமிருதசரஸ் வடக்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ளாா... மேலும் பார்க்க

அமா்நாத் யாத்திரை: சா்வதேச எல்லையில் தீவிர கண்காணிப்பு

ஜம்மு-காஷ்மீரில் சில தினங்களில் அமா்நாத் யாத்திரை தொடங்கவிருக்கும் நிலையில், சா்வதேச எல்லை நெடுகிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மோசமான வானிலை, எதிரிகளின் அச்சுறுத்தல், கடினமான சூழல் என பல... மேலும் பார்க்க