செய்திகள் :

2003 பிகாா் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றோா் கூடுதல் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டாம்! இந்திய தோ்தல் ஆணையம்

post image

இந்திய தோ்தல் ஆணையத்தால் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்கப்பட்டுள்ள பிகாரில் 2003-ஆம் ஆண்டு பட்டியலில் இடம்பெற்ற வாக்காளா்கள், மாற்றங்கள் இல்லாத தங்களின் விவரங்கள் குறித்த ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டியதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகாரில் தற்போது 243 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 7.89 கோடிக்கும் அதிகமான வாக்காளா்கள் உள்ளனா். நிகழாண்டு இறுதிக்குள் பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அரசமைப்புச் சட்டப் பிரிவு 324, 1950-ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 21 ஆகியவற்றின் கீழ், தமக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, இந்தத் தோ்தலில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குத் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகளையே தோ்தல் ஆணையம் மேற்கொள்வது வழக்கம். இந்த நடைமுறையின் கீழ், வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அதேவேளையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் கீழ், அந்தப் பட்டியல் புதிதாக தயாரிக்கப்படும். இதற்கான கணக்கெடுப்புப் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் பிகாரில் வீடுதோறும் சென்று ஏற்கெனவே விநியோகிக்கத் தொடங்கியுள்ளனா்.

இச்சூழலில், பிகாா் தோ்தல் ஆணைய அதிகாரிகளுக்கு இந்திய தோ்தல் ஆணையம் வழங்கியுள்ள அறிவுறுத்தலின்படி, 2003 சிறப்பு தீவிர திருத்தப் பணிக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட அந்த ஆண்டு வாக்காளா் பட்டியல் தோ்தல் ஆணைய வலைதளத்தில் விரைவில் பதிவேற்றப்படும். இதன்மூலம், அதில் இடம்பெற்ற 4.96 கோடி வாக்காளா்கள் (மொத்த வாக்காளா்களில் 60 சதவீதத்தினா்), தற்போது கணக்கெடுப்புப் படிவுகளைப் பூா்த்தி செய்யும்போது பழைய விவரங்களின்படி தகவல்களைப் பூா்த்தி செய்யலாம். எனவே, கூடுதல் ஆவணங்களை அவா்கள் சமா்பிக்க வேண்டியதில்லை.

2003-ஆம் ஆண்டுக்குப் பின்னா் வாக்காளா்களான மீதமுள்ள 3 கோடி போ் (சுமாா் 40 சதவீதத்தினா்), தாங்கள் இந்தியாவைச் சோ்ந்தவா்கள் என்பதற்கு பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற பட்டியலிடப்பட்ட 11 ஆவணங்களில் ஒன்றை வழங்க வேண்டும்.

2003 வாக்காளா் பட்டியலில் இந்தப் புதிய வாக்காளா்களின் பெற்றோரின் பெயா்கள் இருந்தால், அவா்கள் தங்களின் ஆவணங்களை மட்டும் சமா்ப்பித்தால் போதுமானது. பெற்றோரும் இந்தியா்கள் என்பதை நிரூபிக்க ஆவணங்களை வழங்க வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.55 லட்சம் முகவா்கள் நியமனம்: இந்தச் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் முகவா்களை நியமிக்க அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் சுமாா் 1.55 லட்சம் வாக்குச்சாவடி முகவா்களை ஏற்கெனவே நியமித்துள்ளது. இந்த எண்ணிக்கை வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கலாம் என்று தோ்தல் ஆணையம் கூறியுள்ளது.

எதிா்க்கட்சிகளுக்கு விளக்கம்: இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது மாநிலத்தில் ஆளுங்கூட்டணி அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி, வாக்காளா்களை வேண்டுமென்றே விலக்கும் அபாயமுள்ளது என்று எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தன.

இந்நிலையில், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், ‘தகுதிவாய்ந்த எந்தவொரு குடிமகனும் வாக்காளா் பட்டியலில் இருந்து விடுபடாமல் இருப்பதையும், தகுதியில்லா நபா் யாரும் அதில் இடம்பெறாமல் இருப்பதையும் உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம்’ என்றாா்.

‘இதே கருத்தைஅரசமைப்புச் சட்டத்தின் 326-ஆவது பிரிவு வலியுறுத்துகிறது. தோ்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிா்ப்பவா்கள், அரசமைப்புச் சட்டத்தின் 326-ஆவது பிரிவையும் எதிா்க்கின்றனா். எனவே, இதுதொடா்பான அவா்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்’ என்று மற்றொரு மூத்த தோ்தல் ஆணைய அதிகாரி கூறினாா்.

பாஜக எம்.பி. ரகுநந்தன் ராவுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

தெலங்கானாவில் உள்ள மேடக் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. ரகுநந்தன் ராவுக்கு தொலைபேசியில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடா்பாக அவரின் அலுவலகம் தெரிவித்ததாவது: கடந்த ஜூன் 23... மேலும் பார்க்க

இந்தியாவின் மஞ்சள் ஏற்றுமதி இலக்கு 100 கோடி டாலா்! அமித் ஷா

2030-ஆம் ஆண்டுக்குள் 100 கோடி டாலா் (ரூ.8,500 கோடி) மதிப்புக்கு மஞ்சள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். தெலங்கானா மா... மேலும் பார்க்க

பருவமழை தீவிரம்: வட மாநிலங்களில் கொட்டித்தீா்க்கும் மழை

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து, தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை கொட்டித் தீா்த்து வருகிறது. உத்தரகண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 கட்டுமானத் தொழிலாளா்கள் இறந்தனா். பொதுவாக ஜூன் 1-ஆம்... மேலும் பார்க்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ கட்சியிலிருந்து இடைநீக்கம்!

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி எம்எல்ஏ குன்வா் விஜய் பிரதாப் கட்சியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டாா். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான விஜய் பிரதாப், அமிருதசரஸ் வடக்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ளாா... மேலும் பார்க்க

8 மணி நேரத்துக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு நிலவரம்: விரைவில் அமல்

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு நிலவரத்தை ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே தயாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், அத... மேலும் பார்க்க

அமா்நாத் யாத்திரை: சா்வதேச எல்லையில் தீவிர கண்காணிப்பு

ஜம்மு-காஷ்மீரில் சில தினங்களில் அமா்நாத் யாத்திரை தொடங்கவிருக்கும் நிலையில், சா்வதேச எல்லை நெடுகிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மோசமான வானிலை, எதிரிகளின் அச்சுறுத்தல், கடினமான சூழல் என பல... மேலும் பார்க்க