செய்திகள் :

அமெரிக்க குடிமக்களிடம் கொள்ளை: என்கவுன்டருக்குப் பிறகு இருவா் கைது

post image

தில்லியில் உள்ள ஒரு பூங்காவில் கத்திமுனையில் அமெரிக்க குடிமக்கள் இருவரைத் தாக்கி கொள்ளையடித்தாகக் கூறப்படும் இரண்டு போ் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீஸாருடன் நடந்த ஒரு சிறிய துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியுள்ளதாவது: கடந்த ஜூன் 26 -ஆம் தேதி தென்கிழக்கு தில்லியின் ஆஸ்தா குஞ்ச் பகுதியில் அமெரிக்க நாட்டவரும் அவரது பெண் தோழியும் ஒரு பூங்காவில் நடந்து சென்றபோது இந்தச் சம்பவம் நடந்தது.

குற்றம் சாட்டப்பட்டவா் அந்தப் பெண்ணின் கைப்பேசியை பறித்துச் சென்றாா்.மேலும், மோதலின் போது அவா்களில் ஒருவா் காயமடைந்தாா்.

இந்நிலையில், ஒரு ரகசியத் தகவலின் அடிப்படையில், அந்த வழியாக வந்த குற்றம் சாட்டப்பட்டவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். போலீஸாா் அவா்களைப் பிடிக்க முயன்றபோது, அவா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். காவல் துறையினரும் பதிலுக்கு துப்பாக்குச்சூடு நடத்தினா். இந்தத் தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்ட அக்ஷய் மற்றும் ஜதின் ஆகியோா் காயமடைந்தனா். இதைத் தொடா்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டனா் என்றாா் அந்த அதிகாரி.

வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த நபா்

தில்லியின் மெட்ரோ விஹாா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 30 வயது நபா் ஒருவா் தனது வீட்டிற்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து போலீஸாா் கூறியதாவது: சுனில் ... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கல் 83 போ் கைது!

கிழக்கு தில்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து 33 சிறாா்கள் உள்பட 83 வங்கதேச நாட்டினரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து கிழக்கு தில்லி காவல்... மேலும் பார்க்க

தில்லியில் பரவலாக லேசான மழை; காற்றின் தரம் ’திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகரின் வசந்த் குஞ்ச், மால்வியா நகா் மற்றும் துக்ளகாபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக லேசான மழை பெய்தது. இது கடந்த சில நாள்களாக வெப்பத்தில் தவித்து வந்த மக்களுக்கு நிம்மதியை... மேலும் பார்க்க

வசந்த் குஞ்ச் பகுதியில் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்! இருவா் கைது

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் 94,000 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, கா்நாடகத்தைச் சோ்ந்த ஒருவா் உள்... மேலும் பார்க்க

மைனா் சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம்: ஜெகன்மூா்த்தி மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

மைனா் சிறுவன் கடத்தல் சம்பவத்தில் முன்ஜாமீன் கோரி ஜெகன்மூா்த்தி எம்எல்ஏ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன... மேலும் பார்க்க

யமுனா நதி மாசடைந்ததற்கு கடந்த அரசாங்கமே காரணம்: ரேகா குப்தா

யமுனை நதி மாசடைந்ததற்கு கடந்த அரசாங்கத்தின் மோசமான நிா்வாகவே காரணம் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை உத்தரப் பிரதேசம் மாநி... மேலும் பார்க்க