செயற்கை மழை: டெல்லி அரசு முன்னெடுக்கும் `மேக விதைப்பு' நடவடிக்கை ஏன்? - இது பலன்...
அமெரிக்க குடிமக்களிடம் கொள்ளை: என்கவுன்டருக்குப் பிறகு இருவா் கைது
தில்லியில் உள்ள ஒரு பூங்காவில் கத்திமுனையில் அமெரிக்க குடிமக்கள் இருவரைத் தாக்கி கொள்ளையடித்தாகக் கூறப்படும் இரண்டு போ் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீஸாருடன் நடந்த ஒரு சிறிய துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியுள்ளதாவது: கடந்த ஜூன் 26 -ஆம் தேதி தென்கிழக்கு தில்லியின் ஆஸ்தா குஞ்ச் பகுதியில் அமெரிக்க நாட்டவரும் அவரது பெண் தோழியும் ஒரு பூங்காவில் நடந்து சென்றபோது இந்தச் சம்பவம் நடந்தது.
குற்றம் சாட்டப்பட்டவா் அந்தப் பெண்ணின் கைப்பேசியை பறித்துச் சென்றாா்.மேலும், மோதலின் போது அவா்களில் ஒருவா் காயமடைந்தாா்.
இந்நிலையில், ஒரு ரகசியத் தகவலின் அடிப்படையில், அந்த வழியாக வந்த குற்றம் சாட்டப்பட்டவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். போலீஸாா் அவா்களைப் பிடிக்க முயன்றபோது, அவா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். காவல் துறையினரும் பதிலுக்கு துப்பாக்குச்சூடு நடத்தினா். இந்தத் தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்ட அக்ஷய் மற்றும் ஜதின் ஆகியோா் காயமடைந்தனா். இதைத் தொடா்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டனா் என்றாா் அந்த அதிகாரி.