செய்திகள் :

உத்தரகண்டில் மேக வெடிப்பு: 3 பேர் பலி, 6 பேர் மாயம்

post image

உத்தரகண்டில் ஏற்பட்ட மேக வெடிப்பில் 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம், பர்கோட்-யமுனோத்ரி சாலையில் உள்ள பாலிகார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேக வெடிப்பு ஏற்பட்டது. அப்போது ஹோட்டல் கட்டுமான தளத்தில் இருந்த 20 தொழிலாளர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் பலியானார்கள்.

மீட்புக் குழுக்கள் இதுவரை 11 தொழிலாளர்களை பத்திரமாக மீட்டுள்ளது. மற்ற ஆறு பேர் இன்னும் காணவில்லை. மாநில பேரிடர் மீட்புப் படை இடிபாடுகளில் இருந்து ஒரு உடலை மீட்ட நிலையில் மேலும் 18 கிலோமீட்டர் தொலைவில் இரண்டு உடல்களை போலீஸார் மீட்டனர்.

யமுனோத்ரி நெடுஞ்சாலையின் 10 மீட்டர் நீளம் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டு, புனித யாத்திரைத் தலத்திற்கான இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சார் தாம் யாத்திரையை மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது.

கர்வால் பிரிவு ஆணையர் வினய் சங்கர் பாண்டே இதனை உறுதிப்படுத்தினார். "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹரித்வார், ரிஷிகேஷ், ஸ்ரீநகர், ருத்ரபிரயாக், சோன்பிரயாக் மற்றும் விகாஸ்நகரில் யாத்ரீகர்களைத் தடுக்க காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்" என்று அவர் கூறினார்.

உத்தரகண்டின் மலை மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு முதல் இடைவிடாத, கனமழை பெய்து வருகிறது, இதனால் முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் ஆபத்தான அளவில் உயர்ந்துள்ளது. பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் பகுதிகள் வழியாகச் செல்லும் மந்தாகினி மற்றும் அலக்நந்தா ஆறுகள் தற்போது அபாய அளவைத் தாண்டி பாய்கின்றன.

எனவே, ஆற்றங்கரைகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Summary

The State Disaster Response Force (SDRF) recovered one body from the debris, and the police retrieved two bodies at a distance of 18 kilometres.

8 மணி நேரத்துக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு நிலவரம்!

உ.பி.யில் வாக்குவாதத்தில் காவலரை சுட்டுக்கொன்ற அரசுப் பள்ளி ஆசிரியர்

உத்தரப் பிரதேசத்தில் வாக்குவாதத்தின்போது காவலரை அரசுப் பள்ளி ஆசிரியர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சன்ஹேடா கிராமத்திற்கு விடுமுறையில் வீட்டிற்கு வந்த கா... மேலும் பார்க்க

ஓமனில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து: மீட்புப் பணியில் இந்திய கடற்படை!

ஓமனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த எண்ணெய் கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இந்திய கடற்படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.குஜராத் மாநிலம் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமனின் ஷினாஸ் துறைமு... மேலும் பார்க்க

தெலங்கானாவில் மருந்து ஆலையில் வெடிவிபத்து: 14 பேர் காயம்

தெலங்கானாவின், சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் திங்கள்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 14 பேர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.சங்கரெட்டி மாவட்டத்தில் மருந்து தயாரிக்கும் ஆலை... மேலும் பார்க்க

கேரள மாநில காவல்துறை தலைவராக ரவாடா சந்திரசேகர் நியமனம்

கேரளத்தின் புதிய காவல்துறை தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ரவாடா சந்திரசேகரை நியமிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

கட்டாக்கில் சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்து!

ஒடிசாவின் கட்டாக் ரயில் நிலையம் அருகேயுள்ள ஒரு யார்டில் சரக்கு ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இன்று காலை சுமார் 8.30 மணியளவில் பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகிச... மேலும் பார்க்க

கட்டாக்கில் தடம்புரண்ட சரக்கு ரயிலின் மூன்று பெட்டிகள்!

ஒடிசாவின் கட்டாக்கில் சரக்கு ரயிலின் மூன்று காலிப் பெட்டிகள் திங்கள்கிழமை திடீரென தடம்புரண்டன.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. காலை 8.30 மணியளவில... மேலும் பார்க்க