செய்திகள் :

'இது எங்க குழந்தைகளுடைய எலும்புத் துண்டுகள்' - 2 குழந்தைகள் கொன்று புதைத்த இளம்பெண் காதலனுடன் கைது

post image

கேரள மாநிலம் திருச்சூர் புதுக்காடு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு இளைஞர் ஒருவர் சென்றார். மது போதையில் இருந்த அந்த இளைஞர் ஆம்பல்லூரைச் சேர்ந்தவர் எனவும், தனது பெயர் பபின்(25) என்றும் கூறினார். பின்னர், சில எலும்புகளை காட்டி இது தனது இரண்டு குழந்தைகளின் எலும்புகள் என கூறினார். அதிர்ச்சி அடைந்த காவல்துறை அதிகாரிகள் போலீஸ் சர்ஜன் மூலம் எலும்புகளை பரிசோதித்தனர். அதில் பிறந்த பச்சிளம் குழந்தைகளின் எலும்புகள் என்பது உறுதி ஆனது.

கைதுசெய்யப்பட்ட பபின்

எதிர்காலத்தில் ஏமாற்றினால்..!

இதையடுத்து போலீஸ் விசாரணையில் பபின் கூறுகையில், "மட்டனூரைச் சேர்ந்த அனீஷா(22) என்ற இளம் பெண்ணுடன் 5 ஆண்டுகளுக்கு முன்பு முகநூலில் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்ததுடன், வீட்டுக்குத் தெரியாமல் நெருக்கமாக இருந்தோம். அதன் மூலம் 2 ஆண் குழந்தைகள் பிறந்தன. அனீஷா முதல் குழந்தையை கொலை செய்து தனது வீட்டுக்கு பின்புறம் புதைத்துவிட்டார். இரண்டவதாக பிறந்த குழந்தையின் மூச்சை நிறுத்திவிட்டு, பையில் போட்டு என்னிடம் கொண்டுவந்து தந்தார். நான் அந்த குழந்தையின் உடலை எனது வீட்டுக்கு அருகே புதைத்தேன். குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய சில கிரியைகள் செய்ய வேண்டும் எனக்கூறி முதல் குழந்தையின் எலும்புகளை அனீஷாவிடம் இருந்து வாங்கினேன். நான் புதைத்த 2-வது குழந்தையின் எலும்புகளையும் சேகரித்து பாதுகாப்பாக வைத்தேன். எதிர்காலத்தில் திருமணம் செய்யாமல் ஏமாற்றினால் ஆதாரமாக இருக்கட்டும் என அந்த எலும்புகளை வைத்திருந்தேன். இப்போது என்னை திருமணம் செய்யாமல் என்னிடம் வாக்குவாதம் செய்ததால் நான் காவல் நிலையத்துக்கு வந்துவிட்டேன்" என்றார்.

பெற்றோருக்கே தெரியாது..!

இதனை கேட்டு அதிர்ந்த புதுக்காடு போலீஸார் உடனடியாக மட்டனூருக்குச் சென்று அனீஷாவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் முதல் குழந்தை பிறந்தபோதே தொப்பிள் கொடி கழுத்தில் சுற்றியதில் இறந்துவிட்டது. இரண்டாவது குழந்தையை கொலைச்செய்தது உண்மைதான் என ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பின்னர் குழந்தைகளை புதைக்கப்பட்ட இடங்களுக்கு சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். பபினையும் அனீஷாவையும் போலீஸார் கைது செய்தன்ர். போலீஸார் கூறிய பிறகுதான் அனீஷா 2 குழந்தைகளை பெற்றதுடன் அவற்றை கொலை செய்த விபரம் பெற்றோருக்கே தெரியவந்துள்ளது. கொலையை நேரில் கண்ட சாட்சிகள் இல்லாததால் எலும்புத்துண்டுகளை டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி, லேப் ரிப்போர்ட் போன்ற ஆதாரங்களை சேகரிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட அனீஷா

இதுகுறித்து திருச்சூர் ரூரல் எஸ்.பி கிருஷ்ணகுமார் கூறுகையில், "பபினுக்கும், அனீஷாவுக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அப்போது பபினுக்கு 20 வயதும், அனீஷாவுக்கு 18 வயதும் ஆகியிருந்தது. இருவரும் காதலிகத் தொடங்கியதுடன் திருமணம் செய்யவும் முடிவு செய்தனர். காதலித்து ஓராண்டில் அனீஷா கர்ப்பமானார். 2021 நவம்பர் 6-ம் தேதி ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். உடனே குழந்தையை கொலைசெய்து, உடலை தனது வீட்டுக்கு பின்பக்கம் உள்ள இடத்தில் குழிதோண்டி புதைத்தார்.

இரண்டாவது முறையாக கர்ப்பமான அனீஷா 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி இரண்டாவதாக ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தையை கொலைசெய்து காதலன் பபினிடம் கொடுத்துள்ளார். குழந்தையின் உடலை தனது வீட்டுக்கு அருகே புதைத்துள்ளார் பபின். அவர்கள் மீது கொலை, ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Bengaluru: லிவ் இன் உறவில் வாழ்ந்த பெண் கொலை; சாக்கு மூட்டையில் கட்டி, குப்பை லாரியில் போட்ட இளைஞர்

பெங்களூரு மாநகராட்சி குப்பை லாரியில் எடுத்து வரப்பட்ட குப்பையில் சாக்குமூட்டை ஒன்று இருந்தது. அதனை துப்புரவு தொழிலாளர்கள் திறந்து பார்த்தபோது உள்ளே பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கை, கால்கள் கட... மேலும் பார்க்க

”தாய் உடலை அடக்கம் செய்ய முடியாத வறுமை”- மனநலம் பாதிக்கப்பட்ட மகன்கள் செய்த நெஞ்சை உலுக்கும் செயல்!

நாகப்பட்டினம் அருகே உள்ள வடக்கு பொய்கைநல்லூர் காந்தி மகான் கடற்கரை சாலையில் உள்ள தைல மரகாட்டில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் கடந்த 27ம் தேதி சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது. அந்த மூட்டையிலிருந்து து... மேலும் பார்க்க

சிவகங்கை: 'என் அண்ணன் முன்னாடி என்னையும் அரைமணிநேரம் அடிச்சாங்க' - உயிரிழந்த இளைஞரின் சகோதரர்

சிவகங்கை அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக... மேலும் பார்க்க

கஞ்சா வேட்டையில், `கைத்துப்பாக்கி விற்பனை' அம்பலம்.. பீகாரைச் சேர்ந்த இருவர் கைது - பின்னணி என்ன?

திருப்பூர் மாநகரப் பகுதி முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது குறித்து தனிப்பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக க... மேலும் பார்க்க

`பேட் வேட்ஸ் பேசினால் அவனுக்குப் பிடிக்காது' - திட்டிய ஆசிரியர்; பள்ளி மாணவன் தற்கொலை; தாய் கதறல்

தஞ்சாவூர் மாதாகோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் சீனிவாசன்-மணிமேகலை தம்பதி. இவர்களின் ஒரே மகன் ஸ்ரீராம். இவர் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந... மேலும் பார்க்க

Poaching: குவியல் குவியலாக புள்ளிமான் சடலங்கள், துப்பாக்கிகள் - வனத்துறை அதிர்ச்சி; என்ன நடந்தது?

வன வளம் நிறைந்த தென்னிந்திய காடுகளில் வனக்குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேவேளையில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வனவிலங்கு வேட்டை நடைபெற்று வருகிறது. வேட்டைக் கும்பலை ஒழித்துக்கட்ட மும்ம... மேலும் பார்க்க