செய்திகள் :

Bengaluru: லிவ் இன் உறவில் வாழ்ந்த பெண் கொலை; சாக்கு மூட்டையில் கட்டி, குப்பை லாரியில் போட்ட இளைஞர்

post image

பெங்களூரு மாநகராட்சி குப்பை லாரியில் எடுத்து வரப்பட்ட குப்பையில் சாக்குமூட்டை ஒன்று இருந்தது. அதனை துப்புரவு தொழிலாளர்கள் திறந்து பார்த்தபோது உள்ளே பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தது.

பதறிய துப்புரவு தொழிலாளர்கள் இது குறித்து உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

குப்பை வண்டி வந்த பகுதி மற்றும் அந்த வண்டி எந்த பகுதியில் குப்பைகளை எடுத்தது என்பது குறித்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

இதில் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சாக்குமூட்டையை எடுத்து வந்து குப்பை லாரியில் போட்டுச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஆஷா என்று தெரிய வந்தது. அப்பெண்ணுடன் மொகமத் ஷாம்சுதின்(33) என்பவர் தெற்கு பெங்களூருவில் வாடகைக்கு வீடு எடுத்து லிவ் இன் உறவில் வசித்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. அஸ்ஸாமை சேர்ந்த மொகமத்தை போலீஸார் உடனே கைது செய்து விசரணை நடத்தினர்.

அவரிடம் நடத்திய விசாரணை குறித்து போலீஸ் துணை கமிஷனர் லோகேஷ் கூறுகையில், ''இருவரும் ஒன்றரை ஆண்டுகளாக லிவ் இன் உறவில் வாழ்ந்துள்ளனர். ஆஷா தனியார் நிறுவனம் ஒன்றில் ஹவுஸ்கீப்பிங் ஊழியராக பணியாற்றி வந்தார். இருவருக்கும் ஏற்கெனவே திருமணமாகி தலா இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவரவர் ஊரில் அவர்களது குடும்பம் இருக்கிறது.

வேலைக்கு வந்த இடத்தில் இருவரும் தங்களை வெளியுலகில் கணவன் மனைவியாக காட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் இடையே இரவில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது கைகலப்பில் முடிந்தது.

கோபம் அடைந்த மொகமத் ஆஷாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார். உடலை சாக்குமூட்டையில் கட்டி இரு சக்கர வாகனத்தில் எடுத்து வந்து அப்பகுதியில் நின்ற குப்பை லாரியில் தூக்கி போட்டுச் சென்றுள்ளார்" என்று தெரிவித்தார்.

”தாய் உடலை அடக்கம் செய்ய முடியாத வறுமை”- மனநலம் பாதிக்கப்பட்ட மகன்கள் செய்த நெஞ்சை உலுக்கும் செயல்!

நாகப்பட்டினம் அருகே உள்ள வடக்கு பொய்கைநல்லூர் காந்தி மகான் கடற்கரை சாலையில் உள்ள தைல மரகாட்டில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் கடந்த 27ம் தேதி சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது. அந்த மூட்டையிலிருந்து து... மேலும் பார்க்க

சிவகங்கை: 'என் அண்ணன் முன்னாடி என்னையும் அரைமணிநேரம் அடிச்சாங்க' - உயிரிழந்த இளைஞரின் சகோதரர்

சிவகங்கை அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக... மேலும் பார்க்க

கஞ்சா வேட்டையில், `கைத்துப்பாக்கி விற்பனை' அம்பலம்.. பீகாரைச் சேர்ந்த இருவர் கைது - பின்னணி என்ன?

திருப்பூர் மாநகரப் பகுதி முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது குறித்து தனிப்பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக க... மேலும் பார்க்க

`பேட் வேட்ஸ் பேசினால் அவனுக்குப் பிடிக்காது' - திட்டிய ஆசிரியர்; பள்ளி மாணவன் தற்கொலை; தாய் கதறல்

தஞ்சாவூர் மாதாகோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் சீனிவாசன்-மணிமேகலை தம்பதி. இவர்களின் ஒரே மகன் ஸ்ரீராம். இவர் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந... மேலும் பார்க்க

Poaching: குவியல் குவியலாக புள்ளிமான் சடலங்கள், துப்பாக்கிகள் - வனத்துறை அதிர்ச்சி; என்ன நடந்தது?

வன வளம் நிறைந்த தென்னிந்திய காடுகளில் வனக்குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேவேளையில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வனவிலங்கு வேட்டை நடைபெற்று வருகிறது. வேட்டைக் கும்பலை ஒழித்துக்கட்ட மும்ம... மேலும் பார்க்க

'இது எங்க குழந்தைகளுடைய எலும்புத் துண்டுகள்' - 2 குழந்தைகள் கொன்று புதைத்த இளம்பெண் காதலனுடன் கைது

கேரள மாநிலம் திருச்சூர் புதுக்காடு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு இளைஞர் ஒருவர் சென்றார். மது போதையில் இருந்த அந்த இளைஞர் ஆம்பல்லூரைச் சேர்ந்தவர் எனவும், தனது பெயர் பபின்(25) என்றும் கூறினார்... மேலும் பார்க்க