செய்திகள் :

”தாய் உடலை அடக்கம் செய்ய முடியாத வறுமை”- மனநலம் பாதிக்கப்பட்ட மகன்கள் செய்த நெஞ்சை உலுக்கும் செயல்!

post image

நாகப்பட்டினம் அருகே உள்ள வடக்கு பொய்கைநல்லூர் காந்தி மகான் கடற்கரை சாலையில் உள்ள தைல மரகாட்டில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் கடந்த 27ம் தேதி சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது. அந்த மூட்டையிலிருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் அதை பார்த்தவர்கள் நாகை நகர போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து டி.எஸ்.பி ராமச்சந்திரமூர்த்தி தலைமையில் வந்த போலீஸார் சாக்கு மூட்டையை பிரித்து பார்த்துள்ளனர்.

வீடு

இதில் அழுகிய நிலையில் பெண் உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர் போலீஸார். அந்த பெண் யார், அவரை யாராவது கொலை செய்து சாக்கில் கட்டி வீசினார்களா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை செய்தனர். மேலும் மருத்துவக் குழுவினர் மூலம் ஸ்பாட்டிலேயே உடற்கூறாய்வும் செய்தனர். அத்துடன் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சாக்கு மூட்டையில் இருந்த பெண்ணின் உடல் வேளாங்கண்ணி ஆரியநாட்டு தெருவைச் சேர்ந்த மும்தாஜ் (75) என்பது தெரியவந்தது. மேலும் போலீஸ் நடத்திய விசாரணையில், நெஞ்சை உலுக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீனவர்கள் குடியிருக்கின்ற ஆரியநாட்டுத்தெருவில் வாடகை வீட்டில் வசித்தவர் உசேன். இவரது மனைவி மும்தாஜ். இவர்களுக்கு ஜீனத்தம்மாள் (54) என்ற மகள், சையது (45), சுல்தான் இப்ராஹிம் (43) ஆகிய இரு மகன்கள் என மொத்தம் மூன்று பிள்ளைகள்.

சாக்கில் உடல்

இதில் மூன்று பேரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பது பெரும் துயரம். உசேன் டீ கடையில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருடைய வருமானத்தில் மொத்த குடும்பம் நகர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்ரம் மாதம் உசேன் வயது முதிர்வு காரணமாக உசேன் உயிரிழக்க மொத்த குடும்பமும் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவித்துள்ளது. சோத்துக்கு கூட வழியில்லாத நிலையில் இருந்துள்ளனர். பின்னர் வேளாங்கண்ணியில் உள்ள டீ கடை ஒன்றில் இரண்டு மகன்களும் வேலை செய்ததாகவும் அதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வயது முதிர்வில் மும்தாஜ் உயிரிழந்திருக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளை தாங்கி பிடித்து கொண்டிருந்த மும்தாஜ் இறப்பு மூன்று பேரையும் நிலைகுலையச் செய்திருக்கிறது. வாழ்வதற்கு வழியில்லை, அடக்கம் செய்வதற்கு வசதியில்லாத வறுமையின் சூழலில் இருந்தவர்கள் சில தினங்கள் தன் தாயின் உடலை வீட்டுக்குள் வைத்திருந்ததாக தெரிகிறது. பின்னர் உடலை சாக்கு மூட்டையில் கட்டியுள்ளனர்.

உயிரிழந்த மும்தாஜ் உடல்

இதையடுத்து இரண்டு மகன்களும் தாய் உடலை சுமந்து சென்று தலைமரக்காட்டில் உள்ள குப்பைக்குள் போட்டு விட்டு வந்துள்ளனர். இது தப்பு என்பது கூட தெரியாத நிலையில் அவர்கள் இருப்பது கொடுமையின் உச்சம். போலீஸ் நடத்திய விசாரணையில் இது தெரிய வந்துள்ளது. போலீஸிடமும், பணம் இல்லை அதனால் சாக்கில் கட்டி போட்டு விட்டோம் என சொல்லியுள்ளனர். விசாரணை டீமில் இருந்த போலீஸாரும் இவர்களது நிலையை எண்ணி வருந்தியுள்ளனர். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த போலீஸ் அவர்களை விடுவிக்க தற்போது வீட்டில் இருக்கின்றனர்.

மேலும் சிலரோ, பள்ளி வாசல், ஜமாத் என யாருடனும் தொடர்பில் இல்லாததால் இவர்களது நிலை குறித்து யாருக்கும் தெரியவில்லை. உசேன் இறந்த போது கூட அடக்கம் செய்வதற்கு பொருளாதாரம் இல்லாததால் சில நாட்கள் வரை உடலை வீட்டில் வைத்திருந்தனர். பின்னர் துர்நாற்றம் வீசிய நிலையில் சிலரது உதவியுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது. மும்தாஜ் இறந்தபோதும் தற்போதும் அதே வறுமை அவர்களை துரத்திக் கொண்டிருக்க இந்த முடிவை எடுத்துள்ளனர். உடற்கூறாய்வு செய்யப்பட்ட மும்தாஜ் உடலை அடக்கம் செய்வதற்கும், மூன்று பேரையும் மன நல காப்பகத்தில் சேர்ப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

சென்னை: சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தாரா போலீஸ் எஸ்.ஐ? - தந்தை பகீர் குற்றச்சாட்டு!

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். கட... மேலும் பார்க்க

வரதட்சணை: 'என் புள்ளைக்கு நடந்த மாதிரி யாருக்கும் நடக்கக் கூடாது' - கண்ணீர் விட்டு கதறும் தந்தை

திருப்பூர் அருகே, `கணவர் மற்றும் மாமனார், மாமியாரின் வரதட்சணை கொடுமைத் தாங்க முடியவில்லை' எனக் கூறி திருமணமான இரண்டே மாதங்களில் ரிதன்யா என்ற இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்ப... மேலும் பார்க்க

Bengaluru: லிவ் இன் உறவில் வாழ்ந்த பெண் கொலை; சாக்கு மூட்டையில் கட்டி, குப்பை லாரியில் போட்ட இளைஞர்

பெங்களூரு மாநகராட்சி குப்பை லாரியில் எடுத்து வரப்பட்ட குப்பையில் சாக்குமூட்டை ஒன்று இருந்தது. அதனை துப்புரவு தொழிலாளர்கள் திறந்து பார்த்தபோது உள்ளே பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கை, கால்கள் கட... மேலும் பார்க்க

சிவகங்கை: 'என் அண்ணன் முன்னாடி என்னையும் அரைமணிநேரம் அடிச்சாங்க' - உயிரிழந்த இளைஞரின் சகோதரர்

சிவகங்கை அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக... மேலும் பார்க்க

கஞ்சா வேட்டையில், `கைத்துப்பாக்கி விற்பனை' அம்பலம்.. பீகாரைச் சேர்ந்த இருவர் கைது - பின்னணி என்ன?

திருப்பூர் மாநகரப் பகுதி முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது குறித்து தனிப்பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக க... மேலும் பார்க்க

`பேட் வேட்ஸ் பேசினால் அவனுக்குப் பிடிக்காது' - திட்டிய ஆசிரியர்; பள்ளி மாணவன் தற்கொலை; தாய் கதறல்

தஞ்சாவூர் மாதாகோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் சீனிவாசன்-மணிமேகலை தம்பதி. இவர்களின் ஒரே மகன் ஸ்ரீராம். இவர் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந... மேலும் பார்க்க