செய்திகள் :

"தண்டனையை விரைவாகப் பெற்றுத் தந்து நீதியை நிலைநாட்டும் திராவிட மாடல் அரசு" - முதல்வர் ஸ்டாலின்

post image

திருப்புவனம் லாக்கப் டெத் சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலுக்குச் சென்ற திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா, தனது காரிலிருந்து 10 பவுன் நகை காணாமல் போய்விட்டதாகத் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

அந்தப் புகாரின்படி, கோயில் காவலாளி அஜித்குமாரை (வயது 27) விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்ற போலீஸார் அவரைக் கடுமையாகத் தாக்கியதில், அஜித்குமார் உயிரிழந்தார்.

திருப்புவனம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமார்
திருப்புவனம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமார்

இதில் சம்பந்தப்பட்ட போலீஸார் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.

அதேசமயம் எதிர்க்கட்சிகள், `ஏன் அந்த போலீஸாரை கைதுசெய்யவில்லை? எஃப்.ஐ.ஆர் ஏன் பதிவுசெய்யவில்லை?' உள்ளிட்ட கேள்விகளை அடுக்கி, `இதைக் கொலை வழக்காக விசாரிக்க வேண்டும்' என வலியுறுத்தி வருகின்றன.

இத்தகைய சூழலில், சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காவல்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்
சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், "குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்! மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவர் ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரே ஆனாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும் ஆட்சியாகத்தான் திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது.

"போதைப் பொருள் - கள்ளச்சாராயம் - பெண்கள் பாதுகாப்பு - லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிகக் கடுமையாக இருக்கும்” என்பதைச் சட்டம் - ஒழுங்கு குறித்த இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்." என்று ட்வீட் செய்திருக்கிறார்.

`லாக் அப் மரணங்களில் தென் மாநில அளவில் திமுக அரசு முதலிடத்தில் உள்ளது' - ஆர்.பி.உதயகுமார்

"தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சியா? இல்லை, காட்டுமிராண்டி ஆட்சியா?" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுள்ளார்.திருப்புவனம் லாக்கப் டெத் - உயிரிழந்த இளைஞர் அஜித்குமார்இது தொடர்பாக அவர் வெ... மேலும் பார்க்க

திருப்புவனம் லாக்கப் டெத்: "மிளகாய்ப் பொடி நீர், இரும்புக் கம்பி தாக்குதல்" - நயினாரின் 9 கேள்விகள்

திருப்புவனம் லாக்கப் டெத் சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலுக்குச் சென்ற திருமங்கலத்தைச் சேர... மேலும் பார்க்க

PMK: "அன்புமணி தான் எதிர்காலம், ஆனால்..." - பாமக MLA அருள் சொல்வதென்ன?

பாமக கட்சியில் நடைபெற்றுவரும் தந்தை மகன் பூசலுக்கு மத்தியில் தேர்தல் கூட்டணி அமைப்பது பற்றிய நெருக்கடிகள் எழுந்துள்ளன. இதற்கிடையில் கடந்த வாரம் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருளுக்கு மாநில ... மேலும் பார்க்க

ADMK : 'கூட்டணி ஆட்சி; கறாராக 'நோ' சொல்லும் எடப்பாடி! - பின்வாங்குமா பா.ஜ.க?

'கூட்டணி ஆட்சி சர்ச்சை!'அதிமுக - பா.ஜ.க கூட்டணி அறிவிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சைகளுக்கு குறைவில்லை. ஏப்ரல் 11 ஆம் தேதியன்று கூட்டணிக்காக கைக்குலுக்கிய சமயத்திலேயே தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் எனக... மேலும் பார்க்க

தெலங்கானா: வேதிப் பொருள் தொழிற்சாலையில் வெடி விபத்து; 8 தொழிலாளர்கள் பலி, 26 பேர் காயம்!

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள பாஷமிலராம் தொழில்துறைப் பகுதியில், வேதிப் பொருட்கள் தொழிற்சாலை வெடித்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர், 26-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சிகாச்சி கெ... மேலும் பார்க்க

சாலை ஓரத்தில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் சென்னையின் முன்னாள் மேயர் சிலை! - கவனிக்குமா மாநகராட்சி?

நீதிக் கட்சியின் நிறுவன தலைவர்களில் ஒருவர், இந்தியக் குடியரசுக் கட்சியின் முதல் தலைவர், டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோருடன் பயணித்து அரசியல் செய்தவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என ஏகப்ப... மேலும் பார்க்க