செய்திகள் :

PMK: "அன்புமணி தான் எதிர்காலம், ஆனால்..." - பாமக MLA அருள் சொல்வதென்ன?

post image

பாமக கட்சியில் நடைபெற்றுவரும் தந்தை மகன் பூசலுக்கு மத்தியில் தேர்தல் கூட்டணி அமைப்பது பற்றிய நெருக்கடிகள் எழுந்துள்ளன.

இதற்கிடையில் கடந்த வாரம் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருளுக்கு மாநில அளவிலான இணைப் பொதுச்செயளாலர் பதவியை வழங்கினார் ராமதாஸ். அன்றைய தினமே அருள் வகித்துவந்த மாவட்ட செயலாளர் பதவியில் வேறொருவரை அமர்த்தினார்.

"ஐயா (ராமதாஸ்) மட்டுமே பதவி கொடுக்கவும், பறிக்கவும் முடியும்" என அருள் பேசிவரும் சூழலில், தானே கட்சியின் தலைவர் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறார் அன்புமணி ராமதாஸ்.

ராமதாஸ்
ராமதாஸ்

இந்த சூழலில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அருள் ராமதாஸ் தலைமையில் கூட்டணி அமையும் எனப் பேசியிருக்கிறார்.

"'தமிழ்நாடு மக்கள், பாமக தொண்டர்கள் விரும்பும் கூட்டணி அமையும். நான் அமைக்கும் கூட்டணியை அறிந்த உடன் வயதானவர்கள் கூட துள்ளி குதிப்பார்கள்.' என ஐயா (ராமதாஸ்) என்னிடம் கூறினார்.

கூட்டணி அமைப்பதற்கான முழு அதிகாரமும் ஐயாவுக்குதான் இருக்கிறது. கலைஞர், ஜெயலலிதா காலம் முதல் 2024ல் பாஜக-வுடன் அமைக்கப்பட்ட கூட்டணி வரை எல்லா கூட்டணிக்கும் ஐயாதான் கையொப்பமிட்டுள்ளார்." என்றார்.

ராமதாஸ், அன்புமணி

அன்புமணி அமித் ஷாவால் இயக்கப்படுகிறார் எனப் பரவும் கருத்துகள் பற்றி பதிலளிக்காமல் கடந்தார் அருள்.

மாநாட்டுக்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படுமா எனக் கேட்டபோது, "நிச்சயமாக. அவர் இல்லாமல் எப்படி மாநாடு நடத்துவோம். எங்களுக்கு எதிர்காலம் அவர்தான் (அன்புமணி). ஆனால் நிகழ்காலத்தை கடந்துதான் (எதிர்காலத்துக்கு) செல்ல வேண்டும். எதிர்காலமும் முக்கியம் நிகழ்காலமும் முக்கியம்." எனப் பதிலளித்தார் அருள்.

மேலும் அன்புமணி தனது பதவியை பறித்தது குறித்து, "ஒரு காவல் அதிகாரி உயர் பதவிக்கு செல்லும்போது அவரது காலி இடத்துக்கு மற்றொருவர் அமரவைக்கப்படுவது வழக்கம்தானே" எனக் கூறியுள்ளார்.

`லாக் அப் மரணங்களில் தென் மாநில அளவில் திமுக அரசு முதலிடத்தில் உள்ளது' - ஆர்.பி.உதயகுமார்

"தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சியா? இல்லை, காட்டுமிராண்டி ஆட்சியா?" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுள்ளார்.திருப்புவனம் லாக்கப் டெத் - உயிரிழந்த இளைஞர் அஜித்குமார்இது தொடர்பாக அவர் வெ... மேலும் பார்க்க

திருப்புவனம் லாக்கப் டெத்: "மிளகாய்ப் பொடி நீர், இரும்புக் கம்பி தாக்குதல்" - நயினாரின் 9 கேள்விகள்

திருப்புவனம் லாக்கப் டெத் சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலுக்குச் சென்ற திருமங்கலத்தைச் சேர... மேலும் பார்க்க

"தண்டனையை விரைவாகப் பெற்றுத் தந்து நீதியை நிலைநாட்டும் திராவிட மாடல் அரசு" - முதல்வர் ஸ்டாலின்

திருப்புவனம் லாக்கப் டெத் சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலுக்குச் சென்ற திருமங்கலத்தைச் சேர... மேலும் பார்க்க

ADMK : 'கூட்டணி ஆட்சி; கறாராக 'நோ' சொல்லும் எடப்பாடி! - பின்வாங்குமா பா.ஜ.க?

'கூட்டணி ஆட்சி சர்ச்சை!'அதிமுக - பா.ஜ.க கூட்டணி அறிவிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சைகளுக்கு குறைவில்லை. ஏப்ரல் 11 ஆம் தேதியன்று கூட்டணிக்காக கைக்குலுக்கிய சமயத்திலேயே தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் எனக... மேலும் பார்க்க

தெலங்கானா: வேதிப் பொருள் தொழிற்சாலையில் வெடி விபத்து; 8 தொழிலாளர்கள் பலி, 26 பேர் காயம்!

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள பாஷமிலராம் தொழில்துறைப் பகுதியில், வேதிப் பொருட்கள் தொழிற்சாலை வெடித்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர், 26-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சிகாச்சி கெ... மேலும் பார்க்க

சாலை ஓரத்தில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் சென்னையின் முன்னாள் மேயர் சிலை! - கவனிக்குமா மாநகராட்சி?

நீதிக் கட்சியின் நிறுவன தலைவர்களில் ஒருவர், இந்தியக் குடியரசுக் கட்சியின் முதல் தலைவர், டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோருடன் பயணித்து அரசியல் செய்தவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என ஏகப்ப... மேலும் பார்க்க