செய்திகள் :

"ரூ.100 கோடி பிராஜெக்ட்; விபத்துக்காகவே ஒரு சாலை..." - மரங்களை நடுவே அப்படியே விட்டு போடப்பட்ட சாலை!

post image

பீகாரில் ரூ. 100 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்க திட்டத்தின் ஒருபகுதியாக மாவட்ட நிர்வாகம், தலைநகர் பாட்னாவிலிருந்து 50 கி.மீ தொலைவிலுள்ள ஜெகனாபாத்தில் சாலையின் நடுவே உள்ள விபத்து ஏற்படும் வகையில் இருக்கும் மரங்களை அப்படியே விட்டுவிட்டு சாலை விரிவாக்கம் செய்து 7.48 கி.மீ தொலைவுக்கு சாலை போட்டிருப்பது விமர்சனத்துக்குள்ளாகிறது.

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் சாலை விரிவாக்கம் செய்வதற்கு முன்பாக, சாலையின் நடுவிலிருக்கும் மரங்களை அகற்ற உரிய அனுமதி பெறுவதற்காக வனத்துறையை மாவட்ட நிர்வாகம் அணுகியது.

Accident (Representational Image)

அப்போது வனத்துறை அதற்கு ஈடாக 14 ஹெக்டேர் நிலத்துக்கான இழப்பீட்டைக் கோரியது.

மாவட்ட நிர்வாகத்தால் வனத்துறை கேட்ட இழப்பீட்டைத் தர முடியாததால், மரங்களை வெட்டுவதற்கான அனுமதியும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

இதனால், மாவட்ட நிர்வாகம் அந்த மரங்களை அப்படியே விட்டுவிட்டு சாலை போட்டிருக்கிறது.

பாட்னா-கயா பிரதான சாலையில் போடப்பட்டிருக்கும் இந்த 7.48 கி.மீ சாலை நெடுகிலும் நடுவே மரங்கள் இருக்கின்றன.

பீகார் - சாலை
பீகார் - சாலை

அதுவும், மரங்கள் ஒரே நேர்கோட்டில் இருந்தால்கூட கொஞ்சம் விபத்து நடைபெறாமல் இருக்க வாய்ப்பிருக்கிறது.

அதுவுமேகூட ஆபத்துதான். ஆனால், இந்தச் சாலையில் மரங்கள் குறுக்கு மறுக்காக இருக்கிறது.

இதனால், வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கிடையிலான பிரச்னையில் வாகன ஓட்டிகளின் உயிருடன் விளையாடும் வகையில் சாலை போடுவதா என பலரும் கேள்வியெழுப்பிவருகின்றனர்.

ஆனாலும், வனத்துறையோ அல்லது மாவட்ட நிர்வாகமோ இதுவரையில் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அந்த மரங்களை அகற்ற முன்வரவில்லை.

நீலகிரி: சுடுகாடு கேட்ட நபர், `வீடு கட்டிக்கொடுக்கும் திட்டம் இல்லை'- அதிகாரிகள் குதர்க்கமான‌ பதில்!

நீலகிரி மாவட்டம், குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட மஞ்சூரை அடுத்து தொட்டக்கொம்பை, பாரதிநகர், சேரனூர் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. ஏழை எளிய மக்கள் வாழ்ந்து வரும் இந்த பகுதியில் முறையான மயானம் கிடையாது என்ப... மேலும் பார்க்க

கடலூர்: `அலட்சிய சிகிச்சை... முறையிட்டால் மிரட்டல்!' - அரசு மருத்துவரிடம் விசாரணை!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறு காயங்களுடன் சிறுவன் ஒருவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சிறுவனை பரிசோதித்து, மருத்துவர் வழங... மேலும் பார்க்க

செயற்கை மழை: டெல்லி அரசு முன்னெடுக்கும் `மேக விதைப்பு' நடவடிக்கை ஏன்? - இது பலன் தருமா?

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக செயற்கை மழையை பொழியவைக்க டெல்லி அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த மழைக்காக ஜூலை 4 முதல் 11-ம் தேதிவரை மேக விதைப்பு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.... மேலும் பார்க்க

Kerala: `கருவிகள் இல்லாமல் அறுவை சிகிச்சை முடக்கம்' - மருத்துவர் குற்றச்சாட்டு; அரசின் பதில் என்ன?

கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உபகரணங்கள் இல்லாததால் அறுவை சிகிச்சைகள் செய்யமுடியாமல் முடங்கி உள்ளதாக சிறுநீரகத்துறை தலைமை மருத்துவர் குற்றம் சாட்ட... மேலும் பார்க்க

கீழடி: ``2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகங்கள்..'' - வடிவமைத்த இங்கிலாந்து பல்கலைக்கழகம்!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2014-ம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் மேற்கொண்ட அகழாய்வு அறிக்கைகளை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மத்திய தொல்லியல் துறைக்கு அனுப்பினா... மேலும் பார்க்க