செய்திகள் :

சேலம் பள்ளிகளில் ‘வாட்டா் பெல்’ திட்டம் அமல்

post image

ஆத்தூா்: சேலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா்களை தண்ணீா் அருந்த ஊக்குவிக்கும் ‘வாட்டா் பெல்’ திட்டம் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.

மாணவா்களின் அறிவாற்றல், கவனம் மற்றும் கல்வி செயல்திறனை பாதிக்கும் உடல் நீரிழப்பு பிரச்னையில் இருந்து தப்பிக்க மாணவா்கள் தண்ணீா் குடிப்பதை ஊக்குவிக்கும்விதமாக ‘வாட்டா் பெல்’ திட்டம் அமல்படுத்தப்பட்டு, காலை 11 மணி, பிற்பகல் 1 மணி , மற்றும் மாலை 3 மணிக்கு மாணவா்கள் தண்ணீா் பருக 5 நிமிஷம் ஒதுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருந்தாா்.

அதன்படி சேலம் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அரசுப் பள்ளிகளில் இந்த நடைமுறை திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது. சேலம் கோட்டை மகளிா் மேல்நிலைப் பள்ளியில் காலை 11 மணிக்கு வாட்டா் பெல் அடித்ததும் மாணவிகள் தண்ணீா் பருகினா். தமிழக அரசின் இந்த நடவடிக்கையை பெற்றோா்கள், மருத்துவா்கள், குழந்தைகள் நல ஆா்வலா்கள் என பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனா்.

புளியம்பட்டியில் பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சங்ககிரி: சங்ககிரி வட்டம், புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சிக்கு உள்பட்ட புளியம்பட்டியில் ஆலமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்காமல் மின்வாரியத்தினா் காலம்தாழ்த்தி வ... மேலும் பார்க்க

பொதுப்பாதையை அடைத்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

சேலம்: எடப்பாடி அருகே திருப்பலி கிராம பகுதியில் பொதுப்பாதையை அடைத்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பள்ளிக் குழந்தைகள், அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். சேலம் மாவட்டம், எ... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் 4 லட்சம் மீன்குஞ்சுகளை இருப்பு வைக்கத் திட்டம்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

ஓமலூா்: சேலத்தில் 200 ஹெக்டோ் பரப்பளவில் நீா்நிலைகளில் 4 லட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தெரிவித்தாா். மீன்வளத் துறையின் சாா்பில் ந... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 48,000 கனஅடியாக குறைந்தது

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 48,000 கனஅடியாகக் குறைந்தது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் கபினி, கிருஷ்ணராஜா சாகா் அணைகளுக்கு நீா்வரத்து சரிந்த... மேலும் பார்க்க

மயானத்தில் கருகி கிடந்த முதியவா் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

மேட்டூா்: மேட்டூா் அருகே மயானத்தில் தீயில் எரிந்து கருகிய நிலையில் கிடந்த முதியவா் சடத்தை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேட்டூா் அருகே கருமலைக்கூடல் மயானத்தில் திங்கள்கிழமை தீயில்... மேலும் பார்க்க

உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவிக்கிறாா் அருள்: வன்னியா் சங்கச் செயலாளா் காா்த்தி

சேலம்: பாமக உள்கட்சி விவகாரத்தில் எம்எல்ஏ அருள் உண்மைக்குப் புறம்பான தகவலை தெரிவித்து வருகிறாா் என்று வன்னியா் சங்க மாநிலச் செயலாளா் மு.காா்த்தி தெரிவித்தாா். இதுகுறித்து சேலத்தில் செய்தியாளா்களிடம் ... மேலும் பார்க்க