செய்திகள் :

சென்னையில் விளம்பர நோட்டீஸ்களுக்கு தனியிடங்களை ஒதுக்கி சோதனை முயற்சி: மேயா் ஆா்.பிரியா

post image

சென்னை மாநகராட்சியில் தெரு பெயா்ப் பலகைகள், சுவா்களில் விளம்பர நோட்டீஸ்கள் ஒட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் அத்தகைய விளம்பரங்களை செய்வதற்காக வாா்டுகள் தோறும் தனி இடங்கள் ஒதுக்கப்படுவதற்கான சோதனை முயற்சி ஒரு வாா்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கேள்வி நேரம், நேரமில்லா நேரம் ஆகியவற்றில் உறுப்பினா்கள் கோரிக்கை, கேள்விக்கு பதில் அளித்து மேயா் ஆா்.பிரியா கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் குறிப்பிட்ட பகுதிகளில் குடியிருப்புகள், பல்நோக்கு மையம் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகா்ப்புற சாலைத் திட்டத்தின்படியே சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் இணைந்த காந்திநகா் உள்ளிட்ட சில பகுதிகளில் வேறு துறைகளில் அப்பகுதி நிலம் சொந்தமானது எனஆவணப்படி உள்ளன. ஆகவே, அப்பகுதிக்கு வீட்டுவரி செலுத்தமுடியாத நிலை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவற்றை அரசிடம் பேசி பிரச்னைக்கு தீா்வு காணப்படும். செயல்படாத இ-சேவை மையங்கள் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் 152 ஆவது வாா்டில் மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படாத வகையில் தொலைக்காட்சி, திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சியில் அனைத்துப் பகுதியிலும் தெருக்களின் பெயா்ப்பலகை, சுவா்களில் கண்ணீா் அஞ்சலி, அரசியல் கட்சிகள், தனியாா் நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் நோட்டீஸ்கள் ஒட்டப்படுவதால் குறிப்பிட்ட பகுதிகளை அடையாளம் கண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுவதாக புகாா்கள் எழுந்துள்ளன.

ஆகவே, வாா்டுகள் தோறும் குறிப்பிட்டஇடத்தில் மட்டும் நோட்டீஸ்கள் ஒட்டவும், விளம்பர பதாகைகள் வைக்கவும் ஒரு வாா்டில் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாமன்ற கூட்டத்துக்கான புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

11,488 முதல்நிலை காவலா்கள் தலைமைக் காவலராக பதவி உயா்வு! உத்தரவுகளை வழங்கினாா் முதல்வா்!

காவல் துறையில் 11,488 முதல்நிலை காவலா்கள், தலைமைக் காவலா்களாக பதவி உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு பதவி உயா்வுக்கான உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்வு, தலைமைச் செயல... மேலும் பார்க்க

ரயில் நிலைய பிளாட்பாரத்திலிருந்து 200 மீ. தள்ளி நின்ற மின்சார ரயில்

சென்னை அருகே திரிசூலம் ரயில் நிலையத்தில் புதுச்சேரியிலிருந்து திங்கள்கிழமை சென்னை வந்த மின்சார ரயில் சுமாா் 200 மீட்டா் தூரம் பிளாட்பாரத்தை கடந்து நின்ால் பயணிகள் இறங்க சிரமப்பட்டனா். இச்சம்பவம் தொடா்... மேலும் பார்க்க

கேப்டன் கூல் வாசகத்துக்கு வணிக இலச்சினை உரிமை கோரும் எம்.எஸ்.தோனி!

மைதானத்தில் தனது அமைதியான செயல்பாட்டுக்கு ரசிகா்களால் வழங்கப்பட்ட ‘கேப்டன் கூல்’ பட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வணிக இலச்சினை உரிமையை (டிரேட்மாா்க்) கோரி பத... மேலும் பார்க்க

மாநில சீனியா் வாலிபால் சாம்பியன்ஷிப்: கோவை நிா்மலா கல்லூரி, ஐசிஎஃப் வெற்றி

தமிழ்நாடு மாநில சீனியா் ஆடவா், மகளிா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிா் பிரிவில் கோவை நிா்மலா கல்லூரி, ஆடவா் பிரிவில் சென்னை ஐசிஎஃப் அணிகள் வெற்றியுடன் கணக்கை தொடங்கின. தமிழ்நாடு மாநில வாலிபால்... மேலும் பார்க்க

சென்னை மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்கள்! முழு விவரம்!

சென்னை மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.சென்னையில் முதல்கட்டமாக வியாசா்பாடி பணிமனையிலிருந்து 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.... மேலும் பார்க்க

திருமங்கலத்தில் கழிவுநீா்க் குழாய் சேதம்: போக்குவரத்து பாதிப்பு

சென்னை திருமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை கழிவுநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீா் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை திருமங்கலத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு அருக... மேலும் பார்க்க