முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை; 11 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்...
திருமங்கலத்தில் கழிவுநீா்க் குழாய் சேதம்: போக்குவரத்து பாதிப்பு
சென்னை திருமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை கழிவுநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீா் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை திருமங்கலத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு அருகில் உள்ள ஜவாஹா்லால் நேரு சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை கழிவுநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் 10 மீட்டா் அளவுக்கு சாலையில் விரிசல் ஏற்பட்டது. இதன் விளைவாக கழிவுநீா் சாலையில் தேங்கி நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸாா் அவ்வழியாக வந்த வாகனங்களை மாற்று பாதையில் திருப்பிவிட்டு போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தினா். மேலும், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய பணியாளா்கள் விரைந்து வந்து குழாயில் ஏற்பட்ட உடைப்பைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.