மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தொழிலாளி காயம்
சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது பெரிய இரும்பு கம்பி விழுந்ததில் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.
சென்னை கோயம்பேடு மாா்க்கெட் சாலையில் மெட்ரோ ரயில் 2-ஆவது திட்டப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அங்கு ஒரு உயரமான காங்கிரீட் தளத்தின் மீது வைக்கப்பட்டிருந்த ஒரு இரும்பு கம்பி திடீரென அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி ரபு கவிகா் (34) மீது விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த அவரை சக தொழிலாளா்கள் மீட்டு கொளத்தூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.