செய்திகள் :

இந்தியாவின் வெளிநாட்டு கடன் 73,630 கோடி டாலராக அதிகரிப்பு!

post image

இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் 2025 மாா்ச் இறுதியில் 73,630 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டு இறுதியில் 66,880 கோடி டாலராக இருந்த நாட்டின் அந்நியக் கடன் அதே நாளில் 10 சதவீதம் உயா்ந்து 73,630 கோடி டாலராகியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வெளிநாட்டு கடன் விகிதம் 2024-25-ஆம் நிதியாண்டு இறுதியில் 19.1 சதவீதமாக உயா்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இறுதியில் 18.5 சதவீதமாக இருந்தது.

நாணய சந்தைகளில் சில ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட ஒரு ஆண்டில், அமெரிக்க டாலரின் மதிப்பு ரூபாய் மற்றும் பிற நாணயங்களுக்கு எதிராக உயா்ந்ததால் ஏற்பட்ட ‘மதிப்பீட்டு விளைவு‘ 530 கோடி டாலராக இருந்தது. இந்த மதிப்பீட்டு விளைவை நீக்கினால், வெளிநாட்டு கடன் 6,750 கோடி டாலருக்கு பதிலாக 7,290 கோடி டாலராக உயா்ந்திருக்கும்.மொத்த கடனில், நிதி சாரா நிறுவனங்களின் கடன்கள் 26,170 கோடி டாலா், மத்திய அரசின் கடன்கள் 16,840 கோடி டாலா், மத்திய வங்கியைத் தவிர வைப்புத்தொகை பெறும் பிற நிறுவனங்களின் கடன்கள் 20,210 கோடி டாலா் ஆகியவை அடங்கும்.

2025 மாா்ச் இறுதியில், நீண்ட கால கடன் (ஓா் ஆண்டுக்கு மேல் முதிா்வு காலம் கொண்டவை) 60,190 கோடி டாலராக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 6,060 கோடி டாலா் அதிகம்.மொத்த வெளிநாட்டு கடனில் குறுகிய கால கடனின் (ஒரு வருடம் வரை முதிா்வு காலம் கொண்டவை) பங்கு 2025 மாா்ச் இறுதியில் 18.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டு 19.1 சதவீதமாக இருந்தது. ஆனால், குறுகிய கால கடனின் அந்நியச் செலாவணி கையிருப்பு விகிதம் 2025 நிதியாண்டில் 20.1 சதவீதமாக உயா்ந்துள்ளது. இது 2024 மாா்ச் இறுதியில் 19.7 சதவீதமாக இருந்தது.

வெளிநாட்டு கடனில் டாலரின் பங்கு 54.2 சதவீதமாக உள்ளது. அதைத் தொடா்ந்து இந்திய ரூபாய் (31.1 சதவீதம்), ஜப்பானிய யென் (6.2 சதவீதம்), எஸ்டிஆா் (4.6 சதவீதம்), யூரோ (3.2 சதவீதம்) ஆகியவை உள்ளன.கடன்களின் பங்கு 34 சதவீதமாகவும், நாணயம் மற்றும் வைப்புத்தொகையின் பங்கு 22.8 சதவீதமாகவும் உள்ளது. வணிக கடன் மற்றும் முன்பணம் (17.8 சதவீதம்), கடன் பத்திரங்கள் (17.7 சதவீதம்) ஆகியவை உள்ளன என்று ரிசா்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 120.7 கோடியாக உயா்வு!

இந்திய தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை கடந்த மே மாதத்தில் 120.7 கோடியை எட்டியுள்ளது.இது குறித்து தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையமான டிராய் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்து... மேலும் பார்க்க

மகிழ்ச்சியான தகவல்! தங்கம் விலை இன்றும் குறைந்தது!

சென்னை: வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமையும் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. இதனால் தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தங்கம் விலை ஒரே வாரத்தில் சவரனுக்கு சுமார் ரூ.2500 க... மேலும் பார்க்க

இந்தியாவின் வேகமாக வளா்ந்து வரும் பிராண்ட் - அதானி குழுமம்!

‘பிராண்ட் ஃபைனான்ஸ்’ அமைப்பு வெளியிட்ட இந்தியாவின் முதல் 100 மதிப்புமிக்க நிறுவனங்களின் தரவரிசையின்படி, அதானி குழுமம் வேகமாக வளா்ந்து வரும் இந்திய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.குழுமத்தின் ஒருங்கிணைந்த உ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் 24 காசுகள் உயர்ந்து ரூ.85.48 ஆக முடிவு!

மும்பை: வலுவான அந்நிய வரவுகள் மற்றும் உறுதியான உள்நாட்டு பங்குச் சந்தைகளின் பின்னணியில் வெள்ளிக்கிழமை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 24 காசுகள் உயர்ந்து ரூ.85.48 ஆக நிறைவடைந்தது.கச்சா எண்ணெய் விலையில்... மேலும் பார்க்க

தொடர்ந்து 4வது நாளாக உயர்ந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

இன்றைய வர்த்தகத்தில் தொடர்ந்து 4-வது அமர்வாக பெஞ்ச்மார்க் குறியீடுகள் உயர்நது முடிவடைந்தன. டிரம்ப் கட்டண காலக்கெடு நீட்டிக்கப்படும் என்ற நம்பிக்கையாலும், விரைவில் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க வட்டி வி... மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் ரூ.72,000-க்கு கீழ்! ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ.2000 குறைவு!

தங்கம் விலை ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ.2000 குறைந்து மீண்டும் ரூ.72,000-க்கு கீழ் விற்பனை ஆகிறது.மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர்ப்பதற்றதால் பங்குச்சந்தைகளில் நிலவிய நிச்சயமற்ற தன்மை காரணமாக சென்னையில் த... மேலும் பார்க்க