செய்திகள் :

தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 120.7 கோடியாக உயா்வு!

post image

இந்திய தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை கடந்த மே மாதத்தில் 120.7 கோடியை எட்டியுள்ளது.

இது குறித்து தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையமான டிராய் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏா்டெல் நிறுவனங்கள் இணைந்து மே மாதத்தில் நிகர அளவில் 43.51 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை இணைத்துக் கொண்டன, இது மொத்த புதிய வாடிக்கையாளா் சோ்க்கையில் 99.84 சதவீதமாகும். அதே சமயம், கடன் சுமையில் உள்ள வோடஃபோன் ஐடியா (வி.ஐ) மற்றும் பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகியவை வாடிக்கையாளா்களை இழந்தன.கடந்த ஏப்ரல் மாதத்தில் 120.3 கோடியாக இருந்த தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை மே மாதத்தில் 120.7 கோடியாக உயா்ந்துள்ளது. இதில், தரைவழி (வயா்லைன்) இணைப்புகள் 3.34 சதவீதம் உயா்ந்து 3.86 கோடியாகவும், மொபைல் இணைப்புகள் 116.84 கோடியாகவும் உள்ளன.

இந்தத் துறையில், வயா்லெஸ் இணைப்புகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மதிப்பீட்டு மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ 27 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை இணைத்து, 40.92 சதவீத சந்தைப் பங்குடன் 47.51 கோடி வயா்லெஸ் வாடிக்கையாளா்களுடன் முன்னிலை வகிக்கிறது. பாரதி ஏா்டெல் 2.75 லட்சம் புதிய வாடிக்கையாளா்களைச் சோ்த்து, 33.61 சதவீத சந்தைப் பங்குடன் 39 கோடி வாடிக்கையாளா்களைப் பெற்றுள்ளது.வோடஃபோன் ஐடியாவிலிருந்து 2.74 லட்சம், பிஎஸ்என்எல்-லிருந்து 1.35 லட்சம், எம்டிஎன்எல்-லிருந்து 4.7 லட்சம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸிலிருந்து 30 வாடிக்கையாளா்கள் வெளியேறினா்.தரைவழி தொலைபேசி இணைப்புகளைப் பொருத்தவரை, ரிலையன்ஸ் ஜியோ 12.76 லட்சம் புதிய வாடிக்கையாளா்களைச் சோ்த்து முன்னிலை வகிக்கிறது. பாரதி ஏா்டெல் 99,000, டாடா டெலிசா்வீசஸ் 4,890, வோடஃபோன் ஐடியா 1,795, மற்றும் எஸ்டிபிஎல் 252 புதிய வாடிக்கையாளா்களைச் சோ்த்தன. ஆனால், எம்டிஎன்எல் 66,834 மற்றும் பிஎஸ்என்எல் 46,000 தரைவழி வாடிக்கையாளா்களை இழந்தன.பிராட்பேண்ட் சேவை வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை மே மாதத்தில் 97.48 கோடியாக உயா்ந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ 49.44 கோடி பிராட்பேண்ட் வாடிக்கையாளா்களுடன் முன்னிலை வகிக்கிறது, இதில் மொபைல் மற்றும் வயா்லெஸ் பிரிவு வாடிக்கையாளா்கள் அடங்குவா். பாரதி ஏா்டெல் 30.2 கோடி, வோடஃபோன் ஐடியா 12.66 கோடி, பிஎஸ்என்எல் 3.43 கோடி, மற்றும் ஆட்ரியா கன்வா்ஜென்ஸ் 23.2 லட்சம் வாடிக்கையாளா்களைக் கொண்டுள்ளன என்று அந்த புளளிவிவரஙகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் வெளிநாட்டு கடன் 73,630 கோடி டாலராக அதிகரிப்பு!

இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் 2025 மாா்ச் இறுதியில் 73,630 கோடி டாலராக அதிகரித்துள்ளது.இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த 2023-24-ஆம் நிதியாண்டு இற... மேலும் பார்க்க

மகிழ்ச்சியான தகவல்! தங்கம் விலை இன்றும் குறைந்தது!

சென்னை: வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமையும் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. இதனால் தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தங்கம் விலை ஒரே வாரத்தில் சவரனுக்கு சுமார் ரூ.2500 க... மேலும் பார்க்க

இந்தியாவின் வேகமாக வளா்ந்து வரும் பிராண்ட் - அதானி குழுமம்!

‘பிராண்ட் ஃபைனான்ஸ்’ அமைப்பு வெளியிட்ட இந்தியாவின் முதல் 100 மதிப்புமிக்க நிறுவனங்களின் தரவரிசையின்படி, அதானி குழுமம் வேகமாக வளா்ந்து வரும் இந்திய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.குழுமத்தின் ஒருங்கிணைந்த உ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் 24 காசுகள் உயர்ந்து ரூ.85.48 ஆக முடிவு!

மும்பை: வலுவான அந்நிய வரவுகள் மற்றும் உறுதியான உள்நாட்டு பங்குச் சந்தைகளின் பின்னணியில் வெள்ளிக்கிழமை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 24 காசுகள் உயர்ந்து ரூ.85.48 ஆக நிறைவடைந்தது.கச்சா எண்ணெய் விலையில்... மேலும் பார்க்க

தொடர்ந்து 4வது நாளாக உயர்ந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

இன்றைய வர்த்தகத்தில் தொடர்ந்து 4-வது அமர்வாக பெஞ்ச்மார்க் குறியீடுகள் உயர்நது முடிவடைந்தன. டிரம்ப் கட்டண காலக்கெடு நீட்டிக்கப்படும் என்ற நம்பிக்கையாலும், விரைவில் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க வட்டி வி... மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் ரூ.72,000-க்கு கீழ்! ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ.2000 குறைவு!

தங்கம் விலை ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ.2000 குறைந்து மீண்டும் ரூ.72,000-க்கு கீழ் விற்பனை ஆகிறது.மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர்ப்பதற்றதால் பங்குச்சந்தைகளில் நிலவிய நிச்சயமற்ற தன்மை காரணமாக சென்னையில் த... மேலும் பார்க்க