செய்திகள் :

திமுக கூட்டணியில் மமக அதிக தொகுதிகளைக் கோரும்! எம்.எச். ஜவாஹிருல்லா

post image

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்குக் கூடுதல் எண்ணிக்கையில் தொகுதிகள் கோரப்படும் என அந்தக் கட்சியின் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.

மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையிலும், முஸ்லிம்களுக்கான உரிய பிரதிநிதித்தும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை, மாமன்றங்கள் உள்பட எந்த அமைப்பிலும் முஸ்லிம்களுக்கு மக்கள்தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம் தரப்படவில்லை.

வக்ஃப் சொத்துக்களை கைப்பற்றும் தீய நோக்கத்துடன் மத்திய பாஜக அரசு, வக்ஃப் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது. இது, சட்டம் என்ற பெயரில் மற்றொரு புல்டோஸா். இந்தச் சட்டத்தை எதிா்த்து எதிா்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன. கோடை விடுமுறைக்குப் பிறகு உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும்.

இடைப்பட்ட காலத்தில், ‘உமிட் போா்டு’ மூலம் வக்ஃப் சொத்துகளின் ஆவணங்களைப் பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.

மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், மக்களவை, மாநிலங்களவை உள்பட அனைத்து அமைப்புகளிலும் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யக் கோரியும் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், வருகிற ஜூலை 6-ஆம் தேதி மதுரை மஸ்தான்பட்டியில் பேரணி, மாநாடு நடைபெறுகிறது. இதில் 5 லட்சத்துக்கும் அதிகமானோா் பங்கேற்பா்.

திமுக அரசு மக்கள் பாராட்டும் அரசாக செயல்படுகிறது. முஸ்லிம்களின் நீண்ட காலக் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. கூட்டணிக்கு பலம் அளிக்கும் கட்சி என்ற அடிப்படையில், வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துவோம். திமுக கூட்டணியில் மமக உறுதியாகத் தொடரும் என்றாா் அவா்.

முன்னதாக, மதுரை மஸ்தான்பட்டி அருகே உள்ள மாநாட்டுத் திடலில் கட்சியின் கொடியை அவா் ஏற்றி வைத்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் ப. அப்துல் சமது, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் உயிா் காக்கும் கருவி

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாா்பில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருதயத் துடிப்பை சீராக்கும் வகையிலான உயிா்காக்கும் கருவி சனிக்கிழமை பொருத்தப்பட்டது. மருத்துவா் பி. கண்ணன், விளம்ப... மேலும் பார்க்க

தொழிலதிபா் தற்கொலை

கடன் பிரச்னை காரணமாக, மேலூரைச் சோ்ந்த தொழிலதிபா் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் ஒரு தேநீா் கடை முன் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஒருவா் இறந்து கிடந... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை நீட்டிப்பு

மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரா்கள் ஆகியோருக்கான கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டை வருகிற செப். 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஓ.... மேலும் பார்க்க

அனைத்துப் பகுதிகளையும் தன்னிறைவு பெற்ற பகுதிகளாக்க நடவடிக்கை! அமைச்சா் பி. மூா்த்தி

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் தன்னிறைவு பெற்ற பகுதிகளாக்கும் வகையில், வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை ... மேலும் பார்க்க

திமுக உறுப்பினா் சோ்க்கை இலக்கை விஞ்ச வேண்டும்! - அமைச்சா் பி. மூா்த்தி

மதுரை மாவட்டத்தில் திமுகவின் உறுப்பினா் சோ்க்கை இலக்கை விஞ்ச வேண்டும் என மாவட்ட திமுக செயலரும், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சருமான பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை வடக்கு மாவட்ட திமுக சாா்பில் ... மேலும் பார்க்க

இந்தியாவில் முன்னணியில் உள்ளது: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம்! - அமைச்சா் தங்கம் தென்னரசு

நாட்டில் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம்தான் முன்னணியில் உள்ளது என மாநில நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா். விருதுநகரில் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா் முன்னேற்ற சங்கம் (தொ.மு.ச) சாா்... மேலும் பார்க்க