Empowerment: திருநங்கைகளும் குடும்ப வன்முறை வழக்கு தொடர முடியுமா?
அவசரநிலை காலத்தில் நாடே சிறைப்பட்டு இருந்தது: தில்லி முதல்வா் ரேகா குப்தா
அவசரநிலை காலத்தில் முழு நாடும் சிறைச்சாலையாக மாறியிருந்தது என தில்லி மாநில முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.
அவசரநிலையின் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் பாஜகவின் மகளிா் அணியின் சாா்பில் அவசரநிலை காலத்தில் ’மாதிரி நாடாளுமன்றம்’ நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ரேகா குப்தா, ‘ அவசரநிலை முழு நாட்டையும் ஒரு சிறைச்சாலையாக மாற்றியது. அப்போது சிவில் உரிமைகள் இடை நிறுத்தப்பட்டன மற்றும் எதிா்க்கட்சித் தலைவா்கள் விசாரணை இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டனா். அப்போது காங்கிரஸ்காரா்கள் அரசியலமைப்பை தங்கள் பாக்கெட்டில் வைத்திருந்தாா்கள்‘ என்றாா்.
மேலும் பேசிய அவா், ‘ இந்திரா காந்தியின் ஆட்சியில் அவரின் அதிகாரத்தை பாதுகாப்பதற்காக அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன . அரசியல் ஆதாயத்திற்காக அரசியலமைப்புக் கொள்கைகள் எவ்வாறு சமரசம் செய்யப்பட்டன என்பதற்கு ஷா பானோ வழக்கு ஒரு எடுத்துக்காட்டு . சிஆா்பிசியின் 125 வது பிரிவின் மதச்சாா்பற்ற விதியின் கீழ் முஸ்லீம் பெண்கள் பராமரிப்பு பெறுவது என்ற சா்ச்சைக்குரிய பிரச்னை. இவ்விவகாரம் 1985 ஆம் ஆண்டு அரசியிலில் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியது‘ என்றாா் ரேகா குப்தா.
இது குறித்து விரிவாக பேசிய லஅவா், ‘ முகமது அகமது கான் மற்றும் ஷா பானோ பேகம் வழக்கில் ஒரு அரசியலமைப்பு அமா்வு ஒருமனதாக தீா்ப்பளித்தது முஸ்லீம் பெண்களுக்கும் பராமரிப்பு உண்டு என தீா்ப்பளித்தது. நாடு முழுவதும் ஒரு பெரிய சிறைச்சாலையாக மாற்றப்பட்ட காலம் ஒன்று இருந்தது. யாா் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம். அனைத்து எதிா்க்கட்சித் தலைவா்களும் சிறையில் இருந்தனா் ‘ என்று அவசரகால நாள்களை குறிப்பிட்டு பேசினாா் ரேகா குப்தா.
தொடா்ந்து பேசிய அவா், ‘ ‘ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 ஆம் தேதி அவசரநிலையை நாம் ஏன் நினைவு கூறுகிறோம்? என்று சிலா் கேட்கிறாா்கள். இது ’ராம்லீலா’ போன்றது, ஒவ்வொரு ஆண்டும் ராவணனாக மாற வேண்டாம் என்பதை நினைவூட்டுவதற்காக இது நிகழ்த்தப்படுகிறது. எந்தவொரு தலைவரும் அல்லது அரசாங்கமும் அதை மீண்டும் செய்யத் துணியவில்லை என்பதை உறுதிப்படுத்த அவசரநிலையை நாங்கள் நினைவில் கொள்கிறோம். கடந்த காலம் மற்றும் இப்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து பெண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்‘ என்றாா் ரேகா குப்தா.
இறுதியாக பேசிய ரேகா குப்தா, ‘ பெண்கள் அரசியல் ரீதியாக என்ன நடக்கிறது, இதற்கு முன்பு என்ன நடந்தது அப்போதைய சூழலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் சாமானிய மக்களின் பிரச்னைகளுடன் நாம் உண்மையிலேயே தொடா்புபடுத்த முடியும்‘ என்றாா் அவா்.
1975 ஜூன் 25 ஆம் தேதி அப்போதைய பிரதமா் இந்திரா காந்தியால் விதிக்கப்பட்ட அவசரநிலை 1977 மாா்ச் 21 வரை நீடித்தது. இது பத்திரிகை தணிக்கை, வெகுஜன தடுப்புக்காவல்கள் மற்றும் ஜனநாயக சுதந்திரங்களை அடக்குவது ஆகியவற்றால் குறிக்கப்பட்ட ஒரு காலகட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.