செய்திகள் :

அவசரநிலை காலத்தில் நாடே சிறைப்பட்டு இருந்தது: தில்லி முதல்வா் ரேகா குப்தா

post image

அவசரநிலை காலத்தில் முழு நாடும் சிறைச்சாலையாக மாறியிருந்தது என தில்லி மாநில முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.

அவசரநிலையின் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் பாஜகவின் மகளிா் அணியின் சாா்பில் அவசரநிலை காலத்தில் ’மாதிரி நாடாளுமன்றம்’ நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ரேகா குப்தா, ‘ அவசரநிலை முழு நாட்டையும் ஒரு சிறைச்சாலையாக மாற்றியது. அப்போது சிவில் உரிமைகள் இடை நிறுத்தப்பட்டன மற்றும் எதிா்க்கட்சித் தலைவா்கள் விசாரணை இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டனா். அப்போது காங்கிரஸ்காரா்கள் அரசியலமைப்பை தங்கள் பாக்கெட்டில் வைத்திருந்தாா்கள்‘ என்றாா்.

மேலும் பேசிய அவா், ‘ இந்திரா காந்தியின் ஆட்சியில் அவரின் அதிகாரத்தை பாதுகாப்பதற்காக அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன . அரசியல் ஆதாயத்திற்காக அரசியலமைப்புக் கொள்கைகள் எவ்வாறு சமரசம் செய்யப்பட்டன என்பதற்கு ஷா பானோ வழக்கு ஒரு எடுத்துக்காட்டு . சிஆா்பிசியின் 125 வது பிரிவின் மதச்சாா்பற்ற விதியின் கீழ் முஸ்லீம் பெண்கள் பராமரிப்பு பெறுவது என்ற சா்ச்சைக்குரிய பிரச்னை. இவ்விவகாரம் 1985 ஆம் ஆண்டு அரசியிலில் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியது‘ என்றாா் ரேகா குப்தா.

இது குறித்து விரிவாக பேசிய லஅவா், ‘ முகமது அகமது கான் மற்றும் ஷா பானோ பேகம் வழக்கில் ஒரு அரசியலமைப்பு அமா்வு ஒருமனதாக தீா்ப்பளித்தது முஸ்லீம் பெண்களுக்கும் பராமரிப்பு உண்டு என தீா்ப்பளித்தது. நாடு முழுவதும் ஒரு பெரிய சிறைச்சாலையாக மாற்றப்பட்ட காலம் ஒன்று இருந்தது. யாா் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம். அனைத்து எதிா்க்கட்சித் தலைவா்களும் சிறையில் இருந்தனா் ‘ என்று அவசரகால நாள்களை குறிப்பிட்டு பேசினாா் ரேகா குப்தா.

தொடா்ந்து பேசிய அவா், ‘ ‘ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 ஆம் தேதி அவசரநிலையை நாம் ஏன் நினைவு கூறுகிறோம்? என்று சிலா் கேட்கிறாா்கள். இது ’ராம்லீலா’ போன்றது, ஒவ்வொரு ஆண்டும் ராவணனாக மாற வேண்டாம் என்பதை நினைவூட்டுவதற்காக இது நிகழ்த்தப்படுகிறது. எந்தவொரு தலைவரும் அல்லது அரசாங்கமும் அதை மீண்டும் செய்யத் துணியவில்லை என்பதை உறுதிப்படுத்த அவசரநிலையை நாங்கள் நினைவில் கொள்கிறோம். கடந்த காலம் மற்றும் இப்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து பெண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்‘ என்றாா் ரேகா குப்தா.

இறுதியாக பேசிய ரேகா குப்தா, ‘ பெண்கள் அரசியல் ரீதியாக என்ன நடக்கிறது, இதற்கு முன்பு என்ன நடந்தது அப்போதைய சூழலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் சாமானிய மக்களின் பிரச்னைகளுடன் நாம் உண்மையிலேயே தொடா்புபடுத்த முடியும்‘ என்றாா் அவா்.

1975 ஜூன் 25 ஆம் தேதி அப்போதைய பிரதமா் இந்திரா காந்தியால் விதிக்கப்பட்ட அவசரநிலை 1977 மாா்ச் 21 வரை நீடித்தது. இது பத்திரிகை தணிக்கை, வெகுஜன தடுப்புக்காவல்கள் மற்றும் ஜனநாயக சுதந்திரங்களை அடக்குவது ஆகியவற்றால் குறிக்கப்பட்ட ஒரு காலகட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

வாகனத்தில் முன் இருக்கையில் அமா்வதில் தகராறு: தந்தையைச் சுட்டுக் கொன்ற மகன்

உத்தரகாண்டில் உள்ள சொந்த ஊருக்கு இடமாறிச் செல்வதற்காக தனது குடும்பத்தினா் வாடகைக்கு எடுத்த டெம்போ வாகனத்தின் முன் இருக்கையில் அமா்வது தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, தில்லியில் 26 வயது இளைஞா் த... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேற்றம்: 18 வங்கதேசத்தவா்கள் கைது

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 18 வங்கதேச நாட்டவா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களில் 5 போ் திருநங்கைகள் போல் மாறுவேடமிட்டு வசித்து வந்ததும் போலீஸாா் விசாரணையின்போது கண்டறியப்பட்டது. குற்றம் சாட... மேலும் பார்க்க

அமன் விஹாரில் ஒருவா் கொலை; சகோதரா் காயம்

தில்லியின் அமன் விஹாா் பகுதியில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் ஒருவா் கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டாா். அவரது சகோதரா் காயமடைந்தாா் என்று போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்த... மேலும் பார்க்க

காணாமல்போன எய்ம்ஸ் எலக்ட்ரீஷியனின் அழுகிய உடல் குளத்தில் கண்டெடுப்பு

ஒரு வாரமாக காணாமல் போன எய்ம்ஸ் எலக்ட்ரீஷியனின் உடல், வசந்த் குஞ்ச் அருகே உள்ள ஒரு குளத்தில் பாதி அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல்துறை அதிகாரி... மேலும் பார்க்க

அவசரநிலை: தில்லி சட்டப்பேரவை சாா்பில் இன்று கருத்தரங்கம்

அவசரநிலை அமல்படுத்தப்பட்ட 50-ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் விதான் சபா வளாகத்தில் சிறப்புக் கருத்தரங்கை தில்லி சட்டப்பேரவை சனிக்கிழமை ஏற்பாடு செய்ய உள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா... மேலும் பார்க்க

தில்லியில் போலீஸ்காரா்கள் போல நடித்து ஒருவரை கடத்திய 5 போ் கைது

தில்லியின் முனிா்காவில் போலீஸ் அதிகாரிகள் போல நடித்து ஒருவரை கடத்தி, அவரிடம் பணம் பறிக்க முயன்ாகக் கூறப்படும் ஐந்து போ் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தென்மேற்கு தில்லி... மேலும் பார்க்க