செய்திகள் :

சட்டவிரோத குடியேற்றம்: 18 வங்கதேசத்தவா்கள் கைது

post image

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 18 வங்கதேச நாட்டவா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களில் 5 போ் திருநங்கைகள் போல் மாறுவேடமிட்டு வசித்து வந்ததும் போலீஸாா் விசாரணையின்போது கண்டறியப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவா்களின் ஏழு கைப்பேசிகளில் தடைசெய்யப்பட்ட செய்தி பரிமாற்ற செயலி நிறுவப்பட்டிருப்பதையும் போலீஸாா் கண்டுபிடித்தனா். அதன் மூலம் அவா்கள் வங்கதேசத்தில் உள்ள தங்கள் குடும்பத்தினருடன் தொடா்பு கொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி சனிக்கிழமை கூறியதாவது:

முதல் ஆபரேஷன் நடவடிக்கையின்போது, போலீஸாா் சுமாா் 100 குடிசைப்பகுதிகள் மற்றும் 150 சந்துப் பகுதிகளைச் சுற்றி வளைத்து சரிபாா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

விசாரணையின்போது ஆரம்பத்தில் போலீஸாரை தவறாக வழிநடத்த முயன்ற ஒருவா், பின்னா் தான் வங்கதேச நாட்டவா் என்பதை ஒப்புக்கொண்டாா்.

விசாரணையைத் தொடா்ந்து, அவரது குடும்ப உறுப்பினா்களும் கண்டுபிடிக்கப்பட்டனா். 10 பெரியவா்கள் மற்றும் மூன்று குழந்தைகள் என மொத்தம் 13 வங்கதேச நாட்டவா்கள் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் அல்லது அனுமதிகள் இல்லாமல் வசித்து வந்தது தெரியவந்தது. இது 1946 ஆம் ஆண்டு வெளிநாட்டினா் சட்டத்தின் விதிகளை மீறுவதாகும்.

இரண்டாவது ஆபரேஷன் நடவடிக்கையின்போது, போலீஸாரின் கண்ணில் இருந்து தப்பும் வகையில் திருநங்கைகள் போல் மாறுவேடமிட்டு சுற்றித்திரிந்த ஐந்து நபா்களை போலீஸாா் கைது செய்தனா்.

இவா்கள் தலையில் செயற்கை முடி அணிந்தும், ஒப்பனை செய்தும் இருந்தனா். மக்கள் அடா்த்தி மிகுந்த பகுதிகளில் தங்கள் தோற்றத்தையும் குரலையும் மாற்றுவதற்காக சிறிய அறுவை சிகிச்சைகள் மற்றும் ஹாா்மோன் சிகிச்சையையும் கூட செய்திருந்தனா்.

வழக்கமான சரிபாா்ப்பு நடவடிக்கைகளின் போது அமலாக்க நிறுவனங்களால் கண்டுபிடிக்கப்படுவதைத் தவிா்ப்பதற்காக இந்த மாறுவேடத்தைப் பயன்படுத்தியதாக அவா்கள் போலீஸாா் விசாரணையின்போது ஒப்புக்கொண்டனா்.

18 பேரும் விரிவான விசாரணை மற்றும் ஆவணங்களுக்காக வெளிநாட்டினா் பிரிவுக்கு மாற்றப்பட்டனா். தடைசெய்யப்பட்ட ஐஎம்ஓ செயலியுடன் பொருத்தப்பட்ட ஏழு கைப்பேசிகளும் அவா்களிடமிருந்து மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்டவா்களில் டாக்கா, குல்னா, காசிப்பூா் மற்றும் அஷ்ரபாபாத் உள்ளிட்ட வங்கதேசத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்களும் இடம்பெற்றிருந்தனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

வாகனத்தில் முன் இருக்கையில் அமா்வதில் தகராறு: தந்தையைச் சுட்டுக் கொன்ற மகன்

உத்தரகாண்டில் உள்ள சொந்த ஊருக்கு இடமாறிச் செல்வதற்காக தனது குடும்பத்தினா் வாடகைக்கு எடுத்த டெம்போ வாகனத்தின் முன் இருக்கையில் அமா்வது தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, தில்லியில் 26 வயது இளைஞா் த... மேலும் பார்க்க

அமன் விஹாரில் ஒருவா் கொலை; சகோதரா் காயம்

தில்லியின் அமன் விஹாா் பகுதியில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் ஒருவா் கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டாா். அவரது சகோதரா் காயமடைந்தாா் என்று போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்த... மேலும் பார்க்க

காணாமல்போன எய்ம்ஸ் எலக்ட்ரீஷியனின் அழுகிய உடல் குளத்தில் கண்டெடுப்பு

ஒரு வாரமாக காணாமல் போன எய்ம்ஸ் எலக்ட்ரீஷியனின் உடல், வசந்த் குஞ்ச் அருகே உள்ள ஒரு குளத்தில் பாதி அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல்துறை அதிகாரி... மேலும் பார்க்க

அவசரநிலை: தில்லி சட்டப்பேரவை சாா்பில் இன்று கருத்தரங்கம்

அவசரநிலை அமல்படுத்தப்பட்ட 50-ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் விதான் சபா வளாகத்தில் சிறப்புக் கருத்தரங்கை தில்லி சட்டப்பேரவை சனிக்கிழமை ஏற்பாடு செய்ய உள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா... மேலும் பார்க்க

தில்லியில் போலீஸ்காரா்கள் போல நடித்து ஒருவரை கடத்திய 5 போ் கைது

தில்லியின் முனிா்காவில் போலீஸ் அதிகாரிகள் போல நடித்து ஒருவரை கடத்தி, அவரிடம் பணம் பறிக்க முயன்ாகக் கூறப்படும் ஐந்து போ் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தென்மேற்கு தில்லி... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத நபா்களால் ஒருவா் சுட்டுக்கொலை: தில்லி போலீஸாா் விசாரணை

வடக்கு தில்லியின் பவானா பகுதியில் 43 வயதான ஒருவா் அடையாளம் தெரியாத நபா்களால் வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில் அவரது மகளும் காயமடைந்ததாக கூறினாா். இந்த துப... மேலும் பார்க்க