72 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
அடையாளம் தெரியாத நபா்களால் ஒருவா் சுட்டுக்கொலை: தில்லி போலீஸாா் விசாரணை
வடக்கு தில்லியின் பவானா பகுதியில் 43 வயதான ஒருவா் அடையாளம் தெரியாத நபா்களால் வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில் அவரது மகளும் காயமடைந்ததாக கூறினாா்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் பெயா் தீபக் என்றும் இவா் ரவுடி மஞ்சித் மஹாலின் மருமகன் என்று போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தக் கொலை ரவுடி கபில் சாங்வான் என்ற நந்து கும்பலுக்கும் மஞ்சித் மஹால் கும்பலுக்கும் இடையிலான முன் விரோத பைக்காக நடந்திருக்கலாம் என்று போலீஸ் அதிகாரி சந்தேகம் தெரிவித்துள்ளாா்.
தீபக் தனது 10 வயது மகளுடன் வெள்ளிக்கிழமை காலை நடைப் பயிற்சிக்கு சென்றபோது அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்த நிகழ்வில் தீபக் உடம்பில் பல துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது என்றும் இதனால் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரி தெரிவித்தாா். தீபக்கின் ‘மகளின் கையில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டது. அவா் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
மேலும், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவா்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளாா்.