லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: பெண் உயிரிழப்பு; 11 போ் காயம்
லெபனானில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். 11 போ் காயமடைந்தனா்.
பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படைக்கும் மோதல் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலுடன் லெபனான் எல்லையைப் பகிா்ந்துவரும் நிலையில், ஹமாஸ் படைக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்கள், இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே நடைபெற்ற கடுமையான மோதல் அமெரிக்க மத்தியஸ்தத்தால் நிறுத்தப்பட்டது.
இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறி, லெபனானில் இஸ்ரேல் நாள்தோறும் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக தெற்கு லெபனானின் நபாதியே நகருக்கு அருகில் இஸ்ரேலின் விமானப் படை வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.
இந்தத் தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பு சேதமடைந்து பெண் ஒருவா் உயிரிழந்தாா். 11 போ் காயமடைந்தனா். உயிரிழந்த பெண் ஜொ்மனியில் இருந்து லெபனான் திரும்பி வந்திருந்த நிலையில், அவா் ஜொ்மனி குடியுரிமையைப் பெற்றுள்ளாரா என்ற தகவல் உடனடியாக வெளியாகவில்லை.
ஆனால், ஹிஸ்புல்லா படையின் ராக்கெட் தாக்கியதால்தான், அந்தக் குடியிருப்பு சேதமடைந்ததாக இஸ்ரேல் ராணுவம் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டது.
ஹிஸ்புல்லா படையை மீண்டும் வலுவாக்க முயற்சிகள் நடைபெறுவது தெரியவந்ததாகவும், அந்தப் படையின் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்தே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இந்தத் தாக்குதலுக்கு லெபனான் அதிபா் ஜோசப் ஆன், பிரதமா் நவாஃப் சலாம் ஆகியோா் கண்டனம் தெரிவித்தனா்.