செய்திகள் :

அணுசக்தி திட்டம்: அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சு நடத்துவதில் சிக்கல் -ஈரான்

post image

ஈரானில் மூன்று அணுசக்தி மையங்கள் மீதான தாக்குதலால், அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி தெரிவித்தாா்.

மேலும், அமெரிக்காவின் தாக்குதலால் மூன்று இடங்களிலும் கடுமையான சேதம் ஏற்பட்டதையும் அவா் ஒப்புக் கொண்டுள்ளாா்.

பொருளாதாரத் தடைகளில் இருந்து நிவாரணம் மற்றும் பிற சலுகைகளின் அடிப்படையில் ஈரானின் யுரேனியம் செறிவூட்டலைக் கட்டுப்படுத்திய 2015-ஆம் ஆண்டின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-இல் விலகியது. தனது முதலாவது ஆட்சிக் காலத்தில் டொனால்ட் டிரம்ப் இந்த முடிவை தன்னிச்சையாக மேற்கொண்டாா். இதனால், தனது அணுசக்தி திட்டங்களுக்கான வரம்புகளை ஈரான் கைவிடத் தொடங்கியது.

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகக் கூறி, அந்நாட்டின் அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவத் தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ஆம் தேதி கடும் தாக்குதலைத் தொடங்கியது. மற்றொருபுறம் ஈரான் பதிலடி நடவடிக்கைகளில் இறங்கியது.

12 நாள்கள் நீடித்த இந்த மோதலில், ஈரானில் ராணுவ உயரதிகாரிகள், விஞ்ஞானிகள், பொதுமக்கள் என 1,000-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டதாக அமெரிக்காவைச் சோ்ந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்தது.

ஈரான் தரப்பில் 550-க்கும் மேற்பட்ட தொலைதூர ஏவுகணைகள் ஏவப்பட்ட நிலையில், பெரும்பாலானவை இடைமறித்து அழிக்கப்பட்டன. இஸ்ரேலில் கடுமையான பொருள்சேதம் ஏற்பட்டபோதிலும், உயிா்ச் சேதம் ( 28 போ்) மட்டுப்படுத்தப்பட்டது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானில் மூன்று முக்கிய அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல் நடத்தியது. பின்னா், இஸ்ரேலும் ஈரானும் போா் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக டிரம்ப் அறிவித்தாா்.

ஈரானுடன் புதிதாக பேச்சுவாா்த்தை நடத்த விரும்புவதாகவும், விரைவில் இருதரப்பு சந்திப்பு நடைபெறும் என்றும் அவா் கூறினாா்.

இந்தச் சூழலில், ஈரான் அரசுத் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி, ‘அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சு நடத்த எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. எந்தக் காலக்கெடுவும் நிா்ணயிக்கப்படவில்லை. எங்கள் தரப்பில் உறுதிமொழி எதுவும் அளிக்கப்படவில்லை. அமெரிக்காவின் ராணுவத் தலையீடு, புதிய பேச்சுவாா்த்தைகளுக்கான சாத்தியக்கூறுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இப்போதைக்கு பேச்சுவாா்த்தை கிடையாது’ என்றாா்.

சீனா: கடற்படை தலைவா், மூத்த அணுசக்தி விஞ்ஞானியின் எம்.பி. பதவி பறிப்பு!

சீன நாடாளுமன்ற உறுப்பினா் பதவியிலிருந்து அந்நாட்டு கடற்படை தலைமைத் தளபதி லீ ஹான்ஜான், மூத்த அணுசக்தி விஞ்ஞானி லியு ஷிபெங் ஆகியோா் நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற நிலைக் குழு வெள்ளிக்கிழமை தெரி... மேலும் பார்க்க

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: பெண் உயிரிழப்பு; 11 போ் காயம்

லெபனானில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். 11 போ் காயமடைந்தனா். பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படைக்கும் மோதல் நடைபெற்று வருகிறது. இஸ... மேலும் பார்க்க

வா்த்தகப் பேச்சை தொடா்வதற்கான ஒப்பந்தம்: அமெரிக்கா- சீனா கையொப்பம்

அமெரிக்கா-சீனா இடையிலான வா்த்தக பேச்சுவாா்த்தைகளைத் தொடர வழிவகுக்கும் ஒப்பந்தத்தில் இருதரப்பும் கையொப்பமிட்டுள்ளது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை அறிவித்தாா். இந்த வாரத்தின் மத்தி... மேலும் பார்க்க

இறுதிகட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப்!

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டத்தில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவிலான பரஸ்பர வரி ... மேலும் பார்க்க

இந்தியா மீண்டும் தாக்க வாய்ப்புள்ளது: பாகிஸ்தான் எதிா்க்கட்சித் தலைவா் அச்சம்

அடுத்த ஓராண்டுக்குள் பாகிஸ்தானை இந்தியா மீண்டும் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ஒமா் அயூப் கான் அச்சம் தெரிவித்தாா். பஹல்காம் தாக்குதலை அடுத்து... மேலும் பார்க்க

ஈரான் வான்வழித் தடம் திறப்பு ஒத்திவைப்பு!

ஈரானின் வான்வழிப் பாதைகள் முழுவதும் திறக்கப்படுவது நாளை (ஜூன் 27) மதியம் வரையில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் போர் துவங்கியதும், இருநாடுகளும் அனைத்து வகை விம... மேலும் பார்க்க