செய்திகள் :

இறுதிகட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப்!

post image

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டத்தில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவிலான பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் டிரம்ப் அறிவித்தார். இதையடுத்து, இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா அதிகரித்தது.

தொடர்ந்து, அமெரிக்காவுக்கு பதிலடி தரும் விதமாக சீனாவும் வரியை அதிகரித்தது.

இதனிடையே, பல்வேறு நாடுகள் அமெரிக்காவுடன் பரஸ்பர வரி விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைக்கு வந்ததைத் தொடர்ந்து, சீனாவைத் தவிர பிற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரியை 75 நாள்களுக்கு டிரம்ப் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

இந்த நிலையில், சீனாவும் அமெரிக்காவும் நடத்திய பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.

இந்தியாவுடன் ஒப்பந்தம்

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள இருப்பது குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது:

”இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்கான முக்கியமான ஒப்பந்தத்தை எட்டப் போகிறோம் என்று நினைக்கிறேன். தற்போது அங்கு சென்று வர்த்தகம் செய்ய முடியாத அளவுக்கான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதைப்பற்றி யோசிக்கக்கூட முடியாது. முழுமையான வர்த்தகத் தடையை நீக்க நாங்கள் முயற்சித்து வருகின்றோம். அது நடக்குமா எனத் தெரியவில்லை, ஆனால், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்படும்.

சீனாவுடன் தற்போது வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளோம். அடுத்த ஒன்றரை வாரத்தில் அனைத்து நாடுகளுக்கு கடிதம் மூலம் வரிவிதிப்பை அறிவிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

பரஸ்பர வரிவிதிப்பு இடை நிறுத்தமானது வருகின்ற ஜூலை 9 ஆம் தேதிக்குள் முடிவடையவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோதலை நிறுத்தினேன்

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற மோதலை வணிகத்தை முன்வைத்து நிறுத்தியதாக மீண்டும் வெள்ளிக்கிழமை டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந் மோதலை தான் நிறுத்தியதாகக் கூறவேண்டாம் என அதிபர் டிரம்ப்பிடம், பிரதமர் நரேந்திர மோடி கறாராகக் கேட்டுக்கொண்ட பிறகு, இரண்டாவது முறையாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

US President Donald Trump said on Friday that a trade deal with India is in the final stages.

இதையும் படிக்க : புரி ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: பலர் காயம்

சீனா: கடற்படை தலைவா், மூத்த அணுசக்தி விஞ்ஞானியின் எம்.பி. பதவி பறிப்பு!

சீன நாடாளுமன்ற உறுப்பினா் பதவியிலிருந்து அந்நாட்டு கடற்படை தலைமைத் தளபதி லீ ஹான்ஜான், மூத்த அணுசக்தி விஞ்ஞானி லியு ஷிபெங் ஆகியோா் நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற நிலைக் குழு வெள்ளிக்கிழமை தெரி... மேலும் பார்க்க

அணுசக்தி திட்டம்: அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சு நடத்துவதில் சிக்கல் -ஈரான்

ஈரானில் மூன்று அணுசக்தி மையங்கள் மீதான தாக்குதலால், அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி த... மேலும் பார்க்க

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: பெண் உயிரிழப்பு; 11 போ் காயம்

லெபனானில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். 11 போ் காயமடைந்தனா். பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படைக்கும் மோதல் நடைபெற்று வருகிறது. இஸ... மேலும் பார்க்க

வா்த்தகப் பேச்சை தொடா்வதற்கான ஒப்பந்தம்: அமெரிக்கா- சீனா கையொப்பம்

அமெரிக்கா-சீனா இடையிலான வா்த்தக பேச்சுவாா்த்தைகளைத் தொடர வழிவகுக்கும் ஒப்பந்தத்தில் இருதரப்பும் கையொப்பமிட்டுள்ளது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை அறிவித்தாா். இந்த வாரத்தின் மத்தி... மேலும் பார்க்க

இந்தியா மீண்டும் தாக்க வாய்ப்புள்ளது: பாகிஸ்தான் எதிா்க்கட்சித் தலைவா் அச்சம்

அடுத்த ஓராண்டுக்குள் பாகிஸ்தானை இந்தியா மீண்டும் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ஒமா் அயூப் கான் அச்சம் தெரிவித்தாா். பஹல்காம் தாக்குதலை அடுத்து... மேலும் பார்க்க

ஈரான் வான்வழித் தடம் திறப்பு ஒத்திவைப்பு!

ஈரானின் வான்வழிப் பாதைகள் முழுவதும் திறக்கப்படுவது நாளை (ஜூன் 27) மதியம் வரையில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் போர் துவங்கியதும், இருநாடுகளும் அனைத்து வகை விம... மேலும் பார்க்க