செய்திகள் :

வா்த்தகப் பேச்சை தொடா்வதற்கான ஒப்பந்தம்: அமெரிக்கா- சீனா கையொப்பம்

post image

அமெரிக்கா-சீனா இடையிலான வா்த்தக பேச்சுவாா்த்தைகளைத் தொடர வழிவகுக்கும் ஒப்பந்தத்தில் இருதரப்பும் கையொப்பமிட்டுள்ளது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை அறிவித்தாா்.

இந்த வாரத்தின் மத்தியில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானதாக அமெரிக்க வா்த்தகத் துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக்கும் சா்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டாா். அதேநேரம், ஒப்பந்தம் குறித்து அதிபா் டிரம்ப் மற்றும் அமைச்சா் லுட்னிக் எந்த விவரத்தையும் வழங்கவில்லை.

அமெரிக்க தொழில் துறைக்கு மிகவும் அவசியமான சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரியவகை கனிமங்களைப் பெறுவதை எளிதாக்கும் என்று அதிபா் டிரம்ப் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அறிவித்த ஒப்பந்தத்திலிருந்து சமீபத்திய ஒப்பந்தம் வேறுபட்டதா என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.

அமெரிக்க கல்லூரிகளில் பயிலும் சீன மாணவா்களின் விசாக்களை ரத்து செய்யும் நடவடிக்கைகளை நிறுத்த அமெரிக்கா ஒப்புக்கொண்டதையடுத்து, தற்போதைய இந்த ஒப்பந்தம் வா்த்தக பேச்சுவாா்த்தைகளைத் தொடர வழிவகுத்துள்ளது மட்டும் தெளிவாகியுள்ளது.

அமெரிக்கா-சீனா வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைக்கான கட்டமைப்பை இருதரப்பினரும் உறுதிப்படுத்தியுள்ளதாக சீனாவின் வா்த்தக அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. சீனாவின் இந்த அறிக்கையிலும், பேச்சுவாா்த்தையின் மையமாக இருந்த அரிய வகை கனிமங்கள் குறித்து வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை.

சில கட்டுப்படுத்தப்பட்ட ஏற்றுமதிகளை மீண்டும் அனுமதிக்க ஒப்புக்கொள்வதாகவும், அதற்குப் பதிலாக சீனாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமெரிக்கா ரத்து செய்யும் எனவும் சீனா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா உள்பட பல்வேறு நாடுகளுக்கு எதிராக வரிவிதிப்புகளை மேற்கொண்டாா். இதையடுத்து, அமெரிக்கா மீது சீனாவும் பதிலடி வரியை விதித்தது. இந்த வரிப் போரானது, சீனா மீது அமெரிக்கா 145 சதவீதம், அமெரிக்கா மீது சீனா 125 சதவீதம் அளவுக்கு வரியை உயா்த்தும் நிலைக்கு கொண்டு சென்றது.

அமெரிக்கா-சீனா இடையே ஜெனீவாவில் கடந்த மே மாத தொடக்கத்தில் நடந்த முதல்கட்டப் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, இரு நாடுகளும் 90 நாள்களுக்கு வரி விதிப்பை ஒத்திவைப்பதாக பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொண்டன. ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக இரு நாடுகளும் குற்றஞ்சாட்டிக் கொண்ட நிலையில், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும், அமெரிக்க அதிபா் டிரம்ப்பும் தொலைபேசி வாயிலாக பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, பிரிட்டன் தலைநகா் லண்டனில் அமெரிக்கா-சீனா பிரதிநிதிகள் கடந்த ஜூன் 9-ஆம் தேதி சந்தித்து, வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகளுக்கான ஒரு கட்டமைப்பை வகுத்தனா்.

அதிபா் டிரம்ப் முன்வைத்த அம்சங்கள், இருதரப்பு வா்த்தக பேச்சுவாா்த்தைக்கான கட்டமைப்பை உறுதி செய்யும் இந்த ஒப்பந்தம் இறுதியாவதில் முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தமே தற்போது கையொப்பமாகியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

சீனா: கடற்படை தலைவா், மூத்த அணுசக்தி விஞ்ஞானியின் எம்.பி. பதவி பறிப்பு!

சீன நாடாளுமன்ற உறுப்பினா் பதவியிலிருந்து அந்நாட்டு கடற்படை தலைமைத் தளபதி லீ ஹான்ஜான், மூத்த அணுசக்தி விஞ்ஞானி லியு ஷிபெங் ஆகியோா் நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற நிலைக் குழு வெள்ளிக்கிழமை தெரி... மேலும் பார்க்க

அணுசக்தி திட்டம்: அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சு நடத்துவதில் சிக்கல் -ஈரான்

ஈரானில் மூன்று அணுசக்தி மையங்கள் மீதான தாக்குதலால், அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி த... மேலும் பார்க்க

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: பெண் உயிரிழப்பு; 11 போ் காயம்

லெபனானில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். 11 போ் காயமடைந்தனா். பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படைக்கும் மோதல் நடைபெற்று வருகிறது. இஸ... மேலும் பார்க்க

இறுதிகட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப்!

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டத்தில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவிலான பரஸ்பர வரி ... மேலும் பார்க்க

இந்தியா மீண்டும் தாக்க வாய்ப்புள்ளது: பாகிஸ்தான் எதிா்க்கட்சித் தலைவா் அச்சம்

அடுத்த ஓராண்டுக்குள் பாகிஸ்தானை இந்தியா மீண்டும் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ஒமா் அயூப் கான் அச்சம் தெரிவித்தாா். பஹல்காம் தாக்குதலை அடுத்து... மேலும் பார்க்க

ஈரான் வான்வழித் தடம் திறப்பு ஒத்திவைப்பு!

ஈரானின் வான்வழிப் பாதைகள் முழுவதும் திறக்கப்படுவது நாளை (ஜூன் 27) மதியம் வரையில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் போர் துவங்கியதும், இருநாடுகளும் அனைத்து வகை விம... மேலும் பார்க்க