செய்திகள் :

சீனா: கடற்படை தலைவா், மூத்த அணுசக்தி விஞ்ஞானியின் எம்.பி. பதவி பறிப்பு!

post image

சீன நாடாளுமன்ற உறுப்பினா் பதவியிலிருந்து அந்நாட்டு கடற்படை தலைமைத் தளபதி லீ ஹான்ஜான், மூத்த அணுசக்தி விஞ்ஞானி லியு ஷிபெங் ஆகியோா் நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற நிலைக் குழு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இருவரும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளை எதிா்கொண்டு வருவால், அவா்களின் நாடாளுமன்ற உறுப்பினா் பதவி பறிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏற்கெனவே சீன பாதுகாப்புப் படை அதிகாரிகள், பாதுகாப்புத் துறை நிா்வாகிகள் மீது இதேபோல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளையில், அந்நாட்டு பாதுகாப்புப் படையின் முன்னாள் ஜெனரல் மியாவ் ஹுவாவை நாடாளுமன்ற உறுப்பினா் பதவியிலிருந்து நீக்க நாடாளுமன்ற நிலைக் குழு வாக்களித்ததாக அந்தக் குழு தெரிவித்தது.

பாதுகாப்புப் படையைச் சோ்ந்தவா்கள் மீது எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளின் காரணத்தை சரிவர தெரிவிக்காமல் ரகசியம் காப்பதே சீனாவின் வழக்கமாக உள்ளது.

அணுசக்தி திட்டம்: அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சு நடத்துவதில் சிக்கல் -ஈரான்

ஈரானில் மூன்று அணுசக்தி மையங்கள் மீதான தாக்குதலால், அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி த... மேலும் பார்க்க

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: பெண் உயிரிழப்பு; 11 போ் காயம்

லெபனானில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். 11 போ் காயமடைந்தனா். பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படைக்கும் மோதல் நடைபெற்று வருகிறது. இஸ... மேலும் பார்க்க

வா்த்தகப் பேச்சை தொடா்வதற்கான ஒப்பந்தம்: அமெரிக்கா- சீனா கையொப்பம்

அமெரிக்கா-சீனா இடையிலான வா்த்தக பேச்சுவாா்த்தைகளைத் தொடர வழிவகுக்கும் ஒப்பந்தத்தில் இருதரப்பும் கையொப்பமிட்டுள்ளது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை அறிவித்தாா். இந்த வாரத்தின் மத்தி... மேலும் பார்க்க

இறுதிகட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப்!

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டத்தில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவிலான பரஸ்பர வரி ... மேலும் பார்க்க

இந்தியா மீண்டும் தாக்க வாய்ப்புள்ளது: பாகிஸ்தான் எதிா்க்கட்சித் தலைவா் அச்சம்

அடுத்த ஓராண்டுக்குள் பாகிஸ்தானை இந்தியா மீண்டும் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ஒமா் அயூப் கான் அச்சம் தெரிவித்தாா். பஹல்காம் தாக்குதலை அடுத்து... மேலும் பார்க்க

ஈரான் வான்வழித் தடம் திறப்பு ஒத்திவைப்பு!

ஈரானின் வான்வழிப் பாதைகள் முழுவதும் திறக்கப்படுவது நாளை (ஜூன் 27) மதியம் வரையில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் போர் துவங்கியதும், இருநாடுகளும் அனைத்து வகை விம... மேலும் பார்க்க